பெர்முடா முக்கோணம், என அழைக்கப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர்
சைத்தானின் முக்கோணம்.
இதன் எல்லைகள் என பார்த்தல், பஹாமாஸ், புளோரிடா நீரிணைப்பு,மொத்த கரீபியன் தீவுகள் மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை அடங்கும்.

பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படும் இந்த பகுதியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும் மர்மமான முறையில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது காணமல் போன விமானங்களும், கப்பல்களும் பழுது
அடையாமல் நல்ல நிலைமையில் இருக்கும்பொழுதே
மாயமாகி விட்டதாக கூறுகிறார்கள்.
இந்த மாதிரி, எந்த பொருள் அந்த பகுதியில் சென்றாலும் மறைவதற்கு விடை
கிடைக்க வில்லை. நம்மை மீறிய ஏதோ ஒரு சக்தி அங்கு
இருப்பதாக, பொதுவான கருத்து ஒன்று உள்ளது.
"காணாமல் போகும்" விபத்துகளில் அதிகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா ஜலசந்தியைச் ஒட்டிய தெற்கு எல்லைப்பகுதியில் தான்.
காணாமல் போன சில சம்பவங்களை பார்ப்போம்:
சம்பவம் 1:
பிளைட் 19 என்பது டிபிஎம் அவெஞ்சர் குண்டு வீசும் விமானங்களுக்கு பயிற்சியளிக்கும் விமானமாகும், இது டிசம்பர் 5, 1945 அன்று அட்லாண்டிக் கடல் மீது பறக்கும்பொழுது மறைந்து போனது.
அந்த விமானம் அசாதாரணமான நிகழ்வை சந்தித்தது என்றும் இயற்கைக்கு மீறிய திசைகாட்டி அளவுகளைக் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் விமானம் செலுத்தப்பட்ட நேரத்தில் வானிலை நன்றாகவே
இருந்ததாம், அதன் விமானியும் நன்கு அனுபவம் வாய்ந்தவராம்.
அவர் பெயர் சார்லஸ் கரோல் டெய்லர் ஆகும்.
காணமல் போன இந்த விமானத்தை தேடுவதற்காக 13 பேர் கொண்ட குழு ஒன்று, கப்பல்படை விமானம் மூலம் அனுப்பப்பட்டது, ஆனால், அதிர்ச்சியூட்டும் விதமாக அந்த விமானத்தில் இருந்தே ஒரு தகவலும் இல்லை.
அதே நேரத்தில், புளோரிடா கடற்கரையோரம், ஒரு கப்பலில் இருந்தவர்கள், கப்பல் படை விமானம் காணமல் போன விமானத்தை தேடி ரோந்து பணியில் இருந்த அதே நேரத்தில் ஒரு வெடிப்பு சம்பவத்தை அவர்கள் பார்த்ததாக கூறினர்.
இந்த சம்பவத்தை பற்றி அமெரிக்கன் லேசன் இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டது, பிளைட் 19 விமான ஓட்டி கூறியதாக அந்த இதழ் தெரிவித்த செய்தி: நாங்கள் இப்போது வெள்ளையான நீர் பரப்பிற்குள் நுழைந்து உள்ளோம், எதுவும் சரியாக தெரிய வில்லை. நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியவில்லை, இந்த இடத்தில் தண்ணீர் பச்சை கலரில் உள்ளது. மேலும் கப்பல்படை விசாரணை குழு அதிகாரிகள் விமானங்கள் "செவ்வாய்க்கு பறந்து போனதாய்" கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
(கதை கட்டியது, இந்த சம்பவத்தை சுவாரசியமாக்க)
ஆனால் உண்மையில் இந்த சம்பவம் நடந்து முடிந்த சமயத்தில் பருவநிலை கொந்தளிப்பானதாக மாறியிருந்தது. அதே நேரத்தில் தலைமை விமானி டெய்லருக்கும், பிளைட் 19 இன் மற்ற விமானிகளுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்கள் பற்றிய கடற்படை அறிக்கைகள், எழுதப்பட்ட பதிவுகள் அந்த விமானத்தில் எந்தவிதமான காந்த பிரச்சினைகள் இருந்ததாய் அறிவிக்கவில்லை.
மர்மங்கள் தொடரும்...
செய்தி மூலம், படம்:விக்கிபீடியா - நன்றி
அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.