Wednesday, October 27, 2010

எக்ஸின் அழைப்பு 8 (நிறைவுப்பகுதி)

இரண்டு நாட்கள் கழித்து புதிய நபர் ஒன்றில் இருந்து அழைப்பு வந்தது,
யாராக இருக்கும் யோசித்தவாறே ஹலோ என்றேன்.

அருண், விஷ்வா பேசறேன் என்றான்.

ஏய் விஷ்வா என்ன ஆச்சு உனக்கு இரண்டு நாளா ஆளையே காணோம்,
போன் செய்தாலும் எடுக்க வில்லை.

சொல்றேன் அருண் என் வீட்டுக்கு வாயேன் என்றான்.
மாலையில் வருவதாக கூறினேன்.

மாலை சொன்னே நேரத்துக்கு அவன் வீட்டு கதவை தட்டினேன்,
யாரோ ஒரு பெண் கதவை திறந்தாள்.

சாரி விஷ்வா வீடு இதுதானே...

ஆமா அருண் உள்ள வா என்றபடியே விஷ்வா வந்தான்.

கதவை திறந்த பெண் எனக்கு வணக்கம் சொல்லிவிட்டு உள் அறைப்பக்கமாய் நகர்ந்தாள்.

விஷ்வா என்னடா இது இப்போ பொண்ணுங்களை வீட்டுக்கே கூட்டிட்டு வர ஆரம்பிச்சுட்டியா.

உஷ்...அருண் இது நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணுடா என்றான் விஷ்வா. அவங்க அம்மா கூட கோவிலுக்கு வந்தவ அப்படியே
என்னை பாத்துட்டு போலாம்ன்னு வந்தா.

எப்படா கல்யாணம், சொல்லவே இல்லை என நான் அதிர்ந்தேன்.

சாரி அருண், என் கடைக்கு அடிக்கடி வர கஸ்டமர் இந்த பொண்ணு, அப்படியே பேசி பழக்கம் ஆச்சு. ஆனா இவ, என்னை ரொம்ப தீவிரமாய் காதலிச்சிருக்கா. நான் அது தெரியாம இவளையும் டைம் பாஸ் கேசுன்னு நினைச்சி கொஞ்சம் அசால்ட்டா
இருந்திட்டேன். இவ தன் காதல சொன்னப்ப நான் ஒத்துக்கல, அப்பறம் அவங்க அப்பாகிட்ட விசயத்த சொல்ல அந்த ஆள் கொஞ்சம்
ஆள் பலம் உள்ளவர்போல, என்னை தூக்கிட்டு போய் மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் யோசிச்சி பார்த்தேன், இந்த அளவுக்கு தீவிரமா நம்மளையும் ஒரு பொண்ணு காதலிக்கும்போது அவளை கல்யாணம் செய்து கொள்வதுதான் சரின்னு பட்டதால ஒத்துகிட்டேன்.

ஆனா, இவளோட மாமா பையனுக்கு இவ மேல ஆசை, இவளுக்கு
என் மேல் காதல். எங்க கல்யாணத்தை தடுக்க அந்தப்பையன் முயற்சி செய்றதால யாருக்கும்
சொல்ல முடியலை. நாளைக்கு வடபழனி கோவில்ல கல்யாணம்,
முடிச்சிட்டு அப்படியே மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணப்போறோம்.
இதையே அழைப்பா வச்சுக்கிட்டு வந்திரு என்றான்.

மறு நாள் விஷ்வாவின் திருமணம் நடக்கும் முன்பே அந்தப்பையன்
சொந்தங்களுடன் வந்து தகராறு செய்ய, விசயம் போலிஸ் ஸ்டேசன் வரை சென்றது. இந்த களேபரம் நடக்கும்போது, என் மொபைல் ரிங்கி கொண்டே இருந்தது.
அழைப்பது யாரென்று பார்க்கும் நிலையில் இல்லை எனவே காலை
கட் செய்தேன். அப்புறம் ஒரு வழியாக சமரசம் செய்யப்பட்டு காவல்
நிலையத்தில் திருமணம் நடந்தது.

இந்த களேபரங்கள் முடிந்த பின்னர் அழைத்தது யாரென பார்த்தேன்.
அட ஜோதி! உடனே அவளுக்கு கால் செய்தேன்.
**********************************************
ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவி போல் அப்பா சொல்லப்போகும் விசயத்தை கேட்க மிக ஆவலாய்
செவிகளை கூர்மையாக்கி கொண்டேன்.

மாப்பிள்ளையைபத்தி வந்த தகவல்கள் எல்லாம் ரொம்ப திருப்தியா
இருக்கு, எனக்கு சம்மதம் ஜோதி என்று அப்பா சொன்னவுடன் ஆனந்தத்தில்
துள்ளிகுதிக்க வேண்டும் போல் இருந்தது எனக்கு.

ஒரு மாதம் ஓடி விட்டது, விஷ்வா கால் பண்ணியிருந்தான்,
எங்கள் கல்யாண பத்திரிக்கை பிரிண்ட் செய்தாகிவிட்டதாம். நானும்
அவனும் சென்று அழைப்பிதழை வாங்கி மீண்டும் ஒருமுறை சரி
பார்த்தோம்.

விஷ்வா என்ற அருண்விஷ்வாவிற்கும், ஜோதிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்...என்று தொடங்கி
அனைத்தும் சரியாக இருந்தது.

எனது சைடில் முதல் அழைப்பை என் தோழி சுதாவிடம் இருந்து
ஆரம்பித்தேன்.


Picture Thanks:alter...names.com

விஷ்வாவின் பி.கு: பள்ளி காலத்தில் என் பெயரும், விஷ்வாவின் பெயரும் ஒன்றாக
இருந்ததால் எங்களுக்குள் செய்த ஒப்பந்தத்தின்படி விஷ்வா என் பெயரின் முன் பாதியான "அருண்" என்றே அழைப்பான்.

அழைப்பு முடிந்தது.

Monday, October 25, 2010

எக்ஸின் அழைப்பு 7

என்ன ஆச்சு விஷ்வா, எடேன் போனை...ம்...ஹூம்...ரிங் போய் கொண்டே இருந்தது. ஆனால் அவனோ லைனை கட் செய்து கொண்டே இருந்தான்.

ச்சே...என்ன காதலன் இவன், நான் கால் செய்கிறேன் மடையன் கட்
பண்ணிகிட்டே இருக்கான்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து விஷ்வா கால் செய்தான்,
எனக்கோ கோபமாய் வந்தது.

வெறுப்புடன் ஹலோ என்றேன். சாரி ஜோ ஒரு முக்கியமான வேலையாய் இருந்தேன் அதான் நீ கால் பண்ணும்போது கட் செய்தேன்...

என்னை விட அப்படி என்ன முக்கியமான வேலை உனக்கு, நான் எவளோ சந்தோசமான விசயம் சொல்ல நினைத்தேன் தெரியுமா.

சாரி ஜோ, நாம எப்பவும் மீட் பண்ற இடத்துக்கு நாளைக்கு வாயேன், எல்லாத்தையும் விவரமா சொல்றேன், சரி ஏதோ சந்தோசமான விசயம் சொல்றேன்னியே என்ன அது.

ரொம்பதான் ஆசை, நாளை வரை நான் விடுமுறையில்தான் இருக்கேன். அதற்கடுத்த நாள் நேர்ல வரேன் அப்போ சொல்றேன் என்று சொல்லிவிட்டு கட் செய்தேன்.

ஆவலாய் விஷ்வாவை பார்க்க புறப்பட்டேன், எனக்கு முன்பே அவன் வந்திருந்தான்.

ஹே...விச்சு, அப்படி என்ன முக்கியமான வேலை உனக்கு.

சொல்றேன் ஜோ எனக்கு ரொம்ப நெருக்கமான பிரெண்ட் ஒருத்தன் கொஞ்சம் ஜாலியான பேர்வழி.....

அனைத்தையும் ஜோவிடம் சொல்லி முடிக்க அவள் என்னை சற்றே
ஏளனமாக பார்ப்பது போல் இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு ஆள்கிட்ட போய் ஏன் சகவாசம் வச்சுக்கிற விஷ்வா.

இல்ல ஜோ நீ நினைக்கிற மாதிரி அவன் மோசமான கேரக்டர் இல்ல,
கொஞ்சம் ஜாலியான பேர்வழி...

அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசறியே விஷ்வா...இதோட இந்த பேச்சையும் அவன் சகவாசத்தையும் நிறுத்திக்கோ. நான் சொல்ல வந்தது நம்ம கல்யாணத்தைபத்தி. எங்க அப்பாகிட்ட நம்ம காதல் விசயத்தை சொல்லிட்டேன், அவர் சம்மதம் சொல்லிட்டார்.
உங்க வீட்டுல நீ சொல்லியாச்சா.

இன்னும் சொல்லல ஜோ, எனக்கு சில கடமைகள் இருக்கு அத முடிச்ச அப்புறமா நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாமே...

Picture Thanks:visualparadox.com

என்ன இப்படி இழுக்குற, அப்போ உனக்கு என்னை பிடிக்கலையா, இல்லை உன் பிரெண்ட் மாதிரி பழகிட்டு கழட்டி விட்ரலாம்ன்னு பிளான் பண்ணிருக்கியா.

அய்யோ ஜோ, ஏன் இப்படி எல்லாம் பேசுற...நான் அப்படிப்பட்டவன் இல்ல, நான் உன்னை நிஜமாவே விரும்புறேன். ஆனா என் சூழ்நிலை
இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாது.

அப்படி என்ன பெரிய சூழ்நிலை, இது காதலிக்கிறதுக்கு முன்னாடி உனக்கு தெரியாதா? உன் வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போயேன். நானும் அவங்களை எல்லாம் பாத்து பேசி பழக வசதியா இருக்கும்.

தடாலடியா போய் நின்னா எப்படி ஜோ, அவங்க உன்னை பத்தி தவறா ஏதாவது நினைச்சிட்டா அல்லது பேசிட்டா
என்னால தாங்க முடியாது.

அவ்ளோ அன்பு இருக்கிற ஆள், என்னை உன்னோட பிரென்ட்ன்னு சொல்லி அறிமுகப்படுத்தி வை, மிச்சத்தை நான் பாத்துக்கிறேன்.

நான் தொடர்ந்து வற்புறுத்தவே, வேறு வழி இல்லாது விஷ்வா என்னை அவர்கள் வீட்டாரிடம் அறிமுகப்படுத்துவதாக ஒப்புக்கொண்டான்.

அவன் வீட்டிற்கு போய் வந்தபின் அப்பாவிடம் விவரங்களை கூறினேன்.

சரிம்மா, இனி ஆக வேண்டியதை நான் பாத்துக்குறேன். அவனைபற்றிய தகவல்கள் அத்தனையும் தீர விசாரிச்சிட்டு அப்புறம் என்னோட முடிவ சொல்றேன். அதுவரைக்கும் நீ தேவை இல்லாம எந்த கனவையும் வளத்துக்காதே,
புரிஞ்சு நடந்துக்கோ ஜோதி. பெஸ்ட் ஆப் லக் என அப்பா சொல்ல, அவர் விசாரித்தபின் எடுக்கப்போகும் முடிவினை ஆவலுடன்
எதிர்பார்த்து நாட்களை கடத்தினேன். இடையே இரண்டு முறை விஷ்வாவை சந்திக்கவும் செய்தேன், ஆனால் அப்பா அவனை "விசாரிப்பதை" மட்டும் அவனிடம் சொல்லவில்லை.

இரண்டு வாரம் கழித்து ஒரு நாள் அப்பவே என்னை பார்க்க வந்திருந்தார்.
வழக்கமான குசலம் விசாரிப்பகளுக்குப்பின் அப்பா சொல்லப்போகும்
விசயத்தை ஆவலுடன் கேட்க தயாராய் இருந்தேன். அவரோ விஷ்வாவைதவிர அணைத்து விசயங்கள் பற்றியும் பேசிகொண்டிருந்தார். நானே கேட்டு விட்டேன், அப்பா விஷ்வா விசயம் என்ன ஆச்சு, என்றேன்.

அப்பா, ஆழமாக ஒருமுறை பார்த்துவிட்டு, சொல்ல ஆரம்பித்தார்.

அழைப்பு தொடரும் அழைப்பு 8 (நிறைவுப்பகுதி)

Thursday, October 21, 2010

எக்ஸின் அழைப்பு 6

தங்கையிடம் பேசிவிட்டு விரைவாக வீட்டை அடைந்தால், கதவில் பூட்டு தொங்கியது. பக்கத்துக்கு வீட்டு அம்மா வந்து சாவி கொடுத்துவிட்டு அம்மாவை அழைத்து கொண்டு என் தங்கை J.K.ஹாஸ்பிட்டல் சென்று விட்டதாக கூறினார்கள்.

என்ன ஆச்சும்மா, எங்கம்மாவுக்கு.

திடீர்ன்னு மயக்கம் வந்து விழுந்திடாங்கப்பா, என் கணவரும் துணைக்கு போயிருக்கார். பதட்டப்படாம போயிட்டு வாப்பா.

விரைவாக J.K. சென்றேன், தங்கையை பார்த்து என்ன ஆச்சு என்றேன். பயப்பட வேண்டாம், அம்மாவுக்கு லோ பிரஷர் அதோட இன்னைக்கி விரதம் இருக்கிறேன்னு
ஒண்ணுமே சாப்பிடல அதனால மயக்கம்ன்னா. அம்மாவை பார்த்தபின்புதான் எனக்கு நிம்மதி பெருமூச்சே வந்தது. பக்கத்துக்கு வீட்டு அங்கிளுக்கு நன்றி சொன்னேன். அண்ணா உனக்கு என் பிரெண்ட் ரேவதி தெரியும்தானே என புதிர் போட்டாள் தங்கை.

ஆமா தெரியுமே அவளுக்கென்ன என்ற போது,

அருண் அம்மாவுக்கு
என்ன ஆச்சு என்றபடியே விஷ்வா வந்தான்.

ஒன்னும் இல்லைடா, இப்போ நார்மலாதான் இருக்காங்க. ஆமா
உனக்கு எப்படி விசயம் தெரியும்.

இல்ல, கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீ வேற கோபமா போன மாதிரி இருந்திச்சு, அதான் உன்ன பாத்து சமாதானமா பேசலாம்ன்னு உன் வீட்டுக்கு போனேன்,
பக்கத்து வீட்டம்மா சொன்னங்க அதான் உடனே வந்தேன் என்றான்.

சொல்லும்மா ரேவதிக்கு என்ன ஆச்சு என்றேன், அவள ஒரு கார்காரன் இடிச்சிட்டு நிக்காம போயிட்டான், அங்கே இருந்த யாரோ ஒருத்தங்க அவள சரியான நேரத்துக்கு இங்க கொண்டு வந்ததால உயிரை காப்பாத்த முடிஞ்சது.

அப்படியா! நீ போய் அவள பாத்தியா.

இல்லைன்னா இப்போ மயக்கத்துல இருக்கா, சாயந்திரம்தான் பாக்க முடியும்ன்னு டாக்டர் சொல்லிட்டார்.

அதன்பின் விஷ்வா, அம்மாவை பார்த்துவிட்டு கிளம்பிவிட்டான்.
நாங்கள் இருந்து ரேவதியை பார்த்துவிட்டு மாலையில் வீடு திரும்பினோம்.

இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு நட்சத்திரங்களை என்ன ஆரம்பித்த பொழுது தங்கை வந்து என் கணக்கை கலைத்தாள். அண்ணா ரேவதியை கொண்டு வந்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்தது ஒரு பெண்தான் தெரியுமா! அந்த நேரம் ரோட்ல போன யாருமே அவளுக்கு உதவ முன்வராத
போது அந்த பெண்தான் தைரியமா செயல்பட்டிருக்கா!

ரொம்ப புத்திசாலியா இருப்பா போலிருக்கு என்றவாறே, எழுந்தேன்.
சரிமா நீ போய் அம்மாவுக்கு தேவையான மாத்திரையை கொடுத்திட்டு
தூங்கு என தங்கையை அனுப்பிவிட்டு நானும் படுக்கையில் விழுந்தேன், தூக்கம்தான் வர மாட்டேன் என அடம் பிடித்தது.

காலையில் அலாரம் சத்தம் கேட்டு விழிக்கையில் கண்ணெல்லாம்
ஒரே எரிச்சல், இன்னைக்கி வேலைக்கு போலாமா வேண்டாமா என
மனசு பெண்டுலமாய் ஆட, தொலைபேசி அழைத்தது. இந்த காலை வேளையில் யாராக இருக்கும். அட விஷ்வா!

ஹலோ விஷ்வா சொல்லுப்பா, என்ன விசயம்.

அம்மாவுக்கு இப்ப எப்படி இருக்கு அருண்.

சுகமா இருக்காங்க விஷ்வா, பயப்படும்படி இன்னும் இல்லை, ரொம்ப
நன்றி நீ இவ்ளோ அக்கறையா விசாரிக்கறதுக்கு.

நன்றி எல்லாம் சொல்லி என்னை அன்னியப்படுத்தாதே அருண்.
இன்னைக்கி ஈவினிங் முடிஞ்சா என்னோட கடைப்பக்கம் வாயேன்,
முக்கியமான விசயம் ஒன்னு உன்கிட்ட சொல்லணும்.

சரி வரேன் விஷ்வா என்றுவிட்டு வேலைக்கு போகலாம் என்ற
முடிவோடு குளியலறை நோக்கி நகர்ந்தேன்.

கடந்து விட்டது இரண்டு நாட்கள், நான் சொன்ன நேரத்தில் விஷ்வாவை பார்க்க முடியவில்லை. அவன் தொலைபேசிக்கு அழைத்தால் அவன் அட்டென்ட் செய்யவில்லை.
அவன் கடையும் பூட்டி இருந்தது. பக்கத்துக்கு கடைகளில் விசாரித்தேன், அவர்களும் தெரியாது என கை விரித்தார்கள். என்ன ஆச்சு இவனுக்கு, போனிலும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

அழைப்பு தொடரும் Picture Thanks:123 vectors.com அழைப்பு 7

Monday, October 18, 2010

எக்ஸின் அழைப்பு 5


அவனைப்பார்த்தவுடனே எனக்கு பற்றி கொண்டு வந்தது, வா சுதா
மனிதாபிமானே துளி கூட இல்லாதவங்க கூட நான் பேச விரும்பல.

ஏய்...ஜோதி என்னடி ஆச்சு இவர உனக்கு முன்னமே தெரியுமா.

நான் சொல்றேன் சுதா, நான்தான் விஷ்வா போன வாரம் சாலை விபத்து ஒன்னு நடந்த சமயம் நான் அந்தப்பக்கம் எங்க நிறுவனத்தின் வாகனத்துல போய் கிட்டு இருந்தேன். அப்போ உங்க பிரெண்ட் ஜோதி அடிபட்ட நபர
ஹாஸ்பிட்டல் கொண்டு போறதுக்காக என்கிட்டே உதவி கேட்டாங்க.

போலிஸ் கேஸ் போடுவாங்க விசாரணை கோர்ட்டுன்னு அலைய வேண்டி வருமே, அதோட எங்க நிறுவனமும் என் மீது
ஆக்சன் எடுக்கும் என்ற பயத்தில் முடியாது என சொல்லிவிட்டு அந்த
இடத்தை விட்டு சென்று விட்டேன். ஆனா மனசு கேட்கல 108 போன்
பண்ணிட்டு அதோட அதை மறந்துவிட்டேன்.

ஆனா லேட்டாதான் தெரிய வந்தது அந்த விபத்துல அடிபட்டது
எனக்கு வேண்டப்பட்டவங்கன்னு. உங்க பிரண்ட்தான் விவேகமா
செயல்பட்டு அவங்க உயிரை காப்பாத்தி இருக்காங்க. அதான் அவங்களுக்கு
நேரில் நன்றி சொல்லலாம்ன்னு நினைச்சேன். ஹாஸ்பிட்டல்ல நிலைமையை எடுத்து சொல்லி ஜோதியோட நம்பர
வாங்கினேன், ஆனா ஜோதிகிட்ட நாந்தான்னு அறிமுகப்படுதிக்கிற
அளவுக்கு எனக்கு தைரியம் வரல. என் மேல எனக்கே வெறுப்பா
இருந்திச்சி.

அதுக்காக இப்படிதான் டார்ச்சர் பண்ணுவீங்களா சார் என வெடித்தாள் ஜோதி.

நான் செஞ்சது தப்புதான், தயவு செய்து என்ன மன்னிச்சிருங்க ஜோதி,
நீங்க மட்டும் அன்னைக்கி சரியான நேரத்துல உதவலைன்னா அவங்களை
காப்பாத்தி இருக்க முடியாது, உங்களுக்கு நன்றின்னு ஒரு வார்த்தை சொல்ற அருகதை கூட எனக்கு இல்லன்னு நினைக்கிறேன்.

அவன் பேசப்பேச, என் இறுக்கம் சற்றே குறைந்தது. அதன்பின் அவன்
நிலை புரிந்து கொண்டேன். அடுத்தடுத்த நாட்களில் இயல்பாக எங்கள்
சந்திப்பு அமைந்ததா, அல்லது அவனே வேண்டும் என்றே உருவாக்கிய
சந்திப்பா என்று தெரியவில்லை அடிக்கடி சந்தித்து கொண்டோம்.

எங்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது. ஆனால் இது வெறும் நட்பா இல்லை காதலா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவனுடன் பேசுவது எனக்கு பிடித்திருந்தது. அவன் என்ன நினைக்கிறான்
என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு விடை சொல்வது போல்
இன்றய சந்திப்பு நிகழ்ந்தது.

நானும், விஷ்வாவும் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் இருந்தோம்,
ஓட்டிற்குள் இருந்து தலை நீட்டும் ஆமையாய் தன் காதலை
மெல்ல வெளிப்படுத்தினான் விஷ்வா.


Picture:Thanks fotoserach.com

இது சாத்தியமா விஷ்வா, என்றேன். உனக்கு என்னை பிடிசிருக்குதானே அப்புறம் என்ன பிரச்சினை என்றான்.
இல்ல எங்க வீட்டுல சம்மதம் வாங்கணுமே.

சரியான நேரத்துல உங்க வீட்டுல விசயத்தை சொல்லிவிடேன் என்றான்.

சுலபமாக சொல்லிவிட்டான், என் அப்பா கண்டிப்பானவர். அவர்
சாந்தமான மனநிலையில் இருக்கும்போது என் விசயத்தை அவரிடம் கூறினேன். என்ன வியப்பு தாம் தூம் என குதிக்க வில்லை பையன் எங்கே வேலை செய்றான், அட்ரஸ் குடு அவனைப்பற்றி விசாரிச்சிட்டு அப்புறம் இந்த காதல் வேணுமா
வேண்டாமான்னு சொல்றேன் என்றார்.

இல்லைப்பா அவர் ரொம்ப நல்ல...

இங்க பாரு ஜோதி, காதலிக்கும்போது எல்லோரும் நல்லவனாத்தான்
காட்டிக்குவான், அப்புறம்தான் சுயரூபங்களே வெளி வரும். நாமதான்
கவனமா இருக்கணும். பயப்படாத அவன் நல்ல குணமும், வேலையும் உள்ளவனா இருந்தா, எனக்கு எந்தவித ஆட்சேபனையும்
இல்லை என்று அப்பா சொன்னவுடன் எனக்கு உடல் எடை இழந்தது போல் இருந்தது.

யோசிக்கும்போதுதான் ஒரு விசயம் நினைவில் உறுத்தியது,
இத்தனை நாள் அவனோட பழகி இருக்கோம். அவனோட இருப்பிடத்தை பத்தியோ வேலை பற்றியோ ஒரு தடவ
கூட நாம கேட்டதில்லையே.
உடனே விஷ்வாவிற்கு போன் செய்தேன்.

அழைப்பு தொடரும் அழைப்பு 6

Tuesday, October 12, 2010

எக்ஸின் அழைப்பு 4


சரி அவன் பேசி முடிக்கட்டும், என காத்திருந்தேன்.

ஐந்து நிமிடம் கடந்த பின்,
வா அருண் போகலாம் என்றபோது விஷ்வாவின்
முகம் சற்றே வாடியது போல் இருந்தது.

என்ன விஷ்வா ஏதாவது பிரச்சனையா?

அதெல்லாம் ஒன்னும் இல்லை அருண், என்றவன் ஏதும் பேசாமலே
வண்டியை செலுத்தினான். வீட்டில் அம்மாவை சந்தித்து பேசி விட்டு கிளம்பினான்.

அடுத்த நாளும் விஷ்வாவை சந்தித்தேன். பேசி கொண்டிருக்கும்போதே
நிறைய தொலைபேசி அழைப்புகள் அவனுக்கு வந்த வண்ணமாகவே
இருந்தது.


picture:thanks freephoto.com

என்ன விஷ்வா, ரொம்ப பிஸியா இருக்கியா...

இல்ல அருண் இதெல்லாம் என்னோட கேர்ல் பிரண்ட்ஸ் கிட்ட வர
அழைப்புகள்.

அடேங்கப்பா, அப்போ உனக்கு ஏகப்பட்ட கேர்ள் பிரண்ட்ஸ் இருப்பாங்க
போலிருக்கே, அப்புறம் ஏம்பா இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க.

அட நீ வேற அருண், கல்யாணம் ஆகி நமக்குன்னு ஒருத்தி வந்துட்டா இப்படி ஜாலியா இருக்க முடியுமா, உனக்குத்தான் என்னைபத்தி தெரியுமே இதெல்லாம் ச்சும்மா டைம் பாஸ்
கேசுங்க.

இதெல்லாம் தப்பில்லையா விஷ்வா.

இந்த பொண்ணுங்களும் நீ நினைக்கிற மாதிரி இல்லைப்பா, இன்னைக்கி அவங்களுக்காக நான் செலவு பண்றேன், நாளைக்கே என்னை விட செலவு செய்ற ஆள் கிடச்சா என்னை மறந்திருவாங்க.

ச்சே..எல்லோரும் அப்படி இருக்க மாட்டாங்க.

உனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் அருண். வேணுமின்னா ரெண்டு பொண்ணுங்க நம்பர் தரேன், பழகி பாக்குறியா.

இதில் எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை...சாரி விஷ்வா நான்
கிளம்புறேன்.

இதுக்கு போய் கோவிச்சுக்கலாமா, வா அருண் காப்பி சாப்பிடலாம்.

இல்ல எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, இன்னோர் முறை பாக்கலாம் விஷ்வா, எனக்கு கோபம் எல்லாம் இல்ல,
ஆனா உன்னோட செய்கையில் எனக்கு உடன்பாடில்லை.

அவனிடம் கோபம் இல்லை என்று சொன்னாலும், பெண்களை பற்றி அவன் கொண்டிருந்த எண்ணத்தை
நினைக்கையில் எனக்கு கோபமாகத்தான் இருந்தது.

ச்சே...இந்த விஷ்வா சரியான ப்ளேபாய்யா இருப்பான் போலிருக்கே,
என்று நினைத்தவாறே இருக்கும்போது என் மொபைல் ரிங்கியது.
என் தங்கைதான், ஹலோ என்றவாறே அவள் பேசுவதை கேட்ட
எனக்கும் சற்றே பதட்டம் கூடியது.

சரிம்மா, நீ கவலைப்படாதே இதோ இப்போவே வந்திடறேன் என
அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு விரைவாக கிளம்பினேன்.

அழைப்பு தொடரும் அழைப்பு 5

Monday, October 4, 2010

எந்திரன் சிட்டி

இந்த காதல் எந்திரன் சிட்டியையும் விட்டு வைக்கவில்லை! எந்திரனுக்கு மனித உணர்வுகளை கொடுத்து விட்டு பின்பு அது படு(த்தும்)ம் பாடுகளை ரசிக்கும் விதமாய் சொல்லி இருக்கிறார்கள்.

முதல் பாதி சூப்பர் மேன் போல எந்திரனின் அதீத சக்திகளை மசாலா கலவையுடன் காட்டும் காட்சி அமைப்புகள், சிறுவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்! வசீகரனை விட ரோபோ சிட்டியே அதிகம் கவர்கிறார். ஆமா விஞ்ஞானி என்றாலே தாடியுடனும், பாகவதர் முடியுடனும்தான் இருக்க வேண்டுமா! விஞ்ஞானி ரஜினியை இன்னும் கொஞ்சம் வசீகரமாய் காட்டி இருக்கலாம்.
ஹனிபாவிற்கு எந்திரன் மால் "வெட்டும்" காட்சி, கலகலப்பு.
தண்ணி போட்டு வண்டி ஓட்டுரியா, என ஒருவர் கேட்க இல்லை பெட்ரோல்
போட்டு ஓட்டுறேன் என்று ரோபோ பதில் சொல்லும் இடங்களில்
சந்தானம், கருணாசின் வேலையை ரோபோ ரஜினியே செய்து
விடுகிறார்.கிராபிக்ஸ் காட்சிகள் நம்பும்படி அழகாய் செய்து இருக்கிறார்கள்!

இரண்டாம் பாதி முழுவதும் ரோபோ ரஜினி மட்டுமே, ஐஸை கடத்தி வைத்து கொண்டு போடும் ஆட்டங்கள் லக...லக...
சிறுவர்களையும் கவரும் விதமாய் இருக்கிறான், எந்திரன்.

ரஸ்கி(!):நானும் ஒரு எந்திரன் கதை எழுதி இருக்கேன்!! இங்கே
சென்றால் படிக்கலாம். எல்லாம் ஒரு சுய விளம்பரந்தேன் :))
picture:Thanks hindai.in/tamilcinema

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)