வலை உலகத்துல எத்தனை தகவல்கள் கொட்டி கிடக்கு, அதுவும்
நம்ம தாய் மொழியில படிக்கும்போது ரொம்ப இயல்பா மனசுல
பதிந்து விடுகிறது.
அனைவருள்ளும் ஒளிந்து இருந்த திறமைகளை வெளிக்கொண்டு வர
இந்த வலைப்பதிவு பெரும் துணை புரியது!!!
அப்படி நாம எழுதுறது நம்மோளட நின்னு போகாம, பலரை
சென்று சேர்ந்தால்தானே சிறப்பு.
இதுக்காகவே ஒரு தளத்தை உருவாக்கி, வாரத்திற்கு ஒருவர் என்று
ஒவ்வொரு வாரமும், ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து நாம்
படிச்சதுல, நம் மனதில் நின்ற மற்றும் அனைவருக்கும் போய்
சேர வேண்டிய தகவல்கள் என நாம் நினைப்பவற்றை
பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கும் நல் உள்ளம் திரு.சீனா அய்யா
அவர்கள், வரும் வாரம் அதாவது நாளை முதல்(03.05.10 to 09.03.10) ஒரு வாரத்துக்கு வலைச்சரத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு
கொடுத்துள்ளார்கள்.
அவருக்கும், வலைச்சர குழுவினருக்கும், என் இடுகைகளுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்களே உங்களுக்கும் முதலில்
எனது நன்றிகள்!!!
இங்கே எனக்கு ஊக்கமளிக்கும் நீங்கள், வலைச்சரத்திலும் வந்து
ஆதரவு கொடுக்க வேண்டி, உங்களை அன்போடு அழைக்கிறேன்.
நாளை வலைச்சரத்தில் சந்திப்போம்.