Tuesday, December 29, 2009

2009 கனவு தொழிற்சாலையின் சிறந்த பத்து பிளஸ் ஒன்


இந்த ஆண்டில் (2009) திரை கண்டதில், (நான் பார்த்ததில்) என்னை கவர்ந்த சில தமிழ் படங்கள் உங்கள் பார்வைக்கு.

கதைதான் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் நாயகன் என்று மற்றுமொரு முறை நிருபித்த படம்.
சின்ன பசங்களை வைத்து
பெரியவர்களுக்கு சேதி சொன்ன படம், இதன் இயல்பான கதையோட்டம் நம்மை ரசிக்க செய்கிறது.
இயக்குனர்:பாண்டிராஜ் , திரை: பசங்க


கதையினை நாயகனைக்கொண்டு எடுக்கப்பட்ட மற்றொரு படம்.
"சக் தே இந்தியா" போல் விளையாட்டை மையமாக வைத்து தமிழில் அபூர்வமாக வந்த படம்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான "கபடியை" அனேகப்பேர் மறந்து விட்ட நிலையில் இந்த விளையாட்டை மையமாக வைத்து, இதனுடன் ஒரு காதலையும் கலந்து சுவாரசியமாக எடுக்கப்பட்ட படம்.
இயக்குனர்:சுசிந்திரன், திரை:வெண்ணிலா கபடி குழு


பொதுவாக பேய்படம் என்றாலே விகரமான உருவங்களும், அகோர கட்சிகளுக்கும் பஞ்சம் இல்லாது இருக்கும். ஆனால் இவை எதுவும் இல்லாமல் நம்மை மிரட்டிய படங்கள் என இந்த இரண்டு படங்களையும் சொல்லலாம். (படம் பார்த்த பின் இரண்டு நாட்கள் தண்ணீரை
பார்த்தாலே ஈரம் படம்தான் நினைவுக்கு வந்தது.)
இயக்குனர்கள்:விக்ரம்குமார், அறிவழகன்.
திரைகள் :யாவரும் நலம், ஈரம்



காட்டிற்குள்ளேயே முழுபடமும் எடுக்கப்பட்டது
என்பது படம் முடிந்த பின்னர்தான் உறைத்தது. அந்த அளவுக்கு அலுப்பு தட்டாமல் எடுக்கப்பட்ட படம். போகிற போக்கில் அதிகார வர்க்கத்தில் உள்ள ஒரு சிலர் செய்யும் அடாவடிகளையும் தோல் உரித்து காட்டிய படம்.
ஜெயம் ரவிக்கு நல்ல பெயர் கொடுத்த படம்.
இயக்குனர்:s.p.ஜனநாதன்,
திரை:பேராண்மை


வழக்கமான மசாலா கதைதான், ஆனால்
ஆரம்பம் முதல் கடைசி வரை நம்மை கட்டி போடும் விறுவிறுப்பான திரைக்கதை. சூர்யா அனாசயமாக புகுந்து விளைடி இருப்பார்.
இயக்குனர்:k.v.ஆனந்த், திரை:அயன்


நாம் அன்றாடம் சாலையோரம் பார்க்கும் மக்களை பற்றிய படம் இது. இந்த படம் பார்த்த பின்னர்தான் தெரிகிறது, இவர்களை வைத்து தொழில் செய்யும் ஆட்களும் இருக்கிறார்கள் என்று. இப்பொழுதெல்லாம் இவர்களை பார்த்தாலே நம்மை அறியாமல் இவர்கள் மீது ஒரு பச்சாதாபம் எழுகிறது. இதில், பூஜாவுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு, அவரும் நன்றாக பயன் படுத்தி இருந்தார்.
இயக்குனர்: பாலா,
திரை:நான் கடவுள்



நகைச்சுவையும், சிறிதளவு காதல் மற்றும் கொஞ்சூண்டு துப்பு துலக்கும் கட்சிகளும் கலந்து ரசிக்கும் படியாக வந்த படம்
இது.
இயக்குனர்:நந்தினி,
திரை:திரு திரு துறு துறு


சில நாவல்களை படித்த போது நாம் அடைந்த களிப்பினை அது படமாக
உருமாறும்போது தருவதில்லை. அந்த வரிசையில் இந்த படமும் இடம் பிடித்து விட்டது வேதனையான
விஷயம். ஒரே ஆறுதல் கிட்டியின் இயல்பான நடிப்பும் மனதை மயக்கும் பாடல்களும்தான்.
இயக்குனர்:காந்தி கிருஷ்ணா,
திரை:ஆனந்த தாண்டவம்


நண்பனின், நண்பனும் நம் நண்பனே என்ற கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். நண்பர்கள் எடுத்த ரிஸ்க் எல்லாம் எப்படி விழலுக்கு இழைத்த நீராகிறது என்பதனை காட்டி இருந்தார்கள். சசியின் இயல்பான நடிப்பும்
நன்று.
இயக்குனர்:சமுத்திரகனி,
திரை: நாடோடிகள்


படம் முழுக்க ஒரே காஸ்ட்யும், ஒரே லோகேசன், ஹீரோயின் கிடையாது. விறுவிறுப்பான திரைக்கதை, கமல் & மோகன்லாலின்
அலட்டல் அற்ற நடிப்பு. இவர்களுக்கு ஈடான இரு போலிஸ் கேரக்டர்ஸ் என அமர்க்கள படுத்திய திரை இது. பாடல்கள் இல்லாதது இதற்கு வலு.
இயக்குனர்:சக்ரிடோலேடி, திரை:உன்னைப்போல் ஒருவன்





அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
நன்றிகள் பல.

Monday, December 28, 2009

த்ரீ ரோசெஸ்

என் சரித்திரத்தில்(!!) இது இரண்டாவது கவிதை
முயற்சி. எல்லோரும் உங்க பதிவுகள்ள கவிதையா எழுதி எனக்கு உள்ள தூங்கிகிட்டு இருந்த கவிங்கன எழுப்பி உட்டீங்க.
(என்ன கொடும சார் இது)
எனக்கு கவிதைக்கான இலக்கணமோ, இலக்கியமோ தெரியாது. ஆனா, கவிதைய ரசிக்க தெரியும். என்னால முடிஞ்ச அளவு முயற்சி செய்து இருக்கேன், படிச்சு பார்த்துட்டு ரிசல்ட் சொல்லுங்க.








முரண்

உயர் சாதி செல்லப்பிரானிக்கு
உயர் ரக உணவு வைத்து விட்டு
மீந்ததை சாப்பிட்டாள்
செல்வந்தர் வீட்டு பணிப்பெண்.


உபதேசம்

குழந்தைதொழிலாளர்கள்
இல்லாத நிலை வேண்டும்
மேடையிலே முழங்கி விட்டு வந்த
தலைவரின் களைப்பு தீர
உடம்பு பிடித்து கொண்டிருந்தது
அவர் வீட்டு
வேலைக்கார சிறு பிள்ளை.

தீண்டாமை

தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்
குழந்தை மனனம் செய்து கொண்டிருந்தது
இரட்டை டம்ளர் கொண்ட
பள்ளயில்.




அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
நன்றிகள் பல.

Wednesday, December 23, 2009

சேட்டைக்காரன்


முன் குறிப்பு:இது வெறும் கற்பனை மட்டுமே, நகைச்சுவை மட்டுமே இதன் நோக்கம், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை.

இடம்:சைவகொத்துபரோட்டா ஸ்டால், கற்பனையூர்.

நபர்கள்:ஹீரோ, பி.பி.(பிலிம் பித்துக்குளி), அப்பாவி அங்கு மற்றும் இயக்குனர்கள் இவர்களுடன் சிறப்பு தோற்றம்
அனுபவம் வாய்ந்த இயக்குனர் ஒருவர்.

பி.பி.(பிலிம் பித்துக்குளி):வாங்க, வாங்க ஹீரோ சார், இப்ப ஊரெல்லாம் பத்திரிக்கையில் இருந்து, வலைபதிவு வர உங்க
படத்த பத்தின பேச்சுதான் போங்க,

ஏய் அங்கு, சாருக்கு சூடா "கொத்துபரோட்டா" ஒன்னு போடுப்பா...

ஹீரோ: அட நீ வேற, அதான் ஏற்கெனவே, நம்ம படத்த எல்லோரும்
கொத்து, கொத்துன்னு கொத்துறாங்கலே.

பி.பி: நான் சொன்னது சாப்பிடற "கொத்துபரோட்டா" பாஸ் .

ஹீரோ:(மனதிற்குள்) நம்மள இந்த வாரு வாருராங்களே. நம்மளோட அடுத்த படம், சும்மா பட்டி தொட்டியெல்லாம் அதிரனும்.

யோவ் பி.பி, அடுத்த ப்ராஜெக்ட் பத்தின டிஸ்கசனுக்கு சில டிரக்டர்ஸ்
வருவாங்க, ஒவோருத்தாரா அனுப்பி வைங்க.

இப்பலாம் கெட்அப் சேன்ஜ் பண்ணுற டிரென்ட்கரதால, கெட்அப் சேன்ஜ் பண்ணி நடிச்சும் எடுபடலயே, பி.பி....

அப்பாவி அங்கு:பாஸ், நீங்க எப்ப கெட்அப் மாத்தி நடிச்சீங்க!!!

ஹீரோ:அதான், அந்த "பாட்டு சீன்ல"

பி.பி:(மனதிற்குள் சிரித்துக்கொண்டே, குழந்தைங்க சாப்பிடாம அடம் பிடிச்சா, பூச்சாண்டி கிட்ட பிடுச்சி கொடுதிருவேன்னு நிறய அம்மாக்கள் இப்ப "அந்த பாட்டைத்தான்" காண்பிக்கிறதா ஊருக்குள்ள டாக்.)

பவ்யமாக, பாஸ் நம்ம இயக்குனர்கள் எல்லாம் வந்து இருக்காங்க.

ஹீரோ:சரி, சரி, ஒவோருத்தரா அனுப்பி வைங்க.

இயக்குனர் 1: வணக்கம் சார், நம்ம கிட்ட "அருமையான ஸ்கிரிப்ட்" ஒன்னு இருக்கு, இந்த ப்ராஜெக்ட் மட்டும் பண்ணுங்க, அப்புறம் எங்கயோ போயிருவீங்க.

ஹீரோ:முதல்ல கதைய சொல்லுங்க சார்.

இயக்1: இப்ப நான் சொல்லப்போற "ஹீரோ என்ட்ரி சீன்" இது
வரை தமிழ், ஏன் உலக சினிமாவுல கூட யாரும் வைக்காத சீன்,

ஒபெனிங் சீன்ல ஒரு கள்ளிகாட்ட காண்பிக்கிறோம், ஒரு எண்பது வயசு தாத்தா சுள்ளி பொறக்கிகிட்டு இருக்கார், அப்ப வில்லன் கோஷ்டி அவர்கிட்ட, பீடி பத்த வக்க நெருப்பு கேட்குது, அவர்கிட்ட நெருப்புப்பெட்டி இல்லாது போகவே, அவர அவங்க திட்ட ஆரம்பிக்க,

பெரியவர் பயத்தில், மேல இருந்து ஒருத்தன் இது எல்லாம் பார்த்துகிட்டு இருக்கான்டா, உங்களை "வேட்டையாட" அவன் வருவாண்டா இன்னு சொல்ல,

வில்லன் கோஷ்டி, கேனத்தனமாக சிரித்துக்கொண்டே மேலே பார்த்து,
பெர்சு, மேலே வானம் இருக்கு, கிழே சுள்ளிக்காடு இருக்கு, இங்க யாரு வரபோரா அப்படின்னு சொல்லும்போதே,

"அசுர வேகத்துல" நீங்க மேல இருந்து குதிச்சு அவங்கள துவம்சம் பண்ணுறீங்க.. (ஹீரோ இடை மறித்து...)

லாஜிக் இடிக்குதே, பொட்டக்காட்டுல, நான் எங்க இருந்து
குதிக்க முடியும்,

இயக்:இப்படிதான் சார், ஆடியன்சும் குழம்புறாங்க, பைட் சீன் முடிஞ்ச அப்புறம் அப்படியே, நீங்க வந்த வழிய காண்பிக்கிறோம்,

காமிராவ, அப்படியே மேலே, மேலே ஜூம் செஞ்சா,

I.S.S (International Space Station) உள்ள நீங்க இருக்கீங்க, அந்த பெர்சு போட்ட கூச்சல் சத்தம் கேட்டு அங்க இருந்து குதிச்சு வரீங்க.

பி.பி: (மெதுவாக ஹீரோ காதுக்குள்) கொஞ்ச நஞ்சம் இருக்குற உங்க இமேஜ, டேமேஜ் பண்ண பாக்குறாரு, இந்த படம் வேண்டாம்.

ஹீரோ:சார் நான் எதிர் பார்க்குறது இது இல்ல, நாம அடுத்த ப்ராஜெக்ட்ல ஒன்னு சேருவோம், ப்ளீஸ்....

பி.பி:பாட்டு எழுதற கவிகளுக்கும் உங்க மேல காண்டு பாஸு, பாட்டையும் நல்லா அலசி ஆராஞ்சு செலக்ட் பண்ணுங்க.

ஹீரோ:எத வச்சு சொல்ற?

பி.பி:பின்ன என்ன பாஸ், பாட்டுக்கு நடுவால, "சேட்டைக்காரன்
வரத பார்த்து குல நடுங்குது, குல நடுங்குது"ன்னு எழுதலாமா?

அதோட பின் விளைவுதான், எல்லோரும் நம்ம படத்தோட போஸ்டர் பார்த்தாலே "குல நடுங்கி தெறிச்சு ஓடுறாங்க."

ஹீரோ:இது வேலைக்கு ஆவாது, பேசாம அந்த "ஊர்" டிரக்டர்ஐ கூப்பிடுங்க. "ஊர்" டிரக்டர் என்டர்:பாசு, உங்க "மார்க்கெட்,பஸ், ரயில்வே ஸ்டேஷன்" எல்லாம் தூக்கி நிறுத்தற மாதிரி நம்ம கிட்ட ஒரு கதை இருக்கு கேளுங்க...

இது ஒரு ஹை டெக் கதை அப்படியே மொத சீன ஓபன் பண்ணுறேன் கேளுங்க...

ஒரு நெட் சென்டர்ல எல்லோரும் ஆன் லைன்ல சினிமா பார்க்குறாங்க, அப்ப ஒருத்தர் என்ட்ரி ஆகி, கண்ணா எல்லோரும் திரை அரங்குல போய் படம் பாருங்கன்னு சொல்ல, யாரும் அவர சட்ட செய்யாம இருக்காங்க.

கோபத்துல நம்ம ஆளு, கத்திரிய எடுத்து நெட் கணக்சென வெட்டி உட்டுட்டு ஒரு பன்ச் வசனம் பேசுறாரு,

"நெட்டுக்குள்ள நீங்க பிஷ்வில் விளையாடுங்க, ஆனா, இந்த புறாகிட்ட விளையாடதீங்க"

ஹீரோ:பைன், என்னோட ஒபெனிங் சீன் நல்லா இருக்கு.

"ஊர்" டிரக்டர்:பாஸ் இந்த ஒபெனிங் சீன்ல வரது நீங்க இல்ல, நான்.

பி.பி:இப்படி எல்லா படத்துலயும் பில்ட் அப் போட்டே இவர் ஹீரோ ஆகலாம்னு பாக்குறாரு, கழட்டி உட்ருங்க பாஸ்.

ஹீரோ:எனக்கு மூட் சரி இல்ல, இன்னோர் நாளைக்கு டிஸ்கஸ் பண்ணலாம், நன்றி.

ஸ்பெஷல் கெஸ்ட் என்டர்,

தம்பி, என் கிட்ட கத இருக்கு, முதல்ல டைட்டில் கேளு,
"பட்டம் ஒரு இருட்டு"

கதைப்படி, நீ ஒரு வக்கீலுக்கு படிச்ச பட்டதாரி, ஆனா நாட்டுல நடக்குற கொடுமைகள் பார்க்க சகிக்காம, பட்டத்த தூக்கி எறிஞ்சிட்டு சட்டத்த கையில் எடுத்துகிட்டு.....

நில்லு... நில்லு...எங்க ஓடுற....தம்பி....

ஹீரோ, பி.பி, & அப்பாவி அங்கு (கோரசாக)

ரெடி, ஜூட், எஸ்கேப்........

பின் குறிப்பு:முன் குறிப்ப, மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

டிஸ்கி:இத படிச்சதால, உங்களுக்கு கொஞ்சூண்டாவது சிரிப்பு வந்துச்சா, இல்லையான்னு சொல்லிட்டு போங்க.

Sunday, December 20, 2009

நீங்களும் கடவுள்தான்

தானத்தில் சிறந்த ஒன்று "இரத்த தானம்." நாம் உயிருடன்
இருக்கும் பொழுதே கொடுக்க முடிவது, மேலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கொடுக்க முடிவது இதன் சிறப்பு.

நம்மில் பலருக்கு இந்த பக்கம் போகவே பயமாக இருக்கும் (என்னையும் சேர்த்துதான்), சில சந்தேககங்களும் இருக்கும், அதை
பற்றி, நான் படித்து தெரிந்து கொண்டதை உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்.

யார் எல்லாம் இரத்த தானம் கொடுக்க முடியும்?

குறைந்த பட்ச வயது 17 ஆவது இருக்க வேண்டும்

உங்கள் எடை குறைந்தது 49.90kg-யாவது (அதாவது 50-kg) இருக்க வேண்டும். (இவை அடிப்படை தகுதிகள் மட்டுமே)

யார் எல்லாம் இரத்த தானம் கொடுக்க முடியாது?

ஹெபடைடிஸ், எய்ட்ஸ், கான்செர், இருதய நோய் உள்ளோர், சமீபமாக
அறுவை சிகிச்சை செய்து கொண்டோர் கொடுக்க முடியாது.

உடல் நிலை சரி இல்லாதோர், சளி, பல் வலி, உடையோர், கர்ப்பிணிகள், புதிதாக பிரசவித்தவ தாய்மார்கள் கொடுக்க முடியாது

நாம் சென்றவுடன் இரத்தம் எடுத்து விட மாட்டார்கள், அதற்கு
முன் சில பரிசோதனைகள் இருக்கின்றன

நம் இரத்தத்தில் உள்ள ஹீமோக்ளோபின் அளவு, நம் நாடித்துடிப்பு, blood pressure, உடல் வெப்பநிலை ஆகியவை முதலில் சரியாக உள்ளதா என பரிசோதனை செய்யப்படும்.
எவ்வளவு நேரம் ஆகும் என்றால்,

சுமார் ஒரு மணி நேரத்தில் முடியும், (10 நிமிடம் இரத்தம் கொடுக்க , 15 நிமிடம் கட்டாய ஓய்வு)

சிலருக்கு வலிக்குமோ என்ற கேள்வி எழும்,

முதலில் needle சொருகும் பொழுது சிறய வலி இருக்கும், பின்னர் வலி இருக்காது.



இரத்தம் கொடுப்பதற்கு முன் நாம் வழக்கமாக என்ன சப்பிடுவோமோ
அந்த உணவு வகைகளே சாப்பிடலாம்.(உணவு கட்டுப்பாடு இல்லை)

நாம் இரத்தம் கொடுப்பதால் நம் இரத்த அளவு குறையுமோ என
பயப்பட தேவை இல்லை.


24 மணி நேரத்தில் நாம் கொடுத்த இரத்தம் ஊறி விடும்.
ஆனால், இரத்தத்தில் பிளாஸ்மா உருவாக 2 - 3 நாட்கள் ஆகும்
சிகப்பு அணுக்கள் உருவாக 4 இல் இருந்து 8 வாரங்கள் ஆகும்.

தானம் கொடுத்த பின்னர் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியவை,

நிறய நீர் ஆகாரம் குடிக்க வேண்டும், (ஜூஸ் வகைகள்) பழங்கள், பிஸ்கட் சாப்பிட வேண்டும்

24 மணி நேரத்திற்கு, கடுமையான வேலைகளை தவிர்த்தல்.
வேண்டும்.

4 முதல் 5 மணி நேரம் வரை கண்டிப்பாக கடினமான பொருட்களை தூக்க கூடாது

எத்தனை கால இடை வெளியில் கொடுக்கலாம் என பார்த்தால்,

56 -நாட்களுக்கு (8 வாரம்) ஒரு முறை கொடுக்கலாம் (12 வாரம் ஒரு முறை நல்லது)

பிறர் நலத்தில் சுய நலம் போல், கொடுப்பதால், நமக்கும் சில
நன்மை கிடைக்கும். அவை,

நம் உடலில் தோராயமாக 650 கலோரிகள் எரிக்கபடுகிறது.

இருதய நோய் இன் தீவிரத்தை குறைக்கும்.

அளவுக்கு அதிகமாக உள்ள இரும்புசத்து குறையும்

இரதத்தில் உள்ள நச்சு இரசாயன பொருட்களின் அளவு (e.g: mercury, pesticides, fire retardants) சீராகும்.

எடுக்கப்பட்ட இரத்தம் 42 நாள் வரை பாதுகாப்பாக வைக்க முடியும்.

(ஒரு யூனிட் என்பது 450 மில்லிமீட்டர் ஆகும்.)

A, B. குரூப் கொண்டவர்கள் - O குரூப் இடம் இருந்து பெற முடியும்.

O குரூப் மற்றஒரு O கருப் இடம் இருந்து மட்டுமே பெற முடியும் ( rh காரணியும் பொருந்தினால்)

நீங்கள் கொடுக்கும் இரத்தத்தால் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும், பலருக்கு உயிர் அளிக்கிறீர்கள்.


எனவே, நீங்களும் கடவுள்தான்.


டிஸ்கி:இது ஒரு கட்டுரை தொகுப்பு மட்டுமே, மேலதிக விவரங்களுக்கு மருத்துவர் ஆலோசனை பெறவும்.

Thursday, December 17, 2009

மச்சக்காரி


"பயணிகளின் கனிவான கவனத்திற்கு, நாகர்கோயிலில் இருந்து, மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் மார்க்கமாக சென்னை எக்மோர் வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் மூன்றாவது பிளாட்பாரம் இல் இருந்து புறப்பட தயாராக உள்ளது, kind attention... "

மாப்ஸ் வண்டிய கிளப்ப போராங்க உன் கோச் எது சொல்லு,
2tier a/c sleeper கிளாஸ்-டா, அந்த STD-கிட்ட இருக்கும் ஓடு,ஓடு,
சரி நான் பார்த்துக்கிறேன்,

நீ கிளம்பு. தேங்க்ஸ்டா.

மாப்ஸ், தங்கச்சிய கேட்டதா சொல்லு, ஹாப்பி ஜெர்னி.

ஒரு வழியா ஏறி எனது பெர்த்தில் சென்று, லக்கேஜ் எல்லாம்
வைத்து விட்டு நிமிர்ந்தால், "என் நெஞ்சுக்குள் ஹாரிஸ் உக்காந்துகிட்டு "மாமழை" வாசிக்கிறார்.

ஆமாங்க என் முன்னால அம்சமான "பிகர்" ஒன்னு ஒயிலா உக்காந்து இருக்கு.

அதை பார்த்து ஹாய் என்றேன், அது உதட்டை பிரிக்காம, நோவாம ஒரு புன்னகையை கொடுத்திச்சு.

அப்பதான் கவனிச்சேன் அதோட கீழ் உதட்டுக்கு கிழே, ச்சே... உளற ஆரம்பிச்சுட்டேன் இல்ல, அதோட உதட்டுக்கு கீழ அழகா ஒரு மச்சம்.

பார்வைய அப்படியே எல்லா பக்கமும் ஓட்டுன அப்புறம்தான் தெரிஞ்சது, அந்த பொட்டில, நான், அந்த மச்சக்காரி அப்புறம் ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மட்டுமே இருந்தோம்

(உனக்கு இன்னைக்கு மச்சம்தாண்டி அப்படினுதான நினைக்குறீங்க)

மெதுவாக மச்சக்காரியிடம் பேச்சு கொடுத்தேன். மிஸ் நீங்க சென்னையா, யா, ஹௌ அபௌட் யு (ஸ்வீட் வாய்ஸ்)

நானும் தலைநகரம்தான் என்றேன் ஒரு அசட்டுத்தனமான சிரிப்புடன்.

பேரைக்கேட்டேன், என்னுடன் "பழகிய" பின்புதான் சொல்வாளாம்,
அப்புறம் பரஸ்பர குசல விசாரிப்புகளுக்கு பின்பு, அவள் ரசனையும், என் ரசனையும் ஒன்றாக இருக்க நாங்கள் "ரொம்ப நெருக்கமாகினோம்"

45 எங்களையே முறைத்து கொண்டு இருந்தது. அது யார் உன் அப்பாவா என்று அவளிடம் ரகசியமாக கேட்டேன்.

ச்சே.. ச்சே.. அவர் யாருன்னு எனக்கும் தெரியாது என்றாள்.

இன்று நமக்கு ஏதோ "பரவச அனுபவம்" நடக்க போகிறது என்று உள்மனது
சொல்லியது.

45 வயதும் திருச்சியில் இறங்கி விட்டது. "தடக் தடக்" திருச்சி தாண்டிய பின்பு நானும், மச்சக்காரி மட்டுமே இருந்தோம்.

தனிமை கொடுத்த தைரியத்தில் மிக இயல்பாக அவள் அருகில் சென்று அமர்ந்தேன், அவளை உரசியபடி, மறுப்பு ஏதும் வராது போகவே......

"முடித்த" பின்பு ஒரு கணம் என் குற்ற உணர்ச்சி தலை தூக்கியது, மனைவிக்கு துரோகம் செய்து விட்டோமோ...

சான்ஸ் கிடைக்கிற வரைதான் எல்லோரும் யோக்கியம் என்ற "தத்துவத்தினை" நினைத்து என்னை நானே சமாதான படுத்திக்கொண்டேன்.

அப்புறம் "அசதியில்" அப்படியே தூங்கிப்போனேன். விடி காலை ஆறு மணிக்கு முழிப்பு வந்தது,

எழுந்தவுடன் மச்சக்காரி எங்கே என தேடினேன், ஆளை காணோம், எனக்குள் லேசாக ஒரு பரபரப்பு, எத்தனை சினிமாவுல பாத்து இருக்கோம், அதுல வர மாதிரி நமக்கு "கொடுத்து" அவளுக்கு தேவையான (நான் மதுரையில் இருந்து வாங்கி வந்த "jewels" முதல் கொண்டு) அத்தனையும் ஆட்டய போட்டிருப்பாளோ.

உடம்பு உதற என் லக்கேஜ்-ஐ தேட நான் நினச்ச மாதிரியே காணோம், தலையில கை வச்சுக்கிட்டு "அஞ்சு நிமிச சுகத்துக்காக" சொத்து
போச்சேன்னு
உட்கார்ந்து இருக்கும்போது ஒரு "கனைப்பு" சத்தம் கேட்டது.

நிமிர்ந்தேன், அட என்னோட(!!) மச்சக்காரி, என் லக்கேஜ்-ஐ கையில
வச்சுக்கிட்டு நிக்குது.

என்னையும், உன் லக்கேஜ்-ஐயும் காணாம என்னை சந்தேகப்பட்டு இருப்பியே என்றாள், ஒரு வித குற்ற உணர்ச்சி மேலிட பதில் சொல்லாது இருந்தேன்.

நீ என்ன அடிச்சுபோட்ட மாதிரி அப்படி ஒரு தூக்கம் தூங்குற, உன்னோட பேக் பெர்த்தில இருந்து கீழ விழுந்தது கூட தெரியாம, அதான் சும்மா விளையாட்டுக்கு, நான் தூக்கி வச்சுக்கிட்டு மறைவா இருந்தேன் என்றாள்.

அவளிடம் தேங்க்ஸ் சொல்லிவிட்டு, உன் பேரை இப்பவாவது சொல்லேன் என்றேன், எக்மோர் வந்த உடன் சொல்றேன் என்றாள், அதுவரை ஒரு "க்ளு" தரேன் முடிஞ்சா கண்டுபிடி என்றாள்.

அந்த "க்ளு" அவ பெயர் தமிழ்ல எழுதினா ஏழு எழுத்தாம், நான் யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள எக்மோர் வந்திருச்சி.

சொல், சொல் என அவ பின்னாடியே சென்றேன்.

இனிமே அது என் பேரு மட்டும் இல்ல, "நம்ம பேரு" என்றாள்,

பீடிகை எல்லாம் போதும் மொதல்ல பேர சொல்லு என்றேன் சற்றே
எரிச்சலுடன்.

அவள் என்னை மிக நெருங்கி கிட்டத்தட்ட என் காதருகே வந்து கிசுகிசுப்பாய் சொன்னாள், என்னை பத்தி "நல்லா" தெரிந்தவங்க என் முதுகுக்கு பின்னால முனுமுனுக்கும் எனது பெயர்,



"எய்ட்ஸ் நோயாளி"

Tuesday, December 15, 2009

பாட்டி வைத்தியம்

ஒரு பொருள் எளிதாக கிடைத்து விட்டால் அதன் அருமைகள் நமக்கு தெரிவதில்லை, நாம தினமும் கடந்து போற இடங்களில் இந்த மரத்தினை கண்டிப்பாக ஒரு இடத்திலாவது பார்த்திருப்போம். அந்த மரத்திற்கு இத்தனை மருத்துவ குணங்கள் இருப்பது தெரிய வந்தந்தும் வியப்பாக இருக்கிறது.

நாம எல்லாம் இப்ப பாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு தாவியதாலும், நடக்கிறத மறந்ததாலும், நிறய நண்பர்கள் "பொட்டி தட்டுற" வேலையில் இருப்பதாலும், தொல்லை காட்சி முன் தவம் இருப்பதாலும் வந்த விளைவு "குண்டுஸ்" வியாதி (அதாங்க உடல் பருமன்)

நம்மில் சிலருக்கு உடல் பருமன் ஒரு வகை நோய் என்பதே புரிவதில்லை. ஒல்லிகளை பார்த்தவுடனே, என்னபா ஆச்சு உடம்புக்கு சரி இல்லையா நல்லா சாப்பிடு, உடம்ப தேத்து என்று கேட்காமலே அட்வைஸ்களையும் அள்ளி விடுவர். அவர்களும் நமக்கு "ஏதோ வியாதி" வந்திருச்சோ அப்படின்னு கவலைப்பட்டு அதனாலேயே நோயும் வந்திரும்.

டாபிக்கே மாறிபோச்சா, இல்லைங்க இந்த பிரச்சினைக்கு இந்த மரத்திலே தீர்வு இருக்கு. (கிழே சொல்ல பட்டவை நான் புத்தகத்தில் படித்தது)

அட என்ன மரம்ப்பா அதுன்னு கேட்குறீங்களா, அதாங்க "வேப்ப மரம்."

**உடல் பருமனால் அவதிபடுவோர், தினமும் வேப்ப மரத்தின் பூவை, குடிக்கும் தண்ணீரில் ஊற வைத்து பின் அந்த நீரைக்குடித்தால் உடம்பு குறையும்.

**சிலர் அடிக்கடி ஏப்பம்(போடுறது இல்ல!!!) விட்டு கொண்டே இருப்பாங்க, இதுக்கு வேப்ப மரத்தின் பூவை வறுத்து பின்பு அதனை பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் இந்த தொல்லை நீங்கும்.

**இதன் பூ பித்ததினை தணிக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறதாம்.

நாம் வெளியூர் பயணங்கள் செல்லும் வழியில் பார்த்திருப்போம், வெள்ளரிக்காய் விற்பதை. இதிலும் மருத்துவ குணம் இருக்கிறது.

**இதில் நிறய நீர்சத்து இருப்பதால், தொண்டை வரட்சியினை போக்கும், பசியை உண்டாக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

**வெண் குழல் வத்தி" (அதான் சிகரெட்) பிடிப்பவர்களின் குடல்ல இருக்கிற நிகொடின்ன இது அழிக்க கூடிய ஆற்றல் கொண்டது.

(அதுக்ககாக தினமும் "ஊதி" தள்ளிக்கிட்டு அப்புறம் " வெள்ளரிக்காய் சாப்பிட்டுக்கலாம்னு
நினைக்காதீங்க.)


சிறிய "நினைவூட்டல் மட்டுமே" மேலே கூறப்பட்டவை.



அப்பாவி அங்கு:இப்ப எல்லாம் கான்க்ரீட் மரம்தான் நிறய இருக்கு.

Sunday, December 13, 2009

நியாய விலை

அநியாயத்துக்கு மழை பெஞ்சாலும் பெய்தது உடனே கண்ணு மண்ணு தெரியாம காய்கறி விலைய தங்க விலைக்கு கொண்டு வந்து விக்கிறே, ரெண்டு ரூபா கொறச்சி கொடு.

சாரே காலயில நாலு மணிக்கு மார்க்கெட் போயி பிரெஷ்ஆன காய்கறியா பார்த்து வாங்கி, நாக்கு தள்ள இந்த ட்ரை சைக்கிள் மிதிச் சுகிட்டு இவ்வளுவு தூரம் வரேன். எனக்கு வர லாபமே ஒத்த ரூபாதான், அதுலயும் ரெண்டு ரூபா கொறச்சி கேட்கிறே, கட்டுப்படி ஆகாது.

ரொம்ப பேசாதே, அப்புறம் இந்த அபார்ட்மென்ட் இருக்குற பக்கமே வர முடியாது பண்ணிருவேன்.

அட அவர் நியாமான விலைதான் சொல்றாரு, அவர் கேட்குரத கொடுத்திருங்க.

நீ என்ன ரெகமண்டா நாம கொடுக்கிற விலைக்கு எப்பவுமே ஒரு அர்த்தம் இருக்கணும், நியாமான விலையாகவும் இருக்கணும், இந்தப்பா இதுல நீ சொன்னத விட ரெண்டு ரூபா கம்மியா இருக்கு வாங்கிகிட்டு போய் கிட்டே இரு. கொடு மகராசா, இனிமே இந்த பக்கமே வர மாட்டேன்.

******** ********** ***********

என்னங்க இவ்வளவு கூட்டமா இருக்கு, வாங்க போயிட்டு இன்னோர் நாள் வந்துக்கலாம்.

தலைவர் படம் முதல் நாள், முதல் ஷோ பார்த்தே ஆகணும்,
யாம் இருக்கா பயம் ஏன், நீ இங்கே இரு, இதோ இப்ப வந்திடறேன்.

இதோ பார், ஐயா அடிச்சிபுடிச்சி டிக்கெட் வாங்கிட்டேன், ஆமாங்க 30 ரூபா டிக்கெட்ட நியமாமாவும், அர்த்தத்துடனும் 100 ரூபா கொடுத்து வாங்கிடீங்க.


Saturday, December 12, 2009

மீண்டு வரும் பழைய வியாதி

இப்பவே கண்ண கட்டுதே, தாங்க முடியல சாமி, எல்லாம்
மனவாடு மேட்டர்தான், அதாங்க தனி தெலுங்கானா.

இவ்வளவு நாள் எல்லா விசயத்திலும் ஒன்னாதான இருந்தீங்க, அதாவது பாலாற்றுக்கு குறுக்க அணை கட்டுவது வரை.

தண்ணி குடுக்க மாட்டேன்னு சொல்லி சொல்லி போராகி விட்டதோ, இப்ப உங்களுக்கு உள்ளேயே பிரிவுகள ஆரம்பிச்சுடீங்க.

இந்த போராட்டத்திற்கு காரணம் வரபோகும் தேர்தலா?
இந்த (தனி தெலுங்கனா) பிரச்னையை முன் வச்சு தேர்தல் பிரசாரம் செய்ய, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பா முடிவு எடுக்க பட்டுள்ளது . ஆந்திர மாநில சட்டசபைக்கும், லோக்சபாவுக்கும் தேர்தல் வரபோகுது. இந்த தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க , தனி தெலுங்கான மாநிலம் அமைக்கும் பிரச்னையை எடுக்க T.R.S. கட்சி முடிவு செய்துள்ளது. (செய்திதாள்கள் கூறுகின்றன)

இதுக்காக 10-நாள் உண்ணா விரதம் வேற. இதுக்கு மத்திய
மத்திய அரசும் சம்மதம் தெரிவித்து உள்ளது. தனி மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் துவக்கப்படும் என அறிவித்துள்ளது.


இதன் மோசமான விளைவு, தெலுங்கானா அல்லாத ராயலசீமா மற்றும் கடலோர பகுதிகளில் இதற்கு எதிராக நேற்று போராட்டங்கள் . விசாகப்பட்டினம், கர்னூல், கடப்பா ஆகிய மாவட்டங்களில் வன்முறை. அப்புறம் வழக்கம் போலவே, ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான பஸ்களும் எரிப்பு.

அந்த பஸ் எல்லாம் நம்ம சொத்து (வரிப்பணம்) அப்படிங்கற விசயமே நமக்கு மறந்து போகுது.

சரி இப்படியே எல்லோரும் எங்களுக்கும் தனி மாநிலம் கொடுன்னு கேக்க ஆரம்பிச்சுட்டா, என்ன ஆகும் நம் நாட்டோட நிலைமை.

ஊர் போய், பல மாநிலங்கள் உருவாகி விடும்.

மீண்டும் அடிமை வாழ்வுதான், ஏற்கெனவே நாம தனித்தனியா பிரிஞ்சு கிடந்ததால்தான், சுலபமாக பிரிட்டிஷ்காரன் நம்மள அடிமை ஆக்கினான்.

இத இவ்வளவு நாளும் நாங்க பாடப்புத்தகத்தில் படித்து மட்டும் தான் உணர்ந்து இருக்கிறோம், போற போக்க பார்த்தால் நீங்க அதை "அனுபவ பூர்வமாக" உணர வச்சுருவீங்க போல இருக்கு.

தேர்தலில் ஜெயிக்க வேற வழி முறைகளை பயன்படுத்துங்க, நாட்டை துண்டு பண்ண வேண்டாமே ப்ளீஸ்...

அனைவருக்கும் சம உரிமை கொடுங்கள்.

நல்ல வேலை காந்தி, குமரன்(கொடி காத்த குமரன்) விடுதலைக்காக
பாடுபட்ட இன்னும் பல நல்ல உள்ளங்கள் இல்லை, இருந்தா நொந்து
நூடுல்ஸ் ஆகி இருப்பாங்க.

இததான் நம்ம ஆளு அன்றைக்கே இப்படி சொன்னாரோ,

"நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த நிலைகெட்ட மனிதரை
நினைந்துவிட்டால் கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடிஎன்றா லது
பெரிதாமோ?"







அப்பாவி அங்கு:H1 N1, சிக்குன் குனியா, மட்டன் குனியா, சுனாமி இதையெல்லாம் தூக்கி சாபிட்டருவாங்க போல.

Friday, December 11, 2009

வழி எட்டயபுரம்

தலைப்பில் உள்ள பேருந்து வழிதடத்தினை படிக்கும்பொழுது கண்டிப்பாக இவர் நம் நினைவுக்கு வருவார்.

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.

இன்று சுப்ரமணிய பாரதி பிறந்த தினம் (பிறப்பு:டிசெம்பர் 11, 1882)

நம் வாழ்வின், சில மணித்துளிகள் நாம் கவிதையுடன் வாழ்கிறோம்,
ஆனால், இவர்
கவிதைகளுக்கு இடையில் கொஞ்சம் வாழ்ந்தவர்.

இவருக்கும்தான் தமிழின்மீது அளவுகடந்த அன்பு இருந்தது. அதுக்காக தமிழ் மட்டும் போதும் என்ற வட்டத்திற்குள் நிற்காமல், ஹிந்தி,வங்காளம், சம்ஸ்க்ருதம், ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கில மொழிகளையும் கற்று தனிப்புலமை பெற்றவர்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்"

இதை இவர்தான் கூறி இருக்கிறார், தமிழ் இனிக்கிறது என்பது மற்ற மொழிகள் கற்றதால்தனே தெரிய வந்தது.
தான் கற்ற மொழிகளில் உள்ள சிறந்த படைப்புக்களை மொழி பெயர்ப்பும் செய்துள்ளார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்கொஞ்சமோ பிரிவினைகள் - ஒருகோடியென் றாலது பெரிதாமோ ?
அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச்

(ஈகோவினால் ஏற்படும் பகையினை என்ன அழகாக கூறி உள்ளார்)

சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியேகோத்திரமொன் யிருந்தாலும் - ஒருகொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச்சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால் ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன்அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு) எண்ணிலா நோயுடையார் - இவர்

(ஒரே மதம், மதத்திற்குள்ளும் பல பிரிவினைகள்)

எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்நண்ணிய பெருங்கலைகள் - பத்துநாலாயிரங் கோடி நயந்து நின்றபுண்ணிய நாட்டினிலே - இவர்பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு)

("பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்"
ஒரு லட்சம் ஒரே மாதத்தில் பத்து லட்சம் ஆகும் என
கூறி கொண்டு கிளம்பும் பினான்ஸ் கம்பெனிகள் பணத்தை சுருட்டி கொண்டு ஓட வசதியாக இருப்பது நமது இந்த செயல்தான்.)


சாகா வரம் பெற்ற கவி, தம் கவிதையால் இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்.

கம்பீர கவிஞன்.


அப்பாவி அங்கு:இதோட இனிமே 2010 டிசெம்பர்-லதானே இவர் நினைவுக்கு வருவார்.

Tuesday, December 8, 2009

இது உங்கள் நேரம்

ஹலோ "இது உங்கள் நேரம் பூமா" யார் பேசறது, நான் த்ரிஷா பேசறேன்,

அய்யயோ பூமாதான் பேசறதா நம்பவே முடியல,
பூமா உங்க வாய்ஸ் ச்சோ ஸ்வீட் , உங்க குரலுக்காகவே நான் இந்த ப்ரோக்ராம் பார்க்கிறேன். ரொம்ப நாள் ட்ரை பண்ணி இன்னைக்குத்தான் "லைன்" கிடைச்சது, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.

தேங்க்யு த்ரிஷா, நம்ம நேயர்களுக்காக உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்க, நான் டிகிரி முடிச்சிட்டு வீட்லதான் இருக்கேன், அப்பா, கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து கிட்டு இருக்காங்க.

ஒ... கன்கிராட்ஸ் த்ரிஷா, தேங்க்யு பூமா, நீங்க எங்க இருந்து பேசுறீங்க த்ரிஷ், திருவொற்றியூர், 4-வது தெரு, ஒ... காசி தியேட்டர் இருக்குமே அந்த தெருவா, உய்யோ அதேதான் நீங்க வந்து இருக்கின்கீங்களா. ஒரு தடவ வந்து இருக்கேன்,
த்ரிஷ் இப்ப உங்க கூட வீட்ல வேற யாரு எல்லாம் இருக்காங்க.

"நான் மட்டும் தனியாத்தான் இருக்கேன், அப்பா, அம்மா, தம்பி எல்லோரும் காஞ்சிபுரம் வரை போய்
இருக்காங்க, நாளைக்குத்தான் வருவாங்க...."

மாப்பிளே, ஒரு மாசமா பைசா தேறல்லைன்னு புலம்பிகிட்டு இருந்தியே இன்னைக்கு
இருக்குடி வருமானம், நம்ம பூமாவும்,
த்ரிஷாவும் அழகா ரூட் போட்டு கொடுத்திட்டாங்க.

"அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்" பாடல்
போடுங்க, இந்த பாட்ட என் பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் "டெடிகேட்" பண்றேன்.
பை, த்ரிஷ் இதோ நீங்க கேட்ட பாடல் வந்து கிட்டே இருக்கு, பார்த்து "என்ஜாய்" பண்ணுங்க, " இது உங்கள் நேரம்"

தேங்க்யு த்ரிஷ் எங்களுக்கும் "அக்கம் பக்கம் யாரும் இல்லா வீடுதான் வேண்டும், இது நம்ம நேரம், சீக்கிரம் கிளம்புடா மாப்பிளே தொழிலுக்கு.

நில் கவனி செல்

இன்றய செய்தி இதைப்பற்றி எழுத தூண்டியது, அந்த செய்தினை முதலில் பாப்போம்,
"அதிக சம்பளம் கிடைக்கும், பெரிய வேலைகள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டும் ஏஜன்டுகளிடம் சிக்கி மலேசியாவுக்குச் செல்லும் அப்பாவிகள், அங்கு வேலை கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் அவலம் அதிகரித்து வருவதாக இந்திய ஹைகமிஷன் கவலை தெரிவித்துள்ளது." -

இதுவே செய்தி. இனி...

இந்த நாட்டிற்கு செல்வோர் மட்டும் இல்லை, மற்ற நாடுகளுக்கு
செல்வோருக்கும் இந்த கதிதான் நடக்கிறது.

நம்மவர்களை பீடித்துள்ள வியாதிகளில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக பொருளாதாரத்தை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்போர் செல்வதில் கூட ஒரு நியாம் இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் நம் நாட்டில் நல்ல சம்பளம் பெற்று கொண்டு இருப்பார்கள், அல்லது சொந்த தொழில் செய்து கொண்டு இருப்பார்கள்.

ஆனாலும் எப்படியாவது வெளி நாடு செல்ல வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள், இவர்களே பெரும்பாலும் போலி ஏஜன்ட்களின் வலையில் விழுவது.

நான் செவி வழி கேட்ட செய்தி இது... இவர்
முதலில் நம்ம ஊரில் மரம் இழைக்கும் வேலை பார்த்தவர் , ஒரு நாள் சம்பளம் rs.200 டு rs.300 வரை கிடைக்கும், "சும்மா கிடந்த சங்கை ஊத்தி கெடுத்தானாம் ஆண்டி" என்ற கதையாய் , உறவினர் ஒருவர் மூலம் வெளி நாடு சென்றால் "அம்பானி ரேஞ்சுக்கு வந்துரலாம் என்று சொல்லி " ஒரு ஏஜென்ட் மூலம் >>>>>> நாட்டில் ஒரு மரபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை, ஒரு நாள் சம்பளம் நம் ஊர் மதிப்பில் rs.400 கிடைக்கும் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கு வேண்டி ஏஜென்ட்இற்கு கொடுத்த கமிசன் பணம் மட்டும்
rs.ஒரு இலச்சம்.

அங்கு சென்ற பின்புதான் தெரிந்திருக்கிறது, இவருக்கும் அந்த நிறுவனத்திற்கும் நேரடி ஒப்பந்தம் ஏதும் இல்லை, அங்கு உள்ள sub contractor ஒருவரிடம்தான் இவர்களின் குடுமிபிடி.

இவர்கள் சென்றவுடன் (ஒரு குரூப் ஆக சென்று உள்ளார்கள்) இவர்களின் பாஸ்போர்ட் அந்த "முதலாளி" வாங்கி வைத்து கொண்டு உள்ளார்.

ஒரு மாத சம்பளம் rs.200 மட்டுமே கொடுத்துள்ளார், அதுவும் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான், மீறி கேட்டால் அடி உதை, நிலைமை கை மீறிய பின்பு இவர்களை தனியான ஒரு வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்தி இருக்கிறார்கள்.

பின்னர் கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி, உயிர் பிழைத்தால் போதும் என அங்கு உள்ள இந்திய தூதகரத்தின் மூலம் வீடு வந்து சேர்ந்து இருக்கிறார்கள்.

வெளி நாடு செல்வோரை தடுப்பதற்காக இந்த சம்பவம் கூறப்படவில்லை, செல்வதற்கு முன்பு சில
முக்கிய விசயங்களை கவனியுங்கள்,

1 நீங்கள் நாடி உள்ள மூலவர் (ஏஜென்ட்) முறையாக அரசாங்கத்தில் அவரது நிறுவனத்தை பதிவு செய்துள்ளாரா
என்று சரி பார்த்து கொள்ளுங்கள்.

2. நேரடியாக வெளி நாட்டு நிறுவனத்தினர் நடத்தும் நேர்முகத்தேர்வுகளில் மட்டும் கலந்து கொள்வது சிறப்பு.

3. செல்லும் முன்பு நமது பணி, சம்பள விவரங்களை உறதி செய்து கொள்ளுங்கள் (முடிந்தால் எழுத்து மூல ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்)

4. அவர்கள் கொடுக்கும் "விசா" உண்மையானதுதானா என்பதனை அந்த நாட்டு embassy சென்று சரி பார்த்து கொள்ளுங்கள், (நம் நாட்டில் உள்ள அவர்களின் embassy) முக்கியமாக அது tourist விசாவா அல்லது வேலைக்கான விசாவா என்பதனை உறுதி செய்க, விசாவின் முடிவுக்காலம் வரை)

பாதுகாப்பாக சென்று, வென்று வாருங்கள், வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு:

இங்கு நல்ல சம்பளம் கிடைத்தால் "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
என இருந்து விடுதல் நலம்."

Monday, December 7, 2009

ஒ போடு

எல்லோரும் "அவர்" பேச்சை கேட்டு பரோட்டா தேர்தலிலும் (கடந்த சனிகிழமை-05.12.09) 49-ஒ போட்டு விட்டதால் நம் சரக்கு மாஸ்டர்கள்(??) அடுப்படியில் அவசர ஆலோசனை கூட்டத்தினை நடத்தி ஒரு மனதாக வெற்றியாளர் யார் என்று தேர்வு செய்து விட்டார்கள்,
இவர்தான் வெற்றியாளர்: இந்த வார டாப் தமாசு வெற்றியினையும் "தல" தட்டி செல்கிறார்.


அப்பாவி அங்கு:இனி தேர்தல் தேவை இல்லை.

Sunday, December 6, 2009

சேட்டு கடை

சேட்டு சூடா ஏலக்கா டீ ஒன்னு, வாப்பா பி.பி (பிலிம் பித்துக்குளி) எந்த படத்தை பத்தி இன்னிக்கு பேசபோற. மொதல்ல கதையை கேளு சேட்டு, மௌலி ஒரு விளம்பர கம்பனி நடத்துறார், அது இப்பவோ அப்பவோன்னு புட்டுகிற நிலமையில இருக்கு, அத்த நம்ம ஹீரோவும், ஹீரோயினும் எப்படி தூக்கி நிறுத்துறாங்க அப்படிங்கறதுதான் கதை, ஆனா டைரக்டர் சோக்கா சொல்லி இருக்காபுல, பி.பி யாருப்பா டைரக்டர், எழுத்தெல்லாம் படிக்க தெரிஞ்சா நான் ஏன் உன் கடைக்கு வரபோறேன், ண்ணா, அவுக பேரு "நந்தினி" ங்கன்னநா, யாருயா இவன் அப்பப்ப வரான், பேசுறான், மாயமா போகிறான். கதையை கேளு சேட்டு, மௌலி ஒரு கஜினி, அவர்கிட்ட வேலை செய்யற அஜ்மல், இடியே விழுந்தாலும் தடி விழுந்த மாதிரி போய் கிட்டு இருக்கிற ஆளு, மஞ்சரி எட்டுக்கால் பூச்சிக்கு நிசமாவே எட்டுக்கால்தானான்னு பாக்குற ஆளு, இவுங்க எடுக்குற விளம்பரத்துக்கு ஒரு குழந்தை தேவைபடுது, குழந்தையை தேடிபோக, கடத்தப்பட்ட ஒரு குழந்தை இவங்க கையில் கிடைக்க, விளம்பர தயாரிப்பாளர் பெற்றோர் கையெழுத்து வேணுமின்னு கேக்குறாங்கோ, அவங்களை தேடி ஜோடி ரெண்டும் அலைய வழக்கம் போல காதல் வந்துருது.
பிள்ள கடத்தல் காரிய கட்டி போட்டு ரெண்டு பேரும், போலீஸ் டார்ச்சர் பண்ணுறாங்க பார், அந்த சீன போலீஸ் பார்த்தாலே சிரிப்பு வரும். பாட்டு எப்புடி, தம்மடிக்க தைரியமா வெளிய போகலாம், "ஜில்லென வீசும் பூங்காற்று" பாட்டு மட்டும் கொஞ்சம் சொகம்மா இருக்குப்பா. ஜன் டி.வீ யில சோக்கா கால் மேல கால் போட்டுக்கிட்டு பட விமர்சனத்தில ஒரு பஞ்ச் வைப்பாகளே அது மாதிரி ஒரு பஞ்ச் வை,


திரு திரு துறு துறு: சேட்டு கடை மொறு மொறு முறுக்கு.

அப்படி போடு, யோவ் சேட்டு கால் மாட்டிகிச்சு எடுத்து விடுயா

Saturday, December 5, 2009

தேர்தல்

இன்றய களத்தில் மூன்று வேட்பாளர்கள், முதலாமவர் இவருக்கு சமவெளியினை விட மலை பிரதேசம் மிகவும் பிடிக்கும், பொழுதுபோக்கு:அறிக்கை விடுவது, பிடித்தவர்கள்:பார்த்தவுடன் வெட்டிய மரமாக சாயும் அனைவரும்.

அம்மம்மா இதோ இவரின் க்ளிப்பிங்க்ஸ்:

கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் இருப்பதை அவர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். கூட்டணியிலிருந்து விலகிய பின் அ.தி.மு.க., குறித்து ராமதாஸ் கூறிய கருத்துக்கு நான் மதிப்பளிக்க விரும்பவில்லை. பதில் அளித்து எனது தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை.


இரண்டாமவர் இவருக்கு அடிக்கடி மவுன வலி வரும்

தல (கொஞ்சம் வயசான) இதோ இவரின் க்ளிப்பிங்க்ஸ்

கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்பர். அப்படியானால் கங்கை நீருக்குள் எப்போதும் வசித்து வரும் தவளை, தேரை, மீன் போன்றவற்றின் பாவம் அழிந்து சொர்க்கத்துக்குச் செல்கின்றனவா என்பது போன்ற கருத்துக்களைக் கன்னட அறிஞர் சர்வக்ஞர் பாடல்களில் பார்க்கலாம்

மூன்றாமவர்: "இவர் நம்மவர்", கொஞ்ச நேரம் கூட பேச முடியாது அழுது விடுவார், தமிழ்நாட்டை
நடந்தே அளந்தவர் என்ற சிறப்பு உடையவர் (நமக்கும் இதை மட்டும்தானே செய்ய முடியும், அதனாலதான் "இவர் நம்மவர்" என்று சொன்னேன்.

குண சித்திர நடிகர் அய்யகோ, இதோ இவரின் க்ளிப்பிங்க்ஸ்

பெரியாறு அணை உரிமைக்காக, 30 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.


எல்லாம் சற்றே பழைய படமாக இருந்தாலும், மனசு வச்சு உங்க ஓட்ட குத்துங்க, இந்த வார சிறந்த பேச்சாளர் வரும் திங்கள் அன்று அறிவிக்கபடுவார்.

Friday, December 4, 2009

2012

மார்ச் 2011: தலைப்பு செய்தி: "2012 ஜனவரி 02 இல் இந்தியா உருத்தெரியாமல் சிதறும், அசுர வேகத்தில் வரும் விண்கல், இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளை அளிக்கும் நாசா இதனை உறதி படுத்தியுள்ளது"

டிசெம்பர் 2011: உங்களுக்காக உயிர்த்தியாகம் செய்வோம், அதை பண்ணுவோம், இதை செய்வோம் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்க எல்லாம் அழகா வெளி நாட்டில
செட்டில் ஆயிட்டாங்க பார்த்தியா, ஆனா இப்ப நாமளும்
போற நாள் தெரிஞ்சவுடன் சாதி, மதம், பகை மறந்து ஒன்னா சேர்ந்து நம்மள்ள ஒருவரை தலைவராக்கி உண்மையான அமைதி பூங்காவா நம்ம நாட்ட மாத்தி வச்சிருக்கோம், இதே மாதிரி எப்பவும் இருந்தா நல்லா இருக்கும்ல,
என்ன பிரயோசனம் இன்னும் ஒரு நாளில் அழியபோறோம். பரவா இல்லை, சந்தோசமா போவோம்.


டிசெம்பர் 2012: தலைப்பு செய்தி : ஜனவரி 02- இல் பேரழிவில் இருந்து தப்பிய இந்தியா வல்லரசு ஆகியது, சொந்த நாட்டிற்கு திரும்ப செல்ல விரும்பிய முன்னாள்களுக்கு சாதாரண
குடிமகனாக வாழ விரும்பினால் மட்டும் வரவும் என ஜன நாயக அமைப்பு அறிவிப்பு

Thursday, December 3, 2009

ப்ளூ ஸ்கை சொகுசு பேருந்து

இன்று...
வியாழன் மணி 11.30: நம்ம தலைவனையே கைது பண்ணுணா சும்மா விடுவமா அதான், அந்த ...பசங்களோட "BLUE SKY" பஸ்ஸை ஆளுங்களோட சேர்த்து பஷ்பமக்கிட்டோம்லே என்று மகிழ்ச்சியாக துணை தலை கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு நண்பனிடம் பரத் பெருமை பேசி கொண்டே தமன்னாவிற்கு போன் செய்தான், "The person you called is currently unavailable" என்ற வாய்ஸ் மெஸஏஜ் மட்டுமே காலை பத்து மணியில் இருந்து வந்தது.

பாவம் நேற்று நடந்த விஷயம் பரத்துக்கு தெரியாது ,

அது...
புதன் மாலை ஆறு மணி:ரயிலை தவற விட்ட தமன்னா அந்த "BLUE SKY" சொகுசு பேருந்தில் இடம் கிடைத்ததும் பரத்துக்கு தான் வருவதை அவனுக்கு சொல்லாமல் கிளம்பியதால் அவன் தன்னை பார்த்ததும் அடையபோகும் இன்ப அதிர்ச்சியினை கற்பனை செய்தவாறே பயணித்தால்.....


யாராவது பரத்தை சந்தித்தால் நேற்று நடந்ததை கூறுங்கள்.

Wednesday, December 2, 2009

சர்வ தேச நகர்பேசி அடையாளம்

தலைப்பை பார்த்து தலை சுத்துதா "International Mobile Equipment Identity (IMEI) என்பதின் தமிழாக்கமே தலைப்பு. உங்கள் மொபைலின் அடயாள எண், அதாவது GSM (Global System forMobஇe communication) இல் உரிமம் பெற்ற தொலை பேசி தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இந்த என்னை தர முடியும்.

இதன் மூலியமாக நமது மொபைல் தொலைந்தாலோ அல்லது களவு போனாலோ நமது நெட்வொர்க் வழங்கும் நிறுவனத்தின் மூலமாக மொபைலின் இயக்கத்தை நிறுத்த முடியும். ( அவர்களிடம் Equipment Identity Register இருந்தால்)
மொபைலை எடுத்தவர்கள் சிம் கார்டு மாற்றினாலும் வேலை செய்யாது.

சேல்ஸ் பேகின் (sales pack) வெளிப்புறத்தில் IMEI எண் குறிக்க பட்டிருக்கும் இது 15 இலக்கம் கொண்டதாகும். அல்லது *#06# அழுத்துவதின் மூலம் உங்கள் IMEI என்னை அறியலாம்.

இந்த எண் உண்மையானதுதானா என்று கண்டு பிடிக்க ஒரு முறை உள்ளது,
உதாரணமாக மொபைலின் IMEI எண்:129054821801217 என்று வைத்து கொள்வோம்,

Right side-இல் இருந்து இரண்டாவது என்னில் ஆரம்பித்து (பின்னர் முறையே 4, 6,8,10,12,14) அந்த எங்களை இரண்டால் பெருக்கி கொள்ளவும்.
(4,0,8,4,16,2,2 என்று வரும்)

பின்பு இரட்டைபடையில் வரும் எங்களை கூட்டி ஒன்றாக்கவும். (16=1+6=7)

இப்பொழுது அனைத்து எண்களையும் கூட்டவும் (1+4+9+0+5+8+8+4+1+7+0+2+2+2+7=60)

நமக்கு கிடைத்த விடை 10-ஆல் வகு பட வேண்டும் (60/10=6)
இது உண்மையான என்னே (டுபாகூர் அல்ல)

இந்த கணக்கீடு "Luhn algorithm" ஆகும் .

விகிபிடியாவில் இருந்து தொகுக்கப்பட்ட தகவல் இது.

நன்றி:விகிபிடியா

Monday, November 30, 2009

சிறந்த கிச்சு கிச்சு வெற்றியாளர்

அமோக ஆதரவுடன் சிறந்த கிச்சு கிச்சு பேச்சாளர் பட்டதை "தமிழ் தாத்தா" வென்று விட்டடர்.

அவருக்கு பரிசாக "அம்மா முத்தம்" அளிக்கபடுகிறது.

ஏடா கூடமாக எதையாவது நினைக்காதீர்கள், அதுதாங்க "கலை மாமணி " விருது அளிக்கபடுகிறது.


அப்பாவி அங்கு:இப்படி விருது கொடுத்து, வாங்கி கொண்டு இருந்தால் மத்த பிரச்சனைகளை கவனிக்க நேரம் இருக்குமா.

Sunday, November 29, 2009

இந்த வார சிறந்த கிச்சு கிச்சு


இந்த வாரம் மூன்று சிறந்த போட்டியாளர்கள் களத்தில் உள்ளார்கள். முதலில் அவர்களின் கிச்சு கிச்சு அறிக்கைகளை பார்ப்போம்.


போட்டியாளர் ஒன்று: " தமிழ் தாத்தா"

சகோதர யுத்தம் காரணமாக ஓடு மொத்தமாக நாம் பாதிக்க பட்டோம், " வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தை பயன் படுத்த வேண்டும்"


போட்டியாளர் இரண்டு:" மரம் வெட்டி"

தமிழகத்தில் என்னை போன்று "நாகரிகமான" அரசியல்வாதி யார் இருக்கிறார், "தேர்தலில் ஒரு முறை மக்கள் என் பேச்சை கேட்டால் தமிழகத்தில் நல்லாட்சி நடக்கும்"


இருவரில் இந்த வார சிறந்த கிச்சு கிச்சு பேச்சாளர் யார் என்று தெரிவு செய்யும் பொறுப்பு உங்களிடம் விடப்படுகிறது. உங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க ஆரம்பிக்கலாம்.


முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்.

















:))

Saturday, November 28, 2009

இனிப்பான செய்தி


ஒரு வழியாக சமச்சீர் கல்விக்கான புதிய பாடத்திட்டம் வெளி இடப்பட்டுள்ளது. இதன்படி ஆறாம் வகுப்பில் இருந்தே பொருளாதாரம், கணினி கல்வி போன்றவை இருக்கும்.


தனியார் கல்வி நிலையங்களுக்கு ஆப்பு. கொஞ்சமாவது கொள்ளை அடிப்பது குறையும் என நினைக்கிறேன்.


அப்படியே இந்தி மொழி பாடமும் (துணை மொழி) கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே. நம் மாநிலத்தை தவிர அனைத்து இடங்களிலும் உள்ளது, மற்ற மாநிலத்தை சேர்ந்தோர் இடம் நாம் ஆங்கிலத்தில் பேசும்போதே அவர்கள் நக்கலாக "மதராஸ் வாலா" என்கிறான், நெருக்கமான நட்புக்கு தடை விழுகிறது.


இது நான் நேரில் கண்டதும் மற்றும் சொந்த அனுபவமும் உள்ளது.

Monday, November 23, 2009

கவசம்



உன் இதழ்களை மலர் என்று

நினைத்து அமர வந்து வண்டு

முடியாமல் தவித்தது


நான் கொடுத்த முத்தம்

கவசமாய் இருப்பதால்...






மேலே நீங்கள் கண்டது, கவிதை (!!) கதை அல்ல நிஜம், நம்புங்கள்

Friday, November 20, 2009

வேற்று கிரகவாசிகள் 1


வருடம்:1968

இடம் : நகர எல்லைக்கு வெளி உள்ள கிளப்

நேரம் :அதிகாலை இரண்டு மணி.


போதையின் உச்சத்தில் இருந்த பாலாவை இழுத்து கொண்டு வெளி வந்த ரிஷி எலும்பு மஜ்ஜயினை துளைத்த குளிர் தாங்காது ஜெர்கின் தேடி எடுத்து காரை இயக்கினான்.


ரிஷி பெல்லி டான்ஸ் ஆடினாளே அவ அட்ரஸ் தெரியமா, இந்த நேரத்தில் இது எதுக்கு, அவளுக்கு டிரைவிங் சொல்லி கொடுக்க, அப்படியே உன் தர்மபதிணிக்கும் சொல்லிகொடு என்று நான் கூறும் பொழுது வானில் அந்த பிரகாசமான வெளிச்ச வட்டம் தெரிந்தது.


தொடர்ந்து காரை செலுத்த முடியவில்லை, பாலா அது என்ன என நான் கேட்க பாலாவின் குறட்டை ஒலிதான் கேட்டது. "அது" மெல்ல எனது காரை நோக்கி நகர்ந்து வந்தது.



வருடம் :2004

இடம் :ஒரு நகரம்


கிசோர் தூங்குனது போதும் ஏர்போர்ட் செல்ல ஒரு மணி நேரம் ஆகி விடும், என்றபடியே ஷாலு பேக் செய்து கொண்டிருந்தாள். இருவரும் புதுமண தம்பதியர், ஹனி மூன் கொண்டாட உல்லாச புரி நோக்கி பயணம்.


டேக்சி டிராபிக் ஜெமில் நின்ற பொழுது பெட்டி கடையில் உள்ள பேப்பர் செய்தி என்னை கவர ஷாலு இடம் அதை காட்டினேன். சிட்டி அவுட் டரில் வினோத வெளிச்ச வட்டம் பார்த்ததாக இரு வாலிபர்கள் கூறிய செய்தியும் அவர்கள் படமும் பிரசுரம் ஆகி இருந்தது.


இதை எல்லாம் நம்புறியா கிஷோர் என்ற ஷாலு இடம், பத்திரிக்கை விக்க இவங்க போடுற டுபாகூர் செய்தி என்றேன்.


அப்பொழுது அந்த அதிசயம் நடந்தது.........




Monday, November 16, 2009

தமிழ் திரை படம்

சமீபத்தில் வந்த படத்தில் இது என்னை கவர்ந்த ஒன்று, காமெராவை பார்த்து ஹீரோ வீர வசனம் பேசும் காட்சி இல்லை, நாயகி துகில் உரிக்க வில்லை, வில்லன் டேய், டோய், என கத்த வில்லை, (என்னதான் இருக்கு...)





படிக்காத கூட்டத்தில் இருந்து ஒருவன் படித்து வந்தால் அவனை இறுமாப்பும், தன்னை விட ஒரு (பல) படி குறைவாகும் மதிக்கும் ஒரு கூட்டம் அவனை எப்படி பார்க்கிறது என்பதை இயக்குனர் மனதை தொடும் விதம் கூறி இருக்கும் பாணி அருமை, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் வர்க்கம், "இவ்வளவு அழகாக ஆங்கிலம் பேசும் நீங்கள் ஏன் ஆங்கிலம் பேச வில்லை என கேட்கும் பொழுது, "நான் என் மக்கிளடம் பேசினால் அவர்களுக்கு புரியாது, உங்களிடம் பேசினால் உங்களுக்கு பிடிக்காது" போன்ற வனசங்கள் யதார்த்தம்.





அடுத்தவன் முதுகில் சவாரி செய்யும் நபர்களை, பொன் வண்ணன் கேரக்டர் மூலமாக சாடி உள்ள பாணி அருமை.





சில காட்சிகளில் வந்தாலும், பொன் வண்ணனிடம் ஆக்ரோசமாக (கையால் நடக்கும்) மோதும் நபரின் பாத்திர படைப்பு அழகு.





சில இடங்களில் லாஜிக் இடித்தாலும் பார்க்க வேண்டிய படம் "பேராண்மை", நேரம் கிடைத்தால் பாருங்கள்.





இயக்குனர் ஜன நாதனுக்கு இந்த வேளையில் நன்றி, அனைவரும் ரசிக்கும்படி நல்ல படம் கொடுத்தமைக்கு.













Thursday, November 12, 2009

சோதனை(!!) கொத்து

அன்பானவர்களே
உங்களின் பொறுமையை சோதிக்க நானும் களத்தில் இறங்குகிறேன் இன்று முதல்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)