Tuesday, December 15, 2009

பாட்டி வைத்தியம்

ஒரு பொருள் எளிதாக கிடைத்து விட்டால் அதன் அருமைகள் நமக்கு தெரிவதில்லை, நாம தினமும் கடந்து போற இடங்களில் இந்த மரத்தினை கண்டிப்பாக ஒரு இடத்திலாவது பார்த்திருப்போம். அந்த மரத்திற்கு இத்தனை மருத்துவ குணங்கள் இருப்பது தெரிய வந்தந்தும் வியப்பாக இருக்கிறது.

நாம எல்லாம் இப்ப பாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு தாவியதாலும், நடக்கிறத மறந்ததாலும், நிறய நண்பர்கள் "பொட்டி தட்டுற" வேலையில் இருப்பதாலும், தொல்லை காட்சி முன் தவம் இருப்பதாலும் வந்த விளைவு "குண்டுஸ்" வியாதி (அதாங்க உடல் பருமன்)

நம்மில் சிலருக்கு உடல் பருமன் ஒரு வகை நோய் என்பதே புரிவதில்லை. ஒல்லிகளை பார்த்தவுடனே, என்னபா ஆச்சு உடம்புக்கு சரி இல்லையா நல்லா சாப்பிடு, உடம்ப தேத்து என்று கேட்காமலே அட்வைஸ்களையும் அள்ளி விடுவர். அவர்களும் நமக்கு "ஏதோ வியாதி" வந்திருச்சோ அப்படின்னு கவலைப்பட்டு அதனாலேயே நோயும் வந்திரும்.

டாபிக்கே மாறிபோச்சா, இல்லைங்க இந்த பிரச்சினைக்கு இந்த மரத்திலே தீர்வு இருக்கு. (கிழே சொல்ல பட்டவை நான் புத்தகத்தில் படித்தது)

அட என்ன மரம்ப்பா அதுன்னு கேட்குறீங்களா, அதாங்க "வேப்ப மரம்."

**உடல் பருமனால் அவதிபடுவோர், தினமும் வேப்ப மரத்தின் பூவை, குடிக்கும் தண்ணீரில் ஊற வைத்து பின் அந்த நீரைக்குடித்தால் உடம்பு குறையும்.

**சிலர் அடிக்கடி ஏப்பம்(போடுறது இல்ல!!!) விட்டு கொண்டே இருப்பாங்க, இதுக்கு வேப்ப மரத்தின் பூவை வறுத்து பின்பு அதனை பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் இந்த தொல்லை நீங்கும்.

**இதன் பூ பித்ததினை தணிக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறதாம்.

நாம் வெளியூர் பயணங்கள் செல்லும் வழியில் பார்த்திருப்போம், வெள்ளரிக்காய் விற்பதை. இதிலும் மருத்துவ குணம் இருக்கிறது.

**இதில் நிறய நீர்சத்து இருப்பதால், தொண்டை வரட்சியினை போக்கும், பசியை உண்டாக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

**வெண் குழல் வத்தி" (அதான் சிகரெட்) பிடிப்பவர்களின் குடல்ல இருக்கிற நிகொடின்ன இது அழிக்க கூடிய ஆற்றல் கொண்டது.

(அதுக்ககாக தினமும் "ஊதி" தள்ளிக்கிட்டு அப்புறம் " வெள்ளரிக்காய் சாப்பிட்டுக்கலாம்னு
நினைக்காதீங்க.)


சிறிய "நினைவூட்டல் மட்டுமே" மேலே கூறப்பட்டவை.



அப்பாவி அங்கு:இப்ப எல்லாம் கான்க்ரீட் மரம்தான் நிறய இருக்கு.

No comments:

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)