Showing posts with label தொடர்பதிவு. Show all posts
Showing posts with label தொடர்பதிவு. Show all posts

Thursday, September 30, 2010

பதிவர்கள் மீது கோபம்

இதை எழுதுவதற்கு என்னை அழைத்த
அன்னுவிற்கு நன்றி.

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
வலைப்பதிவிற்காக நான் வைத்த பெயர் சைவகொத்துப்பரோட்டா

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா?
ஹி...ஹி... இல்லவே இல்லீங்கோ.

இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
நம்ம கடை பக்கம் உங்களை வர வைக்கும் யுத்திதான்!!

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
ஆர்வக்கோளாறுதான்.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்வெளி, திரட்டி, உலவு மற்றும் தினமணி
போன்ற திரட்டிகளில் இணைத்தேன்.

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா?
ஆம்.

ஆம் என்றால் ஏன்?
நண்பர் ஸ்டார்ஜன் இந்த தொடர்பதிவுக்கு அழைத்ததால்!

அதன் விளைவு என்ன?
எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது, இதன் "பின்விளை"வாக வந்த பின்னூட்டங்களை படித்தபோது.

இல்லை என்றால் ஏன்?
அதான் "ஆம்"ன்னு சொல்லிட்டோம்ல :))

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
கதை விடலாம்ன்னுதான் (சிறுகதையை சொன்னேன்) எழுத ஆரம்பிச்சேன்.
என்னோட பதிவுகள படிச்சிட்டு நீங்க கொடுக்குற விமர்சனங்கள்
மட்டுமே இப்போதைய சம்பாத்தியம்.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்னே ஒண்ணுதான்! அதுவும் செம்மொழியான தமிழ் மொழியில்தான்!! (இந்த ஒண்ணுல பதிவு போடவே மண்ட காயுது)

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.
(அப்பாடி தலைப்புக்கும், பதிவுக்கும் சம்பந்தம் வந்திருச்சு!)
இல்லை.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.
பேர் வச்சு கடை தொறந்து நாலு பதிவும் போட்டாச்சு. ஆனா
ஒரு கமெண்ட் கூட இல்லை. ஆனாலும் சளைக்காம அஞ்சாவது
பதிவு போட்டுட்டு, நாப்பது தடவ வலைப்பக்கம் வந்து எட்டிப்பார்த்து ஏமாந்து போன, 40 வது நிமிடம் ஒரு கமெண்ட் இருந்தது.
அந்த நிமிடம், எவரெஸ்ட் மேலே ஏறி நின்னா மாதிரி
ச்சும்மா ஜில்லுன்னு ஒரு பீலிங் வந்திச்சு பாருங்க...(நாம எழுதினதையும் மதிச்சு ஒருத்தர் கமெண்ட் போட்டுட்டாரே!)
அந்த கமெண்டுக்கு சொந்தக்காரர் சதுக்க பூதம் ,
நன்றி நண்பரே.

10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
என்னை பத்தி தெரிஞ்சுக்கனுமா இங்கே
போய் பாத்துக்கோங்க.

பாத்தாச்சா! சரி...சரி...மறக்காம உங்க கருத்துக்களை எழுதிட்டு போங்க,
நன்றி.

Monday, April 19, 2010

பத்துப்படங்கள் - தொடர்பதிவு

எனக்கு பிடித்தவற்றுள் பத்து படங்களை பற்றி பகிர்ந்து கொள்ளும்
இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்த நண்பர் philosophy பிரபாகரன்
அவர்களுக்கு எனது நன்றி.

விதிகள்:
1. தமிழ்ப் படங்கள் மட்டுமே
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)
))))))))))))))))))))))))))))))))))))))))))

'ஓஹோ" ப்ரொடக்சன் பத்தி தெரியுமா உங்களுக்கு, தெரியாதுன்னா கண்டிப்பா இந்த படத்த
பாருங்க. பாலையாவும், நாகேசும் அப்பா, மகனா நகைச்சுவையில் கலக்கி இருப்பாங்க,
நாகேஷ், பாலையா கிட்ட கத சொல்ற அந்த சீன் அற்புதமா இருக்கும், நேரமில்லைன்னு
சொல்லாம பாருங்க இந்த "காதலிக்க நேரமில்லை" படத்த.

என்னதான் வாயில வெத்தில போட்ட மாதிரி பேசினாலும், இவரோட இயல்பான
நடிப்பும், அந்த துள்ளலான ஸ்டைலும் எனக்கு பிடிக்கும். அழகான ஒரு
குடும்பத்தோட நாமளும் அருகில் இருந்த ஒரு பீல் கிடைக்கும் இந்த படத்த பாக்கும்போது,
நாலே பாட்டுனாலும், நாலும் "நச்', வருடங்கள் பல கடந்தாலும் நினைவில் நிற்கிறது
இந்த "வருஷம் 16"

தம்மாதூண்டு மீசையை வைத்து, தன் பாஸிடம் இரட்டை வேடம் போட்டு ஏமாற்றுவார் ஹீரோ, அவருக்கு அம்மாவாக நடிக்க வந்தவரும், இரட்டை வேடம் போட
வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். அந்த அம்மா, நிறைய
படங்களில் அழு மூஞ்சி கேரக்டரில் மட்டுமே நடித்திருப்பார்,
அவரே இதில் நகைச்சுவை செய்திருக்கிறார், என்றால் பாருங்களேன், இந்த "தில்லு முல்லு"வை.

ரெண்டும் கெட்டான் வயதில் மாயகாதலில் விழுந்து
"ஓடிப்போலாமா" என நினைப்பவர்கள் இந்த படத்தை
பார்த்தால், நிச்சயம் நினைப்பை மறு பரிசீலனை செய்வார்கள்.
உச்ச கட்ட காட்சிக்கு முந்தைய காட்சியில், அந்த கை இழந்த நபர் முதலில் சாதாரணமாக
பேச ஆரம்பிக்கும்போதே, ஏதோ நடக்க போகிறது என்ற உணர்வில் நம்மை
அறியாமலே, நம் வயிற்றில் பய அமிலம் சுரக்கும் இந்த
"காதல்"லை பார்த்தால்.

காதலியை கைபிடித்தே தீர வேண்டிய சூழ்நிலை, அண்ணனால்
பெற்றோர் மனமுடைந்து இருக்கும் நேரம் வேறு. அப்பாவிடம் இன்டெர்வியு செல்வதாக பொய் சொல்லி கிளம்ப
வெள்ளந்தியாக அப்பாவும் ஆசிர்வாதம் செய்து, பணம் போதுமாப்பா
என கேட்க, குற்ற உணர்ச்சியில் மகன் தவிப்பார். அப்பாவிற்குள்
ஒளிந்திருக்கும், பாசத்தையும், அக்கறையையும் அழகாய் கொடுத்துள்ளார்கள் இந்த
"தவமாய் தவமிருந்து"வில்.

சிரிப்பு போலீசை மட்டும் நிறைய படங்களில் பார்த்த நமக்கு,
அவர்களின் நிஜ பக்கங்களையும் காட்டிய சில படங்களில் இதுவும்
ஒன்று. பிடிபட்ட அந்த தீவிரவாதி உண்மையில்
தீவிரவாதியோ என நாம் அஞ்சும்படி, நடிப்பில் மிரட்டி இருப்பார்,
வீரம்ன்னா பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுன்னு, வீரத்தை
பற்றி விளக்கிய இந்த "குருதிப்புனல்"லை பாருங்களேன்.

வயதான ஒருவரும், இளம்பெண் ஒருத்தியும் கொண்ட
நட்பை, எந்த விரசமும் இல்லாமல் கிராமிய மணம் கலந்து
வந்த இந்த படத்திற்கு என்றும் "முதல் மரியாதை"தான்.
ம்.....சொல்ல மறந்துட்டேனே பாடல்கள் அத்தனையும் தேன்.

வழக்கமா ஒரே பாட்டுல நம்ம ஹீரோக்கள் எல்லாம் ஊறுகாய்
வித்தே பெரிய ஆள் ஆயிருவாங்க, அல்லது அவங்களோட
"லட்சியத்தை" அடஞ்சிருவாங்க. இப்படி இல்லாம, கொஞ்சம் யதார்த்தமாய் இந்த படம் இருந்தது, என்ட் கார்ட் போடும்
வரையிலும் இந்த ஹீரோ அவரோட இசை அமைப்பாளர்
ஆகணும்கர லட்சியத்தை அடைய முடியாமல் போனாலும்
இந்த "முகவரி" எனக்கு பிடித்து இருந்தது.

ஒரு விறுவிறுப்பான க்ரைம் நாவல் படிச்ச மாதிரி இருந்துச்சு
இந்த படத்த பாக்கும்போது. ஸ்டைலிஷான மேக்கிங்ம், ரசிக்கும்படியான பாடல்களும் வலு சேர்த்தது,
இந்த "வேட்டையாடு விளையாடு"விற்கு.

ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான திரைக்கதை, நாயக, நாயகி, "மற்றும் பலரின்" நல்ல நடிப்பு, சுகமான பாடல்கள் என அமைந்த படங்களுள்
இந்த 'மொழி" யும் ஒன்று.
)))))))))))))))))))))))))))))))

இதை தொடர நான் அழைப்பது:

சசிகுமார்
பட்டாபட்டி
ரகு
ஜெய்லானி
அக்பர்
கண்ணா
சித்ரா
ஆனந்தி
பத்மா

ஜில் தண்ணி
r.v.saravanan kudandhai
*************************************************


அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Wednesday, April 14, 2010

ஆச்சி சொன்ன கத - கத கேளு கத கேளு - தொடர்பதிவு

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இப்போ என்னதான், DTS, DOLBY சிஸ்டம், I-MAX அரங்குன்னு தேர்வு செய்து படம் பார்த்தாலும், பள்ளி விடுமுறை
நேரத்துல ஆச்சிகிட்ட (அல்லது தாத்தாகிட்ட) கதை கேட்ட அந்த அனுபவம் யாருக்கும்
மறக்க முடியாது!!!

அவர்கள் கதை சொல்லும் போதே, நம் கற்பனயில் அந்த காட்சிகள் விரியும்.

அப்படி ஆச்சியிடம் கேட்ட கதைகளுள் ஒன்றை உங்களுடன்
பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை அளித்த சிநேகிதன்
அக்பர்ருக்கு நன்றி.

ஒரு காட்டுல ஒரு நரியும், ஓநாயும் ரொம்ப கூட்டாளியா
இருந்துச்சாம். ரெண்டும் சேர்ந்துகிட்டு கண்ணுல படுற
குட்டி மிருகங்கள ஆதரவா பேசி ஏமாத்தி, சாப்பிட்டிருமாம்.

ஒரு நாள் அந்த காட்டுக்கு, வழி தவறி போய் ஒரு குதிரை
வந்திச்சாம்.

அத பார்த்த நரி, இது என்ன மிருகம் புதுசா இருக்கே,
இத கொன்னா ஒரு வாரம் வச்சிருந்து சாப்பிடலாமேன்னு
நினச்சி, ஓநாயோட கலந்து பேசி ரெண்டும் குதிரைகிட்ட
போச்சாம்.

நீ யாருப்பா, இதுக்கு முன்னாடி உன்ன பார்த்தது இல்லையே,
உன் பேர் என்னன்னு கேட்டுச்சாம்.

நரியோட தந்திரங்களை பத்தி தெரிஞ்ச குதிரை சொல்லுச்சாம்,
என் பேரு, என் பாத்ததுல (காலின் அடிப்பாகம்) எழுதி இருக்கு, வேணுமின்னா
பக்கத்துல வா காட்றேன்னு சொல்லுச்சாம்.

இதுல ஏதோ சூழ்ச்சி இருக்குனு புரிஞ்சுகிட்ட நரி, எங்களுக்கு
படிக்க தெரியாதேப்பா, நாங்க மழைக்கு கூட பள்ளிக்கூடம்
ஒதுங்குனதில்ல இவ்வளவு ஏன் தங்கர்பச்சானோட பள்ளிக்கூடம் படத்துக்கு
கூட போனதில்லன்னு
சொல்லுச்சாம்.

இத கேட்ட ஓநாய்க்கு கோபம் வந்து, அடேய் மடப்பய நரியே, உனக்கு படிக்க தெரியாதுன்னு சொல்லு, அது உண்மை.....

ஆனா, நான் ரெண்டாப்பு வர படிச்சிருக்கேன்டா, எனக்கு படிக்க தெரியம் அப்படின்னு பெருமையா சொல்ல.......

அப்ப என் கால்ல இருக்குற பேர படின்னு குதிர
சொல்லுச்சாம்.

ஓநாய், நரிய நக்கலா பாத்துகிட்டே, குதிரை கிட்ட போச்சாம்,
குதிரை ஒரு கால மட்டும் தூக்கி, ஓநாய் கிட்டக்க வந்ததும், அது முகத்துல ஓங்கி ஒரு உத விட்டுச்சாம்.

அப்புறம் என்ன நரி முத ஆளா ஓடிபோக, முகத்துல ரத்தத்தோட ஓநாய், நரி பின்னாலேயே
ஓடிச்சாம்..........அவ்ளோதான்.


நீதி:..........................................



டிஸ்கி: என்ன இது நீதின்னு போட்டுட்டு ஒன்னும் எழுதலைன்னு
பாக்குறீங்களா!!!!!!

கத சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது..............ஹி..............ஹி.........

********************************************************


அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Thursday, April 8, 2010

பேருந்து காதல் - தொடர்பதிவு

பேருந்து காதல், தொடர் பதிவுக்கான பேருந்தை, ஓட்ட சொல்லி என் கையில் பேருந்தை
கொடுத்த நண்பர் பிரவின்குமார் அவர்களுக்கு நன்றி.

போலாம் ரைட்டுன்னு, கண்டக்டர் சவுண்ட் விட்டதும், பேருந்து நகர
ஆரம்பிக்க, நிறுத்துங்கன்னு ஒரு குரல், அது அழகிய பெண்ணோட
குரல்ன்னு நீங்க கற்பனை பண்ணின்னா ஐ'ம் சாரி.........
அது கரகரப்பான ஆண் குரல்.

கிரீச்சிட்டு பஸ் நிற்க, ஏறியது சாட்சாத் (அழகிய) இளம்பெண்!!
மலரை மொய்க்கும் வண்டுகளாய், அனைவரின் கண்களும்
அவளிடமே. (பஸ்ஸ நிறுத்த சொல்லி குரல் விட்டது
அவளின் அப்பா)

மறு நாள் அதே நேரம், அதே பஸ் ஆனால் அதே
பெண் வரவில்லை :(

மறு வாரம் சோகமாக என் பேக்கை ஸ்டைலாக(!!!) அணிந்து கொண்டு அதே பஸ்சில் ஏறினேன், அட
என்ன வியப்பு, அன்று அதே பெண் மீண்டும் வந்தாள்.

அவளின் கடைக்கண் பார்வைக்கு அனைவரும் ஏங்கி கிடக்க
என் அருகே வந்தாள், என் ஹார்ட் பீட் அருகில் நின்ற எனது நண்பனுக்கே கேட்டது.

புன்னகை பூவை
உதிர்த்தது
அந்த நடமாடும்
பூச்செடி(!!!)

ஹாய் என்றேன் , இந்த ஒத்த வார்த்தையை
சொல்வதற்குள் என் நாக்கு மேல் தாடையில் ஒட்டி
கொண்டு வர மாட்டேன் என்று அடம் பிடித்தது,
வலு கட்டாயமாக தாடையில் இருந்து நாக்கை பிரித்து, அதன்பின் மீண்டும் ஹலோ சொன்னேன்.

இந்த பஸ்ல எப்பவும் இப்படிதான் கூட்டமா இருக்குமா
என்று கேட்டாள், ஆமா நீங்க தினமும் இதில் வருவதாக
இருந்தால் சொல்லுங்கள், என் நண்பன் இடம் பிடித்து
வைப்பான்(!!) என்றேன்.

தேங்க்ஸ் என்றாள், அப்படியே ரெண்டு சீட்டா போட்டு வைக்க
சொல்லுங்க என்றாள்...........

அதற்கப்புறம் அவள் பேசியது எதுவும் என் காதில்
விழவில்லை, அப்போ நான் தலையை ஆட்டி கொண்டே இருந்ததை
பார்த்துதான் டைரக்டர் சசி, அந்த சீனை சுப்ரமணியபுரதில்
நுழைத்து விட்டார் (காப்பி ரைட்ஸ் இனிமே போட்டுக்கணும்ப்பா!!)

அன்று இரவு வெள்ளை உடை தேவதைகளுக்கு நடுவே
என் தேவதையும் இருந்தது.

மறு நாள், கண்ணாடி பார்க்கும்பொழுது இன்னும் அதிக
அழகாக(!!!!) இருந்தேன்.

வழக்கமாக, புகையை கக்கி கொண்டே வரும் பேருந்து அன்று
மலர்களை தூவி கொண்டே வந்தது, நாரசாரமாக கேட்கும்
நண்பனின் குரல் அன்று எஸ்.பி.பாலாவின் தேன் குரல்
போல இருந்தது.

என் தேவதை ஏறும் ஸ்டாப்பில் வண்டி நின்றது, இன் இருதய
துடிப்பும் ஒரு நிமிடம் நின்று பின் இயங்கியது, என் தேவதை
ஏறியது, அவளுடன் இன்னொரு பெண்ணும்.

என்னை நோக்கி வந்தாள், என் நண்பனும், நானும் எழுந்து
கொண்டு அந்த இருக்கையில் அவளை அமர சொன்னேன்,
நன்றி புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு அமர்ந்தது, தீபா இங்கே உக்காரு, என்றாள்
உடன் வந்த பெண்ணை பார்த்து.

அந்த பெண்ணோ நான் ஜன்னல் ஓரம்தான் உக்காருவேன், நீ
இந்த பக்கம் வா "மம்மி" என்று சிணுங்கியது.

என் காலடியில் மட்டும் பூமி (பஸ்) இரண்டாக பிளந்து அப்படியே
என்னை விழுங்கியது போல் இருந்தது........



:(







:(











ஏமாந்திங்களா!!!!!!

நான் படிச்சது எல்லாம் உள்ளூரிலேதான், தொழில்நுட்ப கல்லூரி
மட்டும் 15km தள்ளி இருந்த இன்னோர் ஊரில்.

அங்கு சென்று வர
என் அப்பா வேலை பார்த்த நிறுவனத்தில் மினி பஸ் வசதி
கொடுத்து இருந்தார்கள், அதில்தான் சென்று வருவேன். (அந்த
பேருந்தை "நாய் வண்டி" என என் நண்பர்கள் கேலி செய்வர், அந்த "ரகசியத்தை" இங்க நான் சொல்ல மாட்டேன்)

ஆகவே, எனக்கு பேருந்து காதல் "வாய்ப்பு" அமையவில்லை.

இந்த தொடரை எழுத வேண்டி, இப்படி
ஒரு "கதை" எழுதினேன்.


எப்பூடி!!!!!!!


டிஸ்கி 1:முந்தைய இடுகையின் போதே (விருது வழங்கும் விழா)
நிறய நண்பர்கள் ஆசையா பரோட்டா கேட்டாங்க, அப்படி
கேட்டவங்க, கேக்காதவங்களுக்கும் சேர்த்து பரோட்டா
சுட்டு வச்சிருக்கேன், இருந்து நிதானமா சாப்பிட்டு போங்க!!!















டிஸ்கி 2 :ருசியா இருந்ததா!!!!!!!!!! :))
*******************************************************


அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Thursday, March 18, 2010

பின்னூட்ட "குலசாமிக்கு" ஒரு படையல் (தொடர் பதிவு)

இந்த தொடர் "படையலுக்கு" என்னை அழைத்த நண்பர் மங்குனி அமைச்சர்ருக்கு எனது நன்றி.

கண்டிசன்ஸ் 1 ) உங்களுக்கு வந்த , நீங்க அனுப்பிய பின்னூட்டங்கள்ள உங்களுக்கு பிடித்த பத்து2 ) மொக்கைக்கு முன்னுரிமை3 )காப்பி அடிக்க கூடாது (டீ வேனா அடிச்சுக்கல்லாம்)4 ) :-) , :-)) இப்படி போடக்கூடாதுஅப்புறம் இது தான் முக்கியமான கன்டிசன்5) மேலே உள்ள எந்த கன்டிசனையும் பாலோ பன்னக்கூடாது.

எச்சரிக்கை:இது 100% மொக்கை மட்டுமே, தொடர விருப்பம் இருந்தால் தொடரவும்.

இனி மொக்கை ஆ"ரம்பம்"

எனக்கு வந்த பின்னூட்டங்கள்:

பி.ஆர் said

ஏய் பரோட்டா
என் கிட்ட வச்சுக்காத கலாட்டா
அப்புறம் நீ ஆயிருவ கொத்துபரோட்டா
இப்ப நான் போய்ட்டு வரட்டா.

மதனபாப் said

:) :))

:))) :))))))))

விச்சு said

கண்ணா நீ, ஒரு பதிவையாவது உருப்படியா எழுதுவியானு
எதிர்பார்த்திருக்கேன்......
எதிர்பார்க்கிறேன்.....
எதிர்பார்த்து கொண்டே இருக்கிறேன்....

பெரியாரசு said

பழனியா........

திருப்பாச்சியா......

திருப்பதியா.......

உன் பேர் என்ன ராசா....... இந்த மொக்கை போடுற.

வெடிவேலு said

நீ வச்சு இருக்கிற பேர பாத்து நம்ம மதுரை முனியாண்டி விலாஸ்
கணக்கா, ஜூடா பரோட்டா கொடுப்பியோன்னு நினைச்சு "நம்பி"
வந்தனைய்யா........ஏன்யா இந்த கொல வெறி...........நடக்கட்டும்....

அல்லோ, நானும் பதிவர்தான்..... நானும் பதிவர்தான்.........வரட்டா,,,,,,,,


இனி நான் அனுப்பிய பின்னூட்டங்கள்:

To: அரசு போக்குவரத்து கழக கடமையாளர்

கடமை உணர்ச்சி பற்றிய உங்களின் இந்த இடுகையில், "இலவச பஸ் பாஸ்" எடுத்து வராத "பள்ளி சீருடை அணிந்திருந்த" எட்டாம் வகுப்பு மாணவியிடம் அபராத தொகை வசூலித்த உங்களின் கடமை
உணர்ச்சியை அறிந்து கொண்டேன், "பாராட்ட" தமிழில் வார்த்தைகள் இல்லை. (அனைவரயும் இலவசமாக பயணப்பட அனுமதியுங்கள் என்று
கேட்கவில்லை, குறைந்த பட்சம் அந்த மாணவியை அடுத்த முறை
பாஸ் இல்லாமல் பயணம் செய்ய இயலாது என அறிவுரை கூறி
விட்டு இருக்கலாமே)

To:"ஆராய்ச்சியாளர்"

நான் ஒரு "ஆராய்ச்சியாளன்" என்ற உங்களின் இந்த இடுகை அருமை,
இனிமை , இளமை . நானும் உங்கள் ஆராய்ச்சி கூடத்தில் சேர ஆவலை
தூண்டுகிறது இந்த இடுகை. ஆனால் "சீருடை" மட்டும் மாற்றி விடுங்களேன்.

To:தொல்லைகாட்சிகள்

குழந்தைகளும் உங்கள் இடுகைகளை பார்ப்பதை
நினைவில் வைத்து கொள்ளுங்கள், இனிமேல் "அந்த" மாதிரி படங்களை
போட்டு கொண்டு இருக்காதீர்கள்.

To: மாண்புமிகு "மாண்புமிகுக்கள்"

உங்களின் பட்ஜெட் பற்றிய இந்த இடுகை அருமை, ஆனால் பெட்ரோல்
"பற்றிய" விஷயம் மற்றும் என் வயிற்றில் நெருப்பை கட்டியது போல்
இருக்கிறது.

To:பொது ஜனங்கள்

எவ்வளவு அடித்தாலும், "உரலாகி" நிற்கும் உங்கள் வலிமையும்,
அலுவலகத்தில், (or) தொழிற்சாலையில் எப்படி பிழிந்தாலும்,
"இடியாப்பமாய்" வெளி வரும் உங்களின் "திறமையையும்" இந்த
இடுகை பறை சாற்றுகிறது.


டிஸ்கி (or) குஸ்கி :
மேலே சொல்லப்பட்ட கண்டிசனில் 5-வதை மட்டும் நான் பின்
பற்றி இருக்கிறேன். (ஹி,,,,,ஹி.....)
மேலே சொல்லப்பட்ட பின்னூட்டங்கள் அனைத்தும் எனது
கற்பனையே(!!!) இந்த தொடர் படையலை படைக்க
விருப்பம் உள்ளவர்கள், விரைவாக "சமையலை" ஆ"ரம்பி"க்குமாறு
அன்புடன் கேட்டு கொள்(கொல்)கிறேன் :))

****************************************************************


அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Thursday, March 11, 2010

எனக்கு பிடித்த 10 - பெண்கள் - தொடர்பதிவு

இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த சகோதரி திவ்யாஹரி
அவர்களுக்கு எனது நன்றி. (தொடர் பதிவு வாரமா இது :)) )


எங்கள் நிறுவனத்தை துவக்கவும், வளர்க்கவும், உறுதுணையாக இருந்து, இதற்காக அவருக்கு வந்த நல்ல வேலை வாய்ப்பினையும் விட்டு கொடுத்தவர், என இன்று வரை அவர் கணவரால் போற்றப்படும் சுதா நாராயணன்.
(இவரின் கணவர் நாராயணன்மூர்த்தி - இன்போசிஸ்)

இவர் பாடினால் மொக்கை பாடல் கூட கேட்க மிக இனிமையாக
இருக்கும், இவர் குரலுக்கு மட்டும் இன்னும் வயதாகவில்லை,
பின்னணி பாடகி S.ஜானகி.

படிக்கும் காலத்தில் எனக்கு மிக பிடித்த பொழுதுபோக்கு இலங்கை
வானொலி நிகழ்ச்சிகள் கேட்பது. நிகழ்ச்சி தொகுத்து அளிக்கும் இவரின்
பாங்கு எனக்கு மிகவும் பிடிக்கும், இவர் குரலை கேட்டாலே உற்சாகம்
தொற்றி கொள்ளும் அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம்.

பள்ளி பாடத்தில் இவரைப்பற்றி படிக்கும்பொழுதே பிடித்தது.
போலந்து நாட்டை சேர்ந்த இவர், வேதியியல் மற்றும் இயற்பியலில் நோபல் பரிசு
வென்றவர்: மேரி க்யூரி.

நகைச்சுவை பாத்திரமா, குணசித்திரமா அனைத்திலும் இவரின் முத்திரை இருக்கும். இவர் நடிக்கும் கதாபாத்திரத்துடன் நம்மை ஒன்ற செய்து விடுவார்
நடிகையர் திலகம் சாவித்திரி.

அல்பேனிய நாட்டில் பிறந்து, இந்திய குடிஉரிமை பெற்று, ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும் உதவியவர்
பாரத ரத்னா விருது பெற்ற அன்னை தெரேசா.

பொதுவாக, திருமணம் ஆகிவிட்டாலே, விளையாட்டில் இருந்து விலகி கொள்பவர்கள் அதிகம். ஒரு குழந்தைக்கு தாயான போதும் இரண்டாவது முறையாக us open - champion - பட்டம் வென்றவர், டென்னிஸ் வீராங்கனை Kim clijsters.

தொடர்ந்து மூன்று முறை இந்திய பிரதமராக இருந்தவர், மூன்று
ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நான்காவது தடவையாக தேர்ந்து
எடுக்க பட்டவர் இந்திரா காந்தி.

வானொலியில் செய்தி கேட்கும் வழக்கம் உடையவர்கள் கண்டிப்பாக
இவரது குரலை கேட்டு இருப்பீர்கள், இந்த வெண்கல குரல் எனக்கு
பிடித்த ஒன்று, குரலுக்கு சொந்தக்காரர் சரோஜ் நாராயணசுவாமி.

மின்சார ரயில் பயணத்தின்போது, சுருதி சுத்தமாக ஒரு பின்னணி
பாடகியின் நேர்த்தியுடன் பாடும் கண் பார்வை மட்டும் இழந்த
பெயர் தெரியாத, அந்த பெண்மணி(கள்).

இந்த தொடர் பதிவை தொடர, இவர்களை அன்போடு அழைக்கிறேன்:

இராமசாமி கண்ணண்

Starjan ( ஸ்டார்ஜன் )

சேட்டைக்காரன்

ஜீவன்சிவம்

ட்ரீமர்


நிபந்தனைகள் :உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,வரிசை முக்கியம் இல்லை.,ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து
*********************************************************************


அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Sunday, March 7, 2010

கண்டு கொண்டேன்!! - யார் ஞானி - தொடர் பதிவு

ஞானியை தேட சொல்லி (கவனிக்க ஞாநி அல்ல!!) என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த நண்பர் ஜீவன்சிவம் அவர்களுக்கு எனது நன்றி.

உங்கள் வாழ்வில் மறக்க முடியாத பருவம் எது என கேட்டால் அனைவருக்கும் உடனே மனதில் எழுவது, பள்ளி மற்றும் கல்லூரி பருவமாகத்தான் இருக்கும்.

ஏன் நமக்கு, நிகழ்காலம் பிடிப்பதில்லை?

நிகழ்காலத்தில் நாம் நாமாக இருப்பதில்லை. பெரும்பாலான சமயங்களில், இதை செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்வார்களோ என்று, நம்மை மறந்து நாமே
அவர்களாகி விடுகிறோம்.

ஆரோக்கியமற்ற போட்டி, பொறமை, பேராசை எல்லாம் நம்முள் புகுந்து விடுவதன் பலன் மன நிம்மதியை இழக்கிறோம்.

நம்முள் இருந்த "நிம்மதியை" நாமே தொலைத்து விட்டு, பின்னர் அதை வெளியே தேடினால் எப்படி கிடைக்கும்.

வாழ்வில் லட்சியம் என்ற இலக்கு தேவைதான். அதற்காக வேண்டி நிகழ கால சந்தோஷ தருணங்களை நாம் அனுபவிக்க மறக்கிறோம்.

ஒரே ஒரு நாள் குளிப்பதில் இருந்து, சாப்பிடுவது வரை நாம் தினமும்
செய்யும் செயல்களை ரசித்து செய்து பாருங்கள். முக்கியமாக நாம்
செய்யும் வேலையினை, "விரும்பி" செய்து பாருங்கள். நிச்சயம் நம்
மனதில் ஒரு சந்தோசம் பரவும்.

உங்களால் முடிந்த வரை அடுத்தவருக்கு உதவுங்கள், அப்போது
கிடைக்கும் உற்சாகத்தை நீங்கள் மறக்கவே முடியாது.

முக்கியமாக நினைவில் நிறுத்த வேண்டியது, மந்திரத்தில் மாங்காய் கூட பறிக்க முடியாது. விதைத்து விட்டு முறையாக அதனை பராமரித்து வளர்த்தால் மட்டுமே முடியும் என்கிற போது,
எப்படி மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோயினை
அறவே மருத்துவ அறிவு இல்லாத ஒரு சந்நியாசி குணபடுத்த முடியும்.

ஆரோக்கியமான உணவு முறையினையும் கடை பிடித்து
சிறிதளவு உடற் பயிற்சியிலும் ஈடு பட்டாலே போதும்.

ஞானியை தேடும் வேலை தேவையற்ற ஒன்றாகி விடும்.

மொத்தத்தில் நாம் நாமாகவே இருந்தால் போதும், அனைவருமே
ஞானிகள்தான்.

இதை தொடர யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ, அவர்கள்
அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

********************************************************************



அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

*
*

Saturday, February 27, 2010

பப்பாளியும், கணக்கு வாத்தியாரும் - பதின்ம வயது தொடர் பதிவு


பதின்ம கால நினைவுகளை "கிளறி" பார்க்கும் இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த நண்பர்
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நிறைய இனிமையான விசயங்கள் இருந்தாலும், உங்களுடன் இரண்டு விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன். (அது சரி பிளேடுன்னா ரெண்டு பக்கமும் பதம் பார்க்குமுல்ல)

எங்கள் வீட்டில் பப்பாளி மரம் இருந்தது, அதனால் தங்கு தடையின்றி நிறைய பழங்கள் சாபிட்டதன் பலன் ஒரு கட்டத்தில் பப்பாளி என்று யாராவது சொன்னாலே காத தூரம் ஓடும் அளவுக்கு வெறுப்பு வந்து விட்டது.

இதே பழத்தை, சாப்பிடாமலே, பத்து ரூபாய் தண்டம் அழுத கதைதான்
இப்போ நான் சொல்லபோறது.

நான் படித்தது, ஆங்கிலோ இந்தியன் பள்ளியில்....
இருந்து 15 கி.மீ. தள்ளி இருந்த அரசு மேல் நிலைப்பள்ளியில்.
அங்கு நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்பொழுது மைசூர், பெங்களூர், கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு, பள்ளி மூலம் சுற்றுலா சென்றோம். "எங்கள் ஆசான்" ஒருவர், ஒய்வு எடுப்பதற்காக நீர் நிலைகளின் அருகே பேருந்து நிற்கும் போதெல்லாம் வருதோ, வரலியோ எல்லோரும் போய் "உக்காந்து முயற்சி" பண்ணிட்டு வாங்க, என்று சொன்ன போதெல்லாம்
வராதது, மைசூர் பிருந்தாவனம் சென்ற பின் வந்தது.

நானும் என் இரண்டு நண்பர்களும், இடத்தை தேடி அலைந்து, கடைசியில் இடுப்பளவு முள் வேலி கொண்ட ஒரு இடத்தினை காட்டி அங்கு "போகலாம்" என நண்பன் சொல்ல, வேலியை தாண்டி
நகத்தை கூட செலுத்த விரும்பாத நான் வேண்டாம் என கூறியும்,
அவர்களின் வற்புறுத்தலாலும், "உந்துதலாலும்" வேலி தாண்டி
சென்று "முடித்து" விட்டு, வெளியாகும் முன்பு,
தடியான இரு ஆசாமிகள் எங்களை பிடித்து கொண்டனர்.

அது ஒரு பப்பாளி தோட்டம், இது வரை காணாமல் போன பப்பாளிகள் எல்லாம் நாங்கள் திருடியதாகவும், இப்பொழுது எடுத்ததை எங்கே வைத்து இருக்கிறீர்கள் எனவும் மிரட்ட
ஆரபித்து விட்டார்கள்.

பின்னர் நாங்கள் சுற்றுலா வந்த மாணவர்கள் என்றும், தோட்டத்துக்கு "உரம் போட" வந்த விசயத்தையும் விளக்கினோம்.
சரி.. சரி.. 30 ரூபா கொடுங்கள் என எங்களை மிரட்டி, வாங்கியும்
கொண்டார்கள். என்ன கொடும மேம் இது.

************************************

கணக்கு புத்தகத்தை ஒரு பக்கம் வைத்து, வேப்பங்காயை இன்னொரு பக்கம் வைத்தால், இரண்டாவதை எடுத்து கொள்வேன். அவ்வளவு "ஆர்வம்" கணக்கு பாடத்தில்.

இந்த "ஆர்வத்தை" திசை திருப்பியவர், பத்தாம் வகுப்பு கணக்கு வாத்தியார்.

ஒவ்வொரு ஸ்டெப்பையும் மிக பொறுமையாக, நிதானமாக விளக்கி கூறுவார். புரிய வில்லை என்றால், கேளுங்க கண்ணுகளா என்று அன்பாக கூறுவார். இவை அனைத்தும் பள்ளி நேரம் முடிந்து, அவரின் சொந்த டியூஷன் எடுக்கும் நேரத்தில்!! அவருக்கு செலுத்த வேண்டிய தொகை மிக
அதிகமானது.

டியூஷன் செண்டர், பள்ளி வகுப்பறைதான். பள்ளி நேரத்தில் ஏனோ,தானோ என்று வகுப்பு எடுப்பார், ஒரு பயலுக்கும் ஒன்றும் விளங்காது.

அவரிடம் டியூஷன் படிக்காத பயல்களா பார்த்து கேள்வி கேட்பார்,
விடை தெரியாமல் முழித்தால் "வெளுத்து" விடுவார்.

வேற வழி, மறு நாளே அவரின் டியூஷன் வகுப்பில் அந்த பையன்
இருப்பான். என்ன கொடும சார் இது.


டிஸ்கி:
இதெல்லாம் ஒரு மலரும் நினைவுகளான்னு கேட்டீங்கன்னா,
குட்டை நண்பர் ஸ்டார்ஜனுக்கு வைங்க.

பூச்செண்டு!!!! கொடுக்கணும்னு தோணினா இங்க கொடுங்க, ஹி...ஹி...ஹி....

இத்த படிச்சதுக்கு அப்பால யாருக்கெல்லாம் பழைய நினைவுகள்
பீறிட்டு திரும்புதோ, அவங்க அனைவரும் இதை தொடர அன்புடன்
அழைக்கிறேன்.
*********************************************************************

அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)