Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Wednesday, May 19, 2010

வைரமும், வஞ்சியும்

இடம்:சைவகொத்துப்பரோட்டா ஸ்டால்

நபர்கள்:அப்பாவி அங்கு(அ.அ), பிலிம் பித்துக்குளி (பி.பி), சேட்டு,
சைவகொத்துப்பரோட்டா (எஸ்.கே.பி) மற்றும் சிறப்பு
விருந்தினர்களாகிய நீங்கள்.

சேட்டு:இன்னாப்பா, இன்னைக்கி கடையில ஒரே ஜொலிப்பாகீது!!

பி.பி: வாய்யா சேட்டு, நம்ம மிக்கி மண்டையனுக்கு ஜெய்லானி வைர விருது
கொடுத்திருக்காங்கோ. இப்போ "இது" அதை பகிர்ந்து கொள்ளப்போவுதாம்!!

அ.அ:அண்ணே இத நாம லவுட்டிட்டு போய் வித்துரலாமா.

பி.பி:மௌஸ் மண்டையா, இது நட்புணர்வுடன் கொடுத்ததுடா, இதுக்கு மதிப்பு போட
முடியாதே!!

எஸ்.கே.பி:என்னண்ணே, ஏதோ மதிப்பு அப்படி, இப்படின்னு பேச்சு அடிபடுது.

பி.பி:வாங்க........தம்பி.......இந்த வைர விருத பத்திதான்
பேசிகிட்டு இருக்கோம்.

எஸ்.கே.பி:ஆமாண்ணே, இதோ வந்திட்டாங்க நம்ம கஸ்டமர்ஸ்!!
சிலரிடம் இதை, பகிர்ந்து கொள்ளலாம்ன்னு நினைக்கிறேன். சிலரோட
வலையிலும் இந்த வைரத்தை பதிக்க உள்ளேன்!! ஜில்தண்ணி
கிறுக்கல்கள்
பிரசன்னா
Hanif Rifay
ப்ரின்ஸ்
r.v.saravanan
Mohan

எடுத்து கொள்ளுங்கள் நண்பர்களே!!
************************************
சேட்டு:யோவ் பி.பி சோக்கா குந்திநீனு கீதே பொண்ணு, யாருப்பா
அது!!

பி.பி:ஓ.......அதுவா.......நம்ம மருத்துவம் பேசுகிறது ! துமிழ் இருக்காங்களே, அவுங்க ரொம்ப நல்லவங்க. உபயோகமான
மருத்துவ தகவல்களும் கொடுத்து, அத்த நம்ம மிக்கி மண்டையன் போய் படிச்சதுக்கு நன்றி சொல்லி
கொடுத்திருக்காங்கப்பா!!

அ.அ: அதாவது கரும்பு தின்ன கூலி கொடுத்திருக்காங்க, அப்படிதானே!!

பி.பி:அதேதாண்டா மவுஸ் மண்டையா!!

எஸ்.கே.பி:அன்போடு எனக்கு விருது கொடுத்தவர்களுக்கு
நன்றி சொல்லும் விதமாக "துமிழ்" அவர்கள் எனக்கு கொடுத்த
இந்த நன்றி பரிசை எனக்கு விருது கொடுத்த நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன் மலிக்கா
திவ்யாஹரி
ஸ்டார்ஜன்
வந்தேமாதரம் (சசிகுமார்)
ஜெய்லானி

வாருங்கள் நண்பர்களே, என் நன்றி பரிசை எடுத்து கொள்ளுங்கள்.
***********************************
பி.பி:மிக்கி மண்டையன் நமக்கு ஏதாவது பரிசு கொடுப்பானா?

எஸ்.கே.பி:ரொம்ப நாளா லீவ் கேட்டு பி.பி, அ.அ, ரெண்டு பேரும் அடம் பிடிச்சதால நம்ம கடைக்கு ஒரு மாசம் லீவு!!

பி.பி;ஹையோ........இந்த அநியாயத்த கேட்க யாருமே இல்லையா!!
நாங்க எப்ப லீவ் கேட்டோம்!! இந்த மிக்கி மண்டையன்
ஊருக்கு போறான், நைசா எங்கள கோத்து விட்டு போறதப்பாரு.

எஸ்.கே.பி:என்னண்ணே சந்தோசமா.........

பி.பி:(முணுமுணுப்பாக) எங்களுக்கு சந்தோசமோ இல்லையோ,
நம்ம கஸ்டமர்ஸ் எல்லாம் உன் தொல்லை இல்லாம
நிம்மதியா இருப்பாங்க........

ஹி...........ஹி........."ரொம்ப சந்தோசம்" எஸ்.கே.பி.
*********************************
டிஸ்கி:ஹி......ஹி.....விடுமுறையில் செல்கிறேன். அதனால் வலை உலகில், ஒரு மாதம் இடைவேளை. முடிஞ்சா அப்பப்ப "வருவேன்" என்பதையும் கூறிக்கொள்கிறேன் :)) விடுமுறை கழிந்த பின்னர்
மீண்டும் சந்திப்போம்.
அனைத்து நண்பர்களுக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்!!
********************************************


Monday, April 5, 2010

விருது வழங்கும் விழா

இடம்:சைவகொத்துப்பரோட்டா ஸ்டால்

நபர்கள்:அப்பாவி அங்கு(அ.அ), பிலிம்பித்துக்குளி(பி.பி), சேட்டு
இவர்களுடன் உங்கள்
அபிமான(???!!!!) சைவகொத்துப்பரோட்டா(எஸ்.கே.பி) ,
மற்றும் மதிப்பிற்குரிய நீங்கள்.

சேட்டு:இன்னாப்பா உங்க கடையாண்ட ஒரே கும்பலா கீது.

பி.பி:வாய்யா சேட்டு, உன்கு மேட்டரே தெரியாது, இன்கு நம்ம
கடையில விர்து கொடுக்கறாங்கோ........

அ.அ:நமக்கு கொடுப்பாகளா அண்ணே.

பி.பி:வாடா பையா, இது அல்லாம் பதிவு எழுதுறாங்கோ
பாரு அவுங்களுக்கு கொடுப்பாங்கோ.

சேட்டு:நைனா, பொதுவா விருது வழங்குற விழான்னா பாட்டு
டான்ஸ் எல்லாம் இருக்குமே, இங்க எப்படி....க்கீதா...

பி.பி:அட நீ வேற எங்க ஆளு இருக்கானே மிக்கி மண்டையன்
யாரா.....அதான்ப்பா எஸ்.கே.பி அது
சொல்து, "கலை நிகழ்ச்சி" வைச்சா கடை கட்டுபடியாவாதாம்.

எஸ்.கே.பி: (வருகை) என்ன அங்க பேச்சு...........

பி.பி:வாங்கோ தம்பி, இப்பதான் ஒங்க "பெருமைகளை"
நம்பல் சேட்டுகிட்ட சொல்லிக்கிட்டு இருந்துச்சு...ஹி.....ஹி....

எஸ்.கே.பி:வேலையை பாருங்க. அங்கு, நம்ம கஸ்டமர்ஸ் எல்லாம்
வர்ற நேரமாச்சு, சேர் எல்லாம் ஒழுங்கு பண்ணு,
பி.பி அண்ணே அந்த விருதுகளை எல்லாம்
கொண்டு போய் மேடையில வையுங்க.

அ.அ:அண்ணே, எல்லோரும் வந்திட்டாங்க விழாவ
ஆரம்பிங்க.

எஸ்.கே.பி:அன்பின் பதிவர்களே, இனிய வாசகர்களே(!!!!)
நீங்கள் அனைவரும் எனக்கு கொடுத்த,
கொடுத்து கொண்டு இருக்கிற, கொடுக்க
போகிற அன்பையும், ஆதரவையும் நினைக்கையில்
எனக்கு கண்கள் பனிக்கிறது......

பி.பி: பாரு கையில மைக் கிடச்ச வுடனே என்னமா
பேசுறாரு.

எஸ்.கே.பி:என்னை மதித்து
சகோதரிகள், அன்புடன் மலிக்கா, திவ்யாஹரி
மற்றும் அன்புச்சகோதரர் ஸ்டார்ஜன் அவர்களும்
விருது(கள்) கொடுத்தார்கள்.

அவற்றை நான், நம்
நண்பர்கள் சிலருடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பி.பி :பாருய்யா!!! "விழைகிறாராம்" தமிழ் நாட்டியம்
ஆடுது.

எஸ்.கே.பி:கிழே நான் குறிப்பிட்டிருக்கும் அன்பின் நட்புகள் எங்கு
இருந்தாலும் மேடைக்கு வந்து இந்த விருதுகளை பெற்று
கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

முதலாவதாக Sunshine award goes to:





இராமசாமி கண்ணன்
ரகு
நாடோடி (ஸ்டீபன்)
DREAMER
Dr.P.Kandaswamy
Dr.எம்.கே.முருகானந்தன்
தமிழ் உதயம்
கவிதை காதலன்
பிரவின்

(அம்மாடி மூச்சு வாங்குது......) இவங்க எல்லோருக்கும் ஜோரா
கை தட்டுங்க, அப்படியே என்னோட வாழ்த்துக்களும்.

எங்க ஓடுறீங்க..........இருங்க இன்னொரு விருது இருக்குல்ல....

இரண்டாவதாக, King award goes to:








அண்ணாமலையான்
அன்புடன் மலிக்கா
கொஞ்சம் வெட்டிப்பேச்சு (சித்ரா)
தேனம்மைலக்ஷ்மணன்
ப்ரியமுடன் வசந்த்
திவ்யாஹரி
ராஜு
VISA
வந்தே மாதரம் (சசிகுமார்)
Padma
ஜலீலா
ஹுசைனம்மா

இவங்களுக்கும் ஜோரா கை தட்டுங்க.

எஸ்.கே.பி:இந்த விழாவினை சிறப்பாக நடத்த உதவிய அ.அ, பி.பி மற்றும் சேட்டுக்கும் என் நன்றிகள்.

பி.பி:(மனதிற்குள்) உன் நன்றி இருக்கட்டும், மூணு மாச சம்பள பாக்கியை எப்ப தருவ.

எஸ்.கே.பி:என்ன பி.பி அண்ணே, என்ன யோசனை.

பி.பி:விழா நல்லா நந்து முஞ்சத நினைச்சேன் தம்பி, மன்சு
சந்தோசாம்மா இற்கு.

எஸ்.கே.பி:சேட்டு கூட சேந்து பேசிப்பேசி, சென்னை வட்டார மொழியை அவர் கத்துகிட்டாரு, நீங்க அவர் பாசையில
பேசுறீங்க.

பி.பி: ஹி........ஹி............

அ.அ:அண்ணே இன்னைக்கு பரோட்டா போடலையே....

எஸ்.கே.பி:ரெண்டு நாள் கழிச்சி போடலாம். மிக்க நன்றி
நண்பர்களே, பொறுமையுடன் இருந்து விழாவை சிறப்பித்த
உங்கள் அனைவருக்கும் நன்றி.

*********************************************************




அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)