Thursday, April 29, 2010

என் கதை(?)

நேத்து தூக்கமே வரல, என்னோட லட்சியத்த அடையப்போற இரண்டாவது படியில இன்னைக்கு கால்
வைக்கபோறேன். ஒரு சிறந்த இயக்குனர் ஆகணும்கிறது என்னோட சுவாசாம், லட்சியம் எப்படி
வேனா வச்சுக்கலாம். பல வருசம் வெறியோடு அலஞ்சு, திரிஞ்சு ஒரு வழியா இன்னைக்கு என் குருநாதர் ஏற்பாட்டில்,
ஒரு தயாரிப்பாளர் என்னை வர சொல்லி இருக்கார், கதை சொல்ல.

11 மணிக்கு அவரோட ஆபிசுக்கு வர சொல்லி இருக்கார், நான் 8 மணிக்கே அவர் ஆபிஸ்க்கு
எதிரே இருக்கும் டீ கடையில, ஸ்க்ரிப்ட்டோட உக்காந்துட்டேன்.

9 - மணிக்கு அவரோட கார் ஆபிஸ் வளாகத்திற்குள் நுழைந்தது. எல்லோரும் ரொம்ப
பரபரப்பா இருந்தாங்க, நானும் பதட்டத்துடன் உள்ளே சென்றேன்.

11.30 மணிக்கு அவர் என்னை கூப்பிட்டார். அவருக்கு மரியாதை கலந்த வணக்கத்தை சொல்லிட்டு,
என் (படத்தோட) கதையை சொல்ல ஆரம்பித்தேன். ரொம்ப ஆர்வமா கேட்டார். சொல்லி முடிச்ச
பிறகு அதில் சில மாற்றங்கள் செய்தார், அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் என்
லட்சியத்தை அடைய இது தடையாக இருக்ககூடாது என்பதால் உடன்பட்டேன்.

ஒரு சுபயோக சுப தினத்தில், ஷூட்டிங் ஆரம்பித்தோம், கிட்டத்தட்ட பாதி படம் எடுத்து விட்ட
பின்னர், ஹீரோ சாருக்கு சில காட்சிகள் பிடிக்கவில்லை என்றதால்,
அவரே மாற்றங்கள் செய்து, இயக்கியும் கொண்டார்.

இதோ இன்னைக்கி என்னோட(?) படம் ரிலீஸ்!!! தலைப்பிரசவ வேதனையுடன், முதல் குழந்தையை எதிர் நோக்கும் தாயின் மனோ
நிலையில் இருந்தேன்.

முதல் காட்சி மக்களோடு சேர்ந்து பாத்திட்டு, நெட் சென்டர் நோக்கி
ஓடினேன்.

வலைப்பூக்களில் என் படத்தோட விமர்சனம் "சூடான சங்கதி"யாக
ஓடிக்கொண்டிருந்தது. ஆர்வம் மேலிட, எனது படத்தின் விமர்சனத்தை
படித்தேன்......

மணி சார் பட்டறையில் இருந்து, வந்த இயக்குனர் சார்
உங்களிடம் நிறைய எதிர் பார்த்தோம். ஆனால்....... நீங்களும் அரைச்ச
மாவையே அரைச்சு இருக்கீங்களே,
பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்........
*******************************************************
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்) நன்றிகள் பல.

Sunday, April 25, 2010

கல்லூரி

தினமும் பள்ளிக்கூடம் சென்று திரும்பும் பொழுது வழியில் உள்ள அந்த கல்லூரியினை
கடந்து போகும் பொழுதெல்லாம் நினைத்துகொள்வேன், இந்த கல்லூரியில்தான் சேர
வேண்டும்.

அது ஒரு தனியார் கல்லூரி என்றாலும், எங்கள் மாவட்டத்தில் மிக சிறந்த கல்லூரி அதுவேயாகும்,
அந்த கல்லூரி சூழலே எனக்கு மிகவும் பிடித்திருந்தது, முகப்பில் ஆரம்பித்து கல்லூரியின் மத்தி வரை குளுமையான மரங்களின் அணிவகுப்பு!!!

இது கல்லூரியா இல்லை தோப்பா என பலமுறை வியந்து இருக்கிறேன், எங்கள் தெருவில் உள்ள வேலு தாத்தாதான் அங்கு உள்ள செடி, மற்றும் மரங்களை பராமரிக்கும் வேலைகளை செய்து வந்தார். வேலு தாத்தா அந்த மரம், செடிகளை தன் குழந்தைகள் என பலமுறை பெருமிதமாக கூற கேட்டிருக்கிறேன். மேலும் கட்டு கோப்புடன் சென்று படித்து திரும்பும் அண்ணா, அக்காக்கள் என நிறய விஷயங்கள் எனக்கு பிடித்து போயிற்று.







அப்பாவிடம் பலமுறை சொல்லி இருக்கிறேன், அப்பா என் கல்லூரி படிப்பை நான் இங்கதான்
படிக்க போறேன்.

இதுல நிறய காசு கேப்பாங்கடா, நீ நிறய மார்க் ஸ்கோர் பண்ணு, அப்பதான் கட்ட வேண்டிய
டொனேசன் கொஞ்சம் குறைப்பாங்க.

அப்பா சொன்ன அப்புறம் மிக தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன், முழு ஆண்டு தேர்வும்
எழுதி முடித்தாகி விட்டது. எனக்கு நிச்சயம் 95% மதிப்பெண் கிடைக்கும். நன்றாக
படித்து இருந்ததால், எனக்கு தேர்வு மிக சுலபமாகவே இருந்தது.

விடுமுறைக்கு இரண்டு வாரங்கள் வெளியூரில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு
சென்று வந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்த பின்புதான் கவனித்தேன், வேலு தாத்தா வீடு பூட்டியே கிடந்தது,
தாத்தாவையும் காணவில்லை.

புதுசா சேக்கப்போற டிபார்ட்மென்ட்க்கு கட்டடம் கட்டறதுக்காக மரங்களை எல்லாம் வெட்டிடாங்கடா, வேலு தாத்தாவையும் வேலைய விட்டு நிப்பாட்டிடாங்க என்றான் நண்பன்.

நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக எங்கள் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற
மாணவன் ஆனேன்.

இப்போது நான் "சேர விரும்பிய" கல்லூரியில் எனக்கு ஸ்காலர்ஷிப் அவர்களே கொடுப்பதாக கூறி
வந்த வாய்ப்பினை, "ஏனோ" என் மனம் ஏற்கவில்லை.
************************************************************

அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்) நன்றிகள் பல.

Monday, April 19, 2010

பத்துப்படங்கள் - தொடர்பதிவு

எனக்கு பிடித்தவற்றுள் பத்து படங்களை பற்றி பகிர்ந்து கொள்ளும்
இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்த நண்பர் philosophy பிரபாகரன்
அவர்களுக்கு எனது நன்றி.

விதிகள்:
1. தமிழ்ப் படங்கள் மட்டுமே
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)
))))))))))))))))))))))))))))))))))))))))))

'ஓஹோ" ப்ரொடக்சன் பத்தி தெரியுமா உங்களுக்கு, தெரியாதுன்னா கண்டிப்பா இந்த படத்த
பாருங்க. பாலையாவும், நாகேசும் அப்பா, மகனா நகைச்சுவையில் கலக்கி இருப்பாங்க,
நாகேஷ், பாலையா கிட்ட கத சொல்ற அந்த சீன் அற்புதமா இருக்கும், நேரமில்லைன்னு
சொல்லாம பாருங்க இந்த "காதலிக்க நேரமில்லை" படத்த.

என்னதான் வாயில வெத்தில போட்ட மாதிரி பேசினாலும், இவரோட இயல்பான
நடிப்பும், அந்த துள்ளலான ஸ்டைலும் எனக்கு பிடிக்கும். அழகான ஒரு
குடும்பத்தோட நாமளும் அருகில் இருந்த ஒரு பீல் கிடைக்கும் இந்த படத்த பாக்கும்போது,
நாலே பாட்டுனாலும், நாலும் "நச்', வருடங்கள் பல கடந்தாலும் நினைவில் நிற்கிறது
இந்த "வருஷம் 16"

தம்மாதூண்டு மீசையை வைத்து, தன் பாஸிடம் இரட்டை வேடம் போட்டு ஏமாற்றுவார் ஹீரோ, அவருக்கு அம்மாவாக நடிக்க வந்தவரும், இரட்டை வேடம் போட
வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். அந்த அம்மா, நிறைய
படங்களில் அழு மூஞ்சி கேரக்டரில் மட்டுமே நடித்திருப்பார்,
அவரே இதில் நகைச்சுவை செய்திருக்கிறார், என்றால் பாருங்களேன், இந்த "தில்லு முல்லு"வை.

ரெண்டும் கெட்டான் வயதில் மாயகாதலில் விழுந்து
"ஓடிப்போலாமா" என நினைப்பவர்கள் இந்த படத்தை
பார்த்தால், நிச்சயம் நினைப்பை மறு பரிசீலனை செய்வார்கள்.
உச்ச கட்ட காட்சிக்கு முந்தைய காட்சியில், அந்த கை இழந்த நபர் முதலில் சாதாரணமாக
பேச ஆரம்பிக்கும்போதே, ஏதோ நடக்க போகிறது என்ற உணர்வில் நம்மை
அறியாமலே, நம் வயிற்றில் பய அமிலம் சுரக்கும் இந்த
"காதல்"லை பார்த்தால்.

காதலியை கைபிடித்தே தீர வேண்டிய சூழ்நிலை, அண்ணனால்
பெற்றோர் மனமுடைந்து இருக்கும் நேரம் வேறு. அப்பாவிடம் இன்டெர்வியு செல்வதாக பொய் சொல்லி கிளம்ப
வெள்ளந்தியாக அப்பாவும் ஆசிர்வாதம் செய்து, பணம் போதுமாப்பா
என கேட்க, குற்ற உணர்ச்சியில் மகன் தவிப்பார். அப்பாவிற்குள்
ஒளிந்திருக்கும், பாசத்தையும், அக்கறையையும் அழகாய் கொடுத்துள்ளார்கள் இந்த
"தவமாய் தவமிருந்து"வில்.

சிரிப்பு போலீசை மட்டும் நிறைய படங்களில் பார்த்த நமக்கு,
அவர்களின் நிஜ பக்கங்களையும் காட்டிய சில படங்களில் இதுவும்
ஒன்று. பிடிபட்ட அந்த தீவிரவாதி உண்மையில்
தீவிரவாதியோ என நாம் அஞ்சும்படி, நடிப்பில் மிரட்டி இருப்பார்,
வீரம்ன்னா பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுன்னு, வீரத்தை
பற்றி விளக்கிய இந்த "குருதிப்புனல்"லை பாருங்களேன்.

வயதான ஒருவரும், இளம்பெண் ஒருத்தியும் கொண்ட
நட்பை, எந்த விரசமும் இல்லாமல் கிராமிய மணம் கலந்து
வந்த இந்த படத்திற்கு என்றும் "முதல் மரியாதை"தான்.
ம்.....சொல்ல மறந்துட்டேனே பாடல்கள் அத்தனையும் தேன்.

வழக்கமா ஒரே பாட்டுல நம்ம ஹீரோக்கள் எல்லாம் ஊறுகாய்
வித்தே பெரிய ஆள் ஆயிருவாங்க, அல்லது அவங்களோட
"லட்சியத்தை" அடஞ்சிருவாங்க. இப்படி இல்லாம, கொஞ்சம் யதார்த்தமாய் இந்த படம் இருந்தது, என்ட் கார்ட் போடும்
வரையிலும் இந்த ஹீரோ அவரோட இசை அமைப்பாளர்
ஆகணும்கர லட்சியத்தை அடைய முடியாமல் போனாலும்
இந்த "முகவரி" எனக்கு பிடித்து இருந்தது.

ஒரு விறுவிறுப்பான க்ரைம் நாவல் படிச்ச மாதிரி இருந்துச்சு
இந்த படத்த பாக்கும்போது. ஸ்டைலிஷான மேக்கிங்ம், ரசிக்கும்படியான பாடல்களும் வலு சேர்த்தது,
இந்த "வேட்டையாடு விளையாடு"விற்கு.

ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான திரைக்கதை, நாயக, நாயகி, "மற்றும் பலரின்" நல்ல நடிப்பு, சுகமான பாடல்கள் என அமைந்த படங்களுள்
இந்த 'மொழி" யும் ஒன்று.
)))))))))))))))))))))))))))))))

இதை தொடர நான் அழைப்பது:

சசிகுமார்
பட்டாபட்டி
ரகு
ஜெய்லானி
அக்பர்
கண்ணா
சித்ரா
ஆனந்தி
பத்மா

ஜில் தண்ணி
r.v.saravanan kudandhai
*************************************************


அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Wednesday, April 14, 2010

ஆச்சி சொன்ன கத - கத கேளு கத கேளு - தொடர்பதிவு

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இப்போ என்னதான், DTS, DOLBY சிஸ்டம், I-MAX அரங்குன்னு தேர்வு செய்து படம் பார்த்தாலும், பள்ளி விடுமுறை
நேரத்துல ஆச்சிகிட்ட (அல்லது தாத்தாகிட்ட) கதை கேட்ட அந்த அனுபவம் யாருக்கும்
மறக்க முடியாது!!!

அவர்கள் கதை சொல்லும் போதே, நம் கற்பனயில் அந்த காட்சிகள் விரியும்.

அப்படி ஆச்சியிடம் கேட்ட கதைகளுள் ஒன்றை உங்களுடன்
பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை அளித்த சிநேகிதன்
அக்பர்ருக்கு நன்றி.

ஒரு காட்டுல ஒரு நரியும், ஓநாயும் ரொம்ப கூட்டாளியா
இருந்துச்சாம். ரெண்டும் சேர்ந்துகிட்டு கண்ணுல படுற
குட்டி மிருகங்கள ஆதரவா பேசி ஏமாத்தி, சாப்பிட்டிருமாம்.

ஒரு நாள் அந்த காட்டுக்கு, வழி தவறி போய் ஒரு குதிரை
வந்திச்சாம்.

அத பார்த்த நரி, இது என்ன மிருகம் புதுசா இருக்கே,
இத கொன்னா ஒரு வாரம் வச்சிருந்து சாப்பிடலாமேன்னு
நினச்சி, ஓநாயோட கலந்து பேசி ரெண்டும் குதிரைகிட்ட
போச்சாம்.

நீ யாருப்பா, இதுக்கு முன்னாடி உன்ன பார்த்தது இல்லையே,
உன் பேர் என்னன்னு கேட்டுச்சாம்.

நரியோட தந்திரங்களை பத்தி தெரிஞ்ச குதிரை சொல்லுச்சாம்,
என் பேரு, என் பாத்ததுல (காலின் அடிப்பாகம்) எழுதி இருக்கு, வேணுமின்னா
பக்கத்துல வா காட்றேன்னு சொல்லுச்சாம்.

இதுல ஏதோ சூழ்ச்சி இருக்குனு புரிஞ்சுகிட்ட நரி, எங்களுக்கு
படிக்க தெரியாதேப்பா, நாங்க மழைக்கு கூட பள்ளிக்கூடம்
ஒதுங்குனதில்ல இவ்வளவு ஏன் தங்கர்பச்சானோட பள்ளிக்கூடம் படத்துக்கு
கூட போனதில்லன்னு
சொல்லுச்சாம்.

இத கேட்ட ஓநாய்க்கு கோபம் வந்து, அடேய் மடப்பய நரியே, உனக்கு படிக்க தெரியாதுன்னு சொல்லு, அது உண்மை.....

ஆனா, நான் ரெண்டாப்பு வர படிச்சிருக்கேன்டா, எனக்கு படிக்க தெரியம் அப்படின்னு பெருமையா சொல்ல.......

அப்ப என் கால்ல இருக்குற பேர படின்னு குதிர
சொல்லுச்சாம்.

ஓநாய், நரிய நக்கலா பாத்துகிட்டே, குதிரை கிட்ட போச்சாம்,
குதிரை ஒரு கால மட்டும் தூக்கி, ஓநாய் கிட்டக்க வந்ததும், அது முகத்துல ஓங்கி ஒரு உத விட்டுச்சாம்.

அப்புறம் என்ன நரி முத ஆளா ஓடிபோக, முகத்துல ரத்தத்தோட ஓநாய், நரி பின்னாலேயே
ஓடிச்சாம்..........அவ்ளோதான்.


நீதி:..........................................



டிஸ்கி: என்ன இது நீதின்னு போட்டுட்டு ஒன்னும் எழுதலைன்னு
பாக்குறீங்களா!!!!!!

கத சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது..............ஹி..............ஹி.........

********************************************************


அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Thursday, April 8, 2010

பேருந்து காதல் - தொடர்பதிவு

பேருந்து காதல், தொடர் பதிவுக்கான பேருந்தை, ஓட்ட சொல்லி என் கையில் பேருந்தை
கொடுத்த நண்பர் பிரவின்குமார் அவர்களுக்கு நன்றி.

போலாம் ரைட்டுன்னு, கண்டக்டர் சவுண்ட் விட்டதும், பேருந்து நகர
ஆரம்பிக்க, நிறுத்துங்கன்னு ஒரு குரல், அது அழகிய பெண்ணோட
குரல்ன்னு நீங்க கற்பனை பண்ணின்னா ஐ'ம் சாரி.........
அது கரகரப்பான ஆண் குரல்.

கிரீச்சிட்டு பஸ் நிற்க, ஏறியது சாட்சாத் (அழகிய) இளம்பெண்!!
மலரை மொய்க்கும் வண்டுகளாய், அனைவரின் கண்களும்
அவளிடமே. (பஸ்ஸ நிறுத்த சொல்லி குரல் விட்டது
அவளின் அப்பா)

மறு நாள் அதே நேரம், அதே பஸ் ஆனால் அதே
பெண் வரவில்லை :(

மறு வாரம் சோகமாக என் பேக்கை ஸ்டைலாக(!!!) அணிந்து கொண்டு அதே பஸ்சில் ஏறினேன், அட
என்ன வியப்பு, அன்று அதே பெண் மீண்டும் வந்தாள்.

அவளின் கடைக்கண் பார்வைக்கு அனைவரும் ஏங்கி கிடக்க
என் அருகே வந்தாள், என் ஹார்ட் பீட் அருகில் நின்ற எனது நண்பனுக்கே கேட்டது.

புன்னகை பூவை
உதிர்த்தது
அந்த நடமாடும்
பூச்செடி(!!!)

ஹாய் என்றேன் , இந்த ஒத்த வார்த்தையை
சொல்வதற்குள் என் நாக்கு மேல் தாடையில் ஒட்டி
கொண்டு வர மாட்டேன் என்று அடம் பிடித்தது,
வலு கட்டாயமாக தாடையில் இருந்து நாக்கை பிரித்து, அதன்பின் மீண்டும் ஹலோ சொன்னேன்.

இந்த பஸ்ல எப்பவும் இப்படிதான் கூட்டமா இருக்குமா
என்று கேட்டாள், ஆமா நீங்க தினமும் இதில் வருவதாக
இருந்தால் சொல்லுங்கள், என் நண்பன் இடம் பிடித்து
வைப்பான்(!!) என்றேன்.

தேங்க்ஸ் என்றாள், அப்படியே ரெண்டு சீட்டா போட்டு வைக்க
சொல்லுங்க என்றாள்...........

அதற்கப்புறம் அவள் பேசியது எதுவும் என் காதில்
விழவில்லை, அப்போ நான் தலையை ஆட்டி கொண்டே இருந்ததை
பார்த்துதான் டைரக்டர் சசி, அந்த சீனை சுப்ரமணியபுரதில்
நுழைத்து விட்டார் (காப்பி ரைட்ஸ் இனிமே போட்டுக்கணும்ப்பா!!)

அன்று இரவு வெள்ளை உடை தேவதைகளுக்கு நடுவே
என் தேவதையும் இருந்தது.

மறு நாள், கண்ணாடி பார்க்கும்பொழுது இன்னும் அதிக
அழகாக(!!!!) இருந்தேன்.

வழக்கமாக, புகையை கக்கி கொண்டே வரும் பேருந்து அன்று
மலர்களை தூவி கொண்டே வந்தது, நாரசாரமாக கேட்கும்
நண்பனின் குரல் அன்று எஸ்.பி.பாலாவின் தேன் குரல்
போல இருந்தது.

என் தேவதை ஏறும் ஸ்டாப்பில் வண்டி நின்றது, இன் இருதய
துடிப்பும் ஒரு நிமிடம் நின்று பின் இயங்கியது, என் தேவதை
ஏறியது, அவளுடன் இன்னொரு பெண்ணும்.

என்னை நோக்கி வந்தாள், என் நண்பனும், நானும் எழுந்து
கொண்டு அந்த இருக்கையில் அவளை அமர சொன்னேன்,
நன்றி புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு அமர்ந்தது, தீபா இங்கே உக்காரு, என்றாள்
உடன் வந்த பெண்ணை பார்த்து.

அந்த பெண்ணோ நான் ஜன்னல் ஓரம்தான் உக்காருவேன், நீ
இந்த பக்கம் வா "மம்மி" என்று சிணுங்கியது.

என் காலடியில் மட்டும் பூமி (பஸ்) இரண்டாக பிளந்து அப்படியே
என்னை விழுங்கியது போல் இருந்தது........



:(







:(











ஏமாந்திங்களா!!!!!!

நான் படிச்சது எல்லாம் உள்ளூரிலேதான், தொழில்நுட்ப கல்லூரி
மட்டும் 15km தள்ளி இருந்த இன்னோர் ஊரில்.

அங்கு சென்று வர
என் அப்பா வேலை பார்த்த நிறுவனத்தில் மினி பஸ் வசதி
கொடுத்து இருந்தார்கள், அதில்தான் சென்று வருவேன். (அந்த
பேருந்தை "நாய் வண்டி" என என் நண்பர்கள் கேலி செய்வர், அந்த "ரகசியத்தை" இங்க நான் சொல்ல மாட்டேன்)

ஆகவே, எனக்கு பேருந்து காதல் "வாய்ப்பு" அமையவில்லை.

இந்த தொடரை எழுத வேண்டி, இப்படி
ஒரு "கதை" எழுதினேன்.


எப்பூடி!!!!!!!


டிஸ்கி 1:முந்தைய இடுகையின் போதே (விருது வழங்கும் விழா)
நிறய நண்பர்கள் ஆசையா பரோட்டா கேட்டாங்க, அப்படி
கேட்டவங்க, கேக்காதவங்களுக்கும் சேர்த்து பரோட்டா
சுட்டு வச்சிருக்கேன், இருந்து நிதானமா சாப்பிட்டு போங்க!!!















டிஸ்கி 2 :ருசியா இருந்ததா!!!!!!!!!! :))
*******************************************************


அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Monday, April 5, 2010

விருது வழங்கும் விழா

இடம்:சைவகொத்துப்பரோட்டா ஸ்டால்

நபர்கள்:அப்பாவி அங்கு(அ.அ), பிலிம்பித்துக்குளி(பி.பி), சேட்டு
இவர்களுடன் உங்கள்
அபிமான(???!!!!) சைவகொத்துப்பரோட்டா(எஸ்.கே.பி) ,
மற்றும் மதிப்பிற்குரிய நீங்கள்.

சேட்டு:இன்னாப்பா உங்க கடையாண்ட ஒரே கும்பலா கீது.

பி.பி:வாய்யா சேட்டு, உன்கு மேட்டரே தெரியாது, இன்கு நம்ம
கடையில விர்து கொடுக்கறாங்கோ........

அ.அ:நமக்கு கொடுப்பாகளா அண்ணே.

பி.பி:வாடா பையா, இது அல்லாம் பதிவு எழுதுறாங்கோ
பாரு அவுங்களுக்கு கொடுப்பாங்கோ.

சேட்டு:நைனா, பொதுவா விருது வழங்குற விழான்னா பாட்டு
டான்ஸ் எல்லாம் இருக்குமே, இங்க எப்படி....க்கீதா...

பி.பி:அட நீ வேற எங்க ஆளு இருக்கானே மிக்கி மண்டையன்
யாரா.....அதான்ப்பா எஸ்.கே.பி அது
சொல்து, "கலை நிகழ்ச்சி" வைச்சா கடை கட்டுபடியாவாதாம்.

எஸ்.கே.பி: (வருகை) என்ன அங்க பேச்சு...........

பி.பி:வாங்கோ தம்பி, இப்பதான் ஒங்க "பெருமைகளை"
நம்பல் சேட்டுகிட்ட சொல்லிக்கிட்டு இருந்துச்சு...ஹி.....ஹி....

எஸ்.கே.பி:வேலையை பாருங்க. அங்கு, நம்ம கஸ்டமர்ஸ் எல்லாம்
வர்ற நேரமாச்சு, சேர் எல்லாம் ஒழுங்கு பண்ணு,
பி.பி அண்ணே அந்த விருதுகளை எல்லாம்
கொண்டு போய் மேடையில வையுங்க.

அ.அ:அண்ணே, எல்லோரும் வந்திட்டாங்க விழாவ
ஆரம்பிங்க.

எஸ்.கே.பி:அன்பின் பதிவர்களே, இனிய வாசகர்களே(!!!!)
நீங்கள் அனைவரும் எனக்கு கொடுத்த,
கொடுத்து கொண்டு இருக்கிற, கொடுக்க
போகிற அன்பையும், ஆதரவையும் நினைக்கையில்
எனக்கு கண்கள் பனிக்கிறது......

பி.பி: பாரு கையில மைக் கிடச்ச வுடனே என்னமா
பேசுறாரு.

எஸ்.கே.பி:என்னை மதித்து
சகோதரிகள், அன்புடன் மலிக்கா, திவ்யாஹரி
மற்றும் அன்புச்சகோதரர் ஸ்டார்ஜன் அவர்களும்
விருது(கள்) கொடுத்தார்கள்.

அவற்றை நான், நம்
நண்பர்கள் சிலருடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பி.பி :பாருய்யா!!! "விழைகிறாராம்" தமிழ் நாட்டியம்
ஆடுது.

எஸ்.கே.பி:கிழே நான் குறிப்பிட்டிருக்கும் அன்பின் நட்புகள் எங்கு
இருந்தாலும் மேடைக்கு வந்து இந்த விருதுகளை பெற்று
கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

முதலாவதாக Sunshine award goes to:





இராமசாமி கண்ணன்
ரகு
நாடோடி (ஸ்டீபன்)
DREAMER
Dr.P.Kandaswamy
Dr.எம்.கே.முருகானந்தன்
தமிழ் உதயம்
கவிதை காதலன்
பிரவின்

(அம்மாடி மூச்சு வாங்குது......) இவங்க எல்லோருக்கும் ஜோரா
கை தட்டுங்க, அப்படியே என்னோட வாழ்த்துக்களும்.

எங்க ஓடுறீங்க..........இருங்க இன்னொரு விருது இருக்குல்ல....

இரண்டாவதாக, King award goes to:








அண்ணாமலையான்
அன்புடன் மலிக்கா
கொஞ்சம் வெட்டிப்பேச்சு (சித்ரா)
தேனம்மைலக்ஷ்மணன்
ப்ரியமுடன் வசந்த்
திவ்யாஹரி
ராஜு
VISA
வந்தே மாதரம் (சசிகுமார்)
Padma
ஜலீலா
ஹுசைனம்மா

இவங்களுக்கும் ஜோரா கை தட்டுங்க.

எஸ்.கே.பி:இந்த விழாவினை சிறப்பாக நடத்த உதவிய அ.அ, பி.பி மற்றும் சேட்டுக்கும் என் நன்றிகள்.

பி.பி:(மனதிற்குள்) உன் நன்றி இருக்கட்டும், மூணு மாச சம்பள பாக்கியை எப்ப தருவ.

எஸ்.கே.பி:என்ன பி.பி அண்ணே, என்ன யோசனை.

பி.பி:விழா நல்லா நந்து முஞ்சத நினைச்சேன் தம்பி, மன்சு
சந்தோசாம்மா இற்கு.

எஸ்.கே.பி:சேட்டு கூட சேந்து பேசிப்பேசி, சென்னை வட்டார மொழியை அவர் கத்துகிட்டாரு, நீங்க அவர் பாசையில
பேசுறீங்க.

பி.பி: ஹி........ஹி............

அ.அ:அண்ணே இன்னைக்கு பரோட்டா போடலையே....

எஸ்.கே.பி:ரெண்டு நாள் கழிச்சி போடலாம். மிக்க நன்றி
நண்பர்களே, பொறுமையுடன் இருந்து விழாவை சிறப்பித்த
உங்கள் அனைவருக்கும் நன்றி.

*********************************************************




அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)