அப்போதான் படத்தை "அனுபவித்து" பார்க்க முடியும் என்பதால். (யாருப்பா அது கடைசி பாராவுக்கு ஓடுறது)
கதைபற்றி அனைவரும் தேவையான அளவுஅலசிவிட்டதால் என்னை "பாதித்த"
சில காட்சிகளை பகிர்ந்து கொள்கிறேன்.
மாதவன் மற்றும் த்ரிஷா காரில் சென்று கொண்டே விவாதிக்கும் காட்சி அதன்பின் நடக்கும் விபத்து, மிக சாதாரணமாய் தோன்றினாலும்
அந்த காட்சியே கதையின் திருப்பமாய் வருவது எதிர்பாராதது.
ஆரம்ப காட்சிகள் மிக சீரியஸ் ஆக இருப்பதால் மிக அழுத்தமான காதல் கதை வரப்போகிறது என எதிர்பார்த்தேன். கமல்
என்ட்ரி ஆனபின்தான் கதைக்களன் நகைச்சுவையில் பயனிக்கப்போகிறது என்பது தெரிந்தது.
வாரத்தைகளில் கிச்சுகிச்சு காட்ட முயற்சி செய்துள்ளார்கள். சில இடங்களில் வொர்க் அவுட் ஆகிறது. பல இடங்களில் "ஞே".
தூங்கும்போது அந்தச்சிறுவன் கட்டைவிரல் ஆட்டும் காட்சி ஹா...ஹா...
கமலின் நண்பனாக வீடியோ சாட்டில் வரும் அந்த மொட்டையும் ஊர்வசியும் வரும் காட்சிகள் செண்டிமெண்ட்.
அந்த மொட்டைதான் ரமேஷ் அரவிந்த் என்பது படம் பார்க்கும்போது
தெரியவில்லை, படம் பார்த்தபின் நம் பதிவர்களின் விமர்சனத்தை மீண்டும் முழுமையாக படித்த பின்பு தெரிந்தது.
உஷாஉதூப், ஓவியா எல்லாம் வந்து போகிறார்கள்.
மாதவன், கமலிடம் போன் பேசிக்கொண்டே டிரைவ் செய்யும்போது "மாமாவிடம்"
மாட்டிக்கொள்ளும் காட்சி கலகல. நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டு இருக்கும் அந்த மலையாளம் பேசும் ஜோடிகள் வரும் சீன்களில் சுத்தமாக நகைச்சுவை இல்லை, முடிவில் வரும் சில காட்சிகள் தவிர்த்து.
த்ரிஷா சோகமாகவே வருகிறார், சொந்த குரலில் பேசி இருக்கிறார்.
கமலும், அவரும் பேசிக்கொள்ளும் ஒரு காட்சியில் த்ரிஷா "நன்றி" என்று
சொல்ல அதற்கு கமல் நீங்கள் நடிக்கும் படங்களில் இது மாதிரி தமிழே வர
மாட்டேங்குதே என்று கேட்பார். ஆனால் இதே படத்தில் நிறைய வசனங்கள் ஆங்கிலத்தில்தான் வரும்!
ஊர்வசி சீரியல் நடிகை மாதிரி கண்ணை கசக்கி கொண்டேதான் இருக்கிறார், அவ்வளவு சோகத்திலும்
சாட்டிங்கில் நிஷாவை (த்ரிஷா) பார்த்தவுடன் மிக கலகலப்பாக நான் உங்க "பேன்" என்பார்.
கதை, திரைக்கதை, வசனம்: கமல்ஹாசன்.
இயக்கம் :K .S .ரவிக்குமார்
இசை :தேவிஸ்ரீபிரசாத்
ஒளிப்பதிவு:மனுஷ்நந்தன்.
மன் மதன் அம்பு : காஸ்ட்லி மேடை நாடகம்
Picture Thanks: yahoo.com





அப்புறம் ஜெனிலியாவை தன் வீட்டிலே, பெரியப்பா பாக்கியராஜின் குருஜிஅனுப்பிய பெண் என பொய் சொல்லி
*********************************************




Picture:Thanks
picture:thanks 
Picture:Thanks to chennaiburrpcom










ஒரு சுபயோக சுப தினத்தில், ஷூட்டிங் ஆரம்பித்தோம், கிட்டத்தட்ட பாதி படம் எடுத்து விட்ட



