Monday, December 27, 2010

மன் மதன் அம்பு - கா.மே.நா

படத்தை பார்ப்பதற்குமுன், நம் பதிவர்களின் விமர்சனங்களில் கடைசி பாராக்களை மட்டுமே படித்தேன்.
அப்போதான் படத்தை "அனுபவித்து" பார்க்க முடியும் என்பதால். (யாருப்பா அது கடைசி பாராவுக்கு ஓடுறது)

கதைபற்றி அனைவரும் தேவையான அளவுஅலசிவிட்டதால் என்னை "பாதித்த"
சில காட்சிகளை பகிர்ந்து கொள்கிறேன்.

மாதவன் மற்றும் த்ரிஷா காரில் சென்று கொண்டே விவாதிக்கும் காட்சி அதன்பின் நடக்கும் விபத்து, மிக சாதாரணமாய் தோன்றினாலும்
அந்த காட்சியே கதையின் திருப்பமாய் வருவது எதிர்பாராதது.

ஆரம்ப காட்சிகள் மிக சீரியஸ் ஆக இருப்பதால் மிக அழுத்தமான காதல் கதை வரப்போகிறது என எதிர்பார்த்தேன். கமல்
என்ட்ரி ஆனபின்தான் கதைக்களன் நகைச்சுவையில் பயனிக்கப்போகிறது என்பது தெரிந்தது.
வாரத்தைகளில் கிச்சுகிச்சு காட்ட முயற்சி செய்துள்ளார்கள். சில இடங்களில் வொர்க் அவுட் ஆகிறது. பல இடங்களில் "ஞே".



தூங்கும்போது அந்தச்சிறுவன் கட்டைவிரல் ஆட்டும் காட்சி ஹா...ஹா...
கமலின் நண்பனாக வீடியோ சாட்டில் வரும் அந்த மொட்டையும் ஊர்வசியும் வரும் காட்சிகள் செண்டிமெண்ட்.
அந்த மொட்டைதான் ரமேஷ் அரவிந்த் என்பது படம் பார்க்கும்போது
தெரியவில்லை, படம் பார்த்தபின் நம் பதிவர்களின் விமர்சனத்தை மீண்டும் முழுமையாக படித்த பின்பு தெரிந்தது.

உஷாஉதூப், ஓவியா எல்லாம் வந்து போகிறார்கள்.

மாதவன், கமலிடம் போன் பேசிக்கொண்டே டிரைவ் செய்யும்போது "மாமாவிடம்"
மாட்டிக்கொள்ளும் காட்சி கலகல. நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டு இருக்கும் அந்த மலையாளம் பேசும் ஜோடிகள் வரும் சீன்களில் சுத்தமாக நகைச்சுவை இல்லை, முடிவில் வரும் சில காட்சிகள் தவிர்த்து.

த்ரிஷா சோகமாகவே வருகிறார், சொந்த குரலில் பேசி இருக்கிறார்.
கமலும், அவரும் பேசிக்கொள்ளும் ஒரு காட்சியில் த்ரிஷா "நன்றி" என்று
சொல்ல அதற்கு கமல் நீங்கள் நடிக்கும் படங்களில் இது மாதிரி தமிழே வர
மாட்டேங்குதே என்று கேட்பார். ஆனால் இதே படத்தில் நிறைய வசனங்கள் ஆங்கிலத்தில்தான் வரும்!

ஊர்வசி சீரியல் நடிகை மாதிரி கண்ணை கசக்கி கொண்டேதான் இருக்கிறார், அவ்வளவு சோகத்திலும்
சாட்டிங்கில் நிஷாவை (த்ரிஷா) பார்த்தவுடன் மிக கலகலப்பாக நான் உங்க "பேன்" என்பார்.

கதை, திரைக்கதை, வசனம்: கமல்ஹாசன்.
இயக்கம் :K .S .ரவிக்குமார்
இசை :தேவிஸ்ரீபிரசாத்
ஒளிப்பதிவு:மனுஷ்நந்தன்.

மன் மதன் அம்பு : காஸ்ட்லி மேடை நாடகம்

Picture Thanks: yahoo.com

Monday, December 13, 2010

ஓவர்

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்ததாரும் இல்லையே...
என் மொபைல் சிணுங்கியது, மணி பார்த்தேன் அதிகாலை மூன்று மணி.
இந்த நேரத்தில் அழைப்பது...அட! எங்கள் டீம் லீடர்தான்.
அகாலவேளையில் அழைத்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக முக்கியமான
ப்ராஜெக்ட் ஒன்று காத்திருக்கிறது.

சொல்லுங்க பாஸ் என்றேன் உற்சாகமாய்...

சொன்னார்...

கவனமாக கேட்டுக்கொண்டேன், பேசி முடித்த மூன்று நிமிடம் கழித்து
MMS - வந்தது.

அதன்பின் தூக்கம் வரவில்லை, நட்சத்திரத்தை எண்ணி பொழுதை
கழிக்கலாம் என முடிவு செய்து மாடிக்கு சென்றேன். கதவை திறந்ததும்
மார்கழி குளிர் சில்லென பனிக்கட்டி வைத்த மாதிரி தாக்கியது.
குளிர் தாங்காமல் உடல் நடுங்கியது, நட்சத்திரங்களுக்கு குட் நைட் சொல்லிவிட்டு நேரே சமையலறைக்குள்
புகுந்தேன்.

சூடாக இருந்த காபி குளிருக்கு மிக இதமாய் இருக்க, டீவியிடம் சரணடைந்தேன் மியூசிக் சேனலில் பல்லாங்குழியின் வட்டத்தில் பார்த்த ஒற்றை நாணயத்தைப்பற்றி சினேஹா சிலாகித்து கொண்டிருந்தார்.

குளித்தால் குளிரை விரட்டலாம் போல இருந்தது...குளித்தேன்.
இப்போது, என்னை கொஞ்சம் கவனி என்றது வயிறு. இரவு வாங்கி வந்த ப்ரெட்டை டோஸ்ட் செய்து சாப்பிட்டுவிட்டு மணி
பார்த்தேன் 4 .20 Am.

வீட்டைபூட்டிவிட்டு பைக்கை உதைக்க, அதிகாலைப்பனியுடன் கொண்டிருந்த நட்பினால் கிளம்ப மறுத்தது. ஆத்திரத்தில் ஓங்கி விட்ட உதைக்குப்பின் கிளம்பியது.

சாலை சுத்தமாக கழுவியது போல் இருந்தது, ட்ராபிக் இல்லாத சாலையில் பயணிப்பது தனி சுகம்தான்,
விதவிதமான எரிச்சலூட்டும் ஹாரன் சத்தங்கள்...வூட்ல சொல்லிட்டு வந்திட்டியா போன்ற
வசனங்கள் இன்றி, சாலை மிக அமைதியாய் இருந்தது.
விளக்கு கம்பங்கள் பனியில் குளித்து கொண்டே உற்சாகமாய் தங்கள் பணியினை செய்து கொண்டிருந்தன.

நிதானமாய் சென்றேன், இதே வேகத்தில் சென்றால் கூட இன்னும் பத்து நிமிடத்தில் பீச்சை அடைந்து
விடலாம். வானத்தில் பிளாஷ் லைட் அடித்து கொண்டிருப்பதை பார்த்தால் மழை வரும்போல் இருந்தது.

பைக்கை ஓரமாய் நிறுத்திவிட்டு ஜோக்கிங் ட்ராக்கின் அருகாமையில் இருந்த கிரவுண்டில் வார்ம்அப் பயிற்சிகளை ஆரம்பித்தேன். சற்று நேரம் கழிந்த பின்னர்,
குளிரை மீறி உடல் வியர்க்க ஆரம்பித்திருந்தது.

இப்போது பீச்சில் சில கார்களும், பைக்குகளும் முளைக்க ஆரம்பித்திருந்தது.

ஈரமாயிருந்த சிமெண்ட் பெஞ்சை துடைத்துவிட்டு உட்கார்ந்தேன்.
சற்றே மூச்சு வாங்கியது. கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலாம் போல இருந்தது, என் பையில்
துலாவிய பின்புதான் தெரிந்தது, தண்ணீர் பாட்டிலை எடுத்து வரவில்லை என்பது. ஆயாசமாய் செய்வதறியாது சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
வந்திருந்த சொற்ப "தொப்பைகளும்" அவற்றை கரைக்க வேண்டி கடமையே கண்ணாய், ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுதுதான் அவரை கவனித்தேன், சோம்பல் முறித்துக்கொண்டே கார் டிக்கியில் உட்கார்ந்தவாறே ஷூ அணியும் முயற்சியில் இருந்தார்.

அவரை நோக்கி நிதான நடை போட்டேன், சூரியபந்து கடலில் இருந்து லேசாக தலை தூக்க ஆரம்பித்து இருந்தது, மேக மூட்டமாய் இருந்ததால்
சூரியனாரின் வெளிச்சம் இருண்ட கிணத்துக்குள், இரண்டு கட்டை டார்ச் லைட் அடித்தது போல்
பலவீனமாய் இருந்தது.


அவருக்கு அருகில் சென்று நின்ற பொழுதும் அவர் என்னை கவணித்ததாய் தெரியவில்லை.
என் மொபைலை எடுத்து மீண்டும் ஒருமுறை MMS -ல் படத்தை பார்த்து உறுதி செய்து விட்டு...

எங்கள் லீடர் கொடுத்த பிளான்படி, அவரை "அதா"க்கினேன்.

உற்சாகமாய் எங்கள் லீடரை தொடர்பு கொண்டு "ஓவர்" என்றேன்.
*************************************************

Picture Thanks: freelargephotos.com/

Monday, December 6, 2010

சிக்கு புக்கு கலர்புல் கோச்

செவியை கிழிக்கும் கூச்சல்கள், பன்ச் டயலாக்ஸ் இல்லாமல் மீண்டும் ஒரு படம் என்பதே சற்று ஆறுதலாக இருந்தது. நன்றி இயக்குனர் K. மணிகண்டன்.

கதை என்று பார்த்தால் 1985 -இல் அப்பாவின் காதல் (ஆர்யா, ப்ரீதிகா)
2010 -இல் மகனின் காதல்(தானா என்று யோசிக்க வைக்கிறது)
இரண்டும் என்னவாகிறது என்பதுதான்.

உண்மையில் முதல் ஹீரோ போடோக்ராபில் அசத்தி இருக்கும் R.B. குருதேவ்தான். காரைக்குடி, குன்னூர், கர்நாடகா, லண்டன் காட்சிகள் அனைத்தும் கண்ணுக்கு குளுமை, கை தேர்ந்த ஓவியன் வரைந்து வைத்த ஓவியம் போல் இருக்கிறது காட்சிகள்.



1985 ஆர்யாவின் கெட்டப்பும் நடிப்பும் சாந்தமாய் இருக்கிறது, தாத்தா ரவிச்சந்திரன், ஆச்சி சுகுமாரி மற்றும் நிறய நடிகர்கள் பட்டாலங்களுக்கிடையே ஆர்யா - ப்ரீதிகா காதலை சற்றே நகைச்சுவை கலந்து காட்சிகளை நகர்த்தி உள்ளார்கள்.
ஆனால் அம்மணி ப்ரீதிகாவின் முகம் இந்த கூட்டத்தில் ஒட்டவில்லை,
வேற்றுகிரகவாசி போல் இருக்கிறது.




ட்ரைனிங் கேம்பில் ஆர்யாவின் நண்பனாக வரும் நபர்(பெயர் தெரியவில்லை) தன் காதல் ஒருதலையாகிப்போனதை தெரிந்து கொண்ட பின்னர் அந்த வலியை காட்டும் காட்சியில் மனிதர் அசச்தி இருக்கிறார்.
சந்தானம், வையாபுரி, பாண்டு வந்து போகிறார்கள்.

2010 - காட்சிகள் அவ்வளவாக ஒட்டவில்லை, ஸ்ரேயாவின் கேரக்டர் ஓவர் அலட்டலாய் இருப்பதால் எரிச்சல்தான் மிஞ்சுகிறது.
ஆனால் ட்ரெயின், லாரி, சாலையில் நடைப்பயணம் என்று அவர்கள் செல்லும் காட்சிகள்
கண்ணுக்கு குளுமை!

இசை, ஹரிஹரன் - லெஸ்லி பாடல்களும், பின்னணியும் சுமார் ரகமே மனதில் ஒட்டவில்லை.

1985 காதலை மட்டுமே
எடுத்துக்கொண்டு கதையை நகர்த்தி இருந்தால் இன்னும் சிறப்பாக
வந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

மொத்தத்தில், நீராவி எஞ்சின் இதம் (1985 காட்சிகள்)
எலெக்ட்ரிக் எஞ்சின் கலர்புல் (2010 காட்சிகள்)

Picture thanks to:indiaglitz.com

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)