Tuesday, January 26, 2010

வானவில் உணர்வுகள்


உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் ஏறவில்லை
உன்னால்தானடா மெய் மறந்தேன் என்றாய்
பறந்தேன்

ஹைட்ரஜனும் நைட்ரஜனும் புரியவில்லை
என் ஆக்சிஜன் நீ என்றாய்
குளிர்ந்தேன்

ஒரு செல் உயிரியாம் அமீபா
நாமோ ஈருடலில் ஓருயிர் என்றாய்
நெகிழ்ந்தேன்

மல்லி படர வேண்டுமாம் பந்தல்
நீ படர நான் பந்தல் என்றாய்
பரவசமானேன்

பூமிக்கு துணையாய் நிலா
உன் வாழ்க்கை துணையாய் நான் என்றாய்
வலுவானேன்

ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்றாய்
கனவு பெருங்கடலில்
முழ்கினேன்

மணப்பந்தல் என்றதும் என் குடியில் பிறந்த
இவரே என்னவர் என்றாய்
நடை பிணமானேன்.


*************************************************************




அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

28 comments:

அண்ணாமலையான் said...

நிகழ்காலத்த சொல்லிட்டீங்க..

angel said...

nice n different

சைவகொத்துப்பரோட்டா said...

@அண்ணாமலையான்

மிக்க நன்றி, தங்களின் கருத்துக்கும் தொடர் வருகைக்கும்.

சைவகொத்துப்பரோட்டா said...

@angel

மிக்க நன்றி ஏஞ்சல்.

புலவன் புலிகேசி said...

அறிவியலோடு கொணர்ந்து மனிதனின் சாதி வெறியை படம் பித்து காட்டிய கவிதை

சைவகொத்துப்பரோட்டா said...

@புலவன் புலிகேசி

நன்றி நண்பா, புலவருக்கே இந்த கவிதை பிடித்து உள்ளதா.

வெற்றி said...

தலைப்பு,கவிதை,உங்கள் உணர்ச்சிகள் அனைத்தும் மிக அருமை..

சைவகொத்துப்பரோட்டா said...

@வெற்றி

மிக்க நன்றி நண்பரே. (உங்களுக்கு ஒரு உண்மை சொல்லவா, இதுவே எனது நாலாவது கவிதை முயற்சி.)

பின்னோக்கி said...

ஆமாங்க. நீங்க சொன்னது மாதிரி, கடைசியில ஏமாத்திடறாங்க :(

சைவகொத்துப்பரோட்டா said...

@பின்னோக்கி

//ஆமாங்க. நீங்க சொன்னது மாதிரி, கடைசியில ஏமாத்திடறாங்க :(//

(அச்சச்சோ பின்னோக்கி சாருக்கு ஏன் இவ்ளோ சோகம்.) தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :))

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{ ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்றாய்
கனவு பெருங்கடலில்
முழ்கினேன் }}}}}}}}}


ஆஹா அற்புதமான உணர்வுகள் . அழகாக அரங்கெற்றி இருக்கிறீர்கள் .
வாழ்த்துக்கள் நண்பரே .

சைவகொத்துப்பரோட்டா said...

@சங்கர்

நன்றி நண்பா. அப்ப கூடிய சீக்கிரம் நானும் ஒரு கவிஞன் ஆகிவிடலாம் :))

Paleo God said...

வணக்கம் புலவரே..::)))

சைவகொத்துப்பரோட்டா said...

@பலா பட்டறை

வணக்கம் கவியரசரே :))
தங்கள் வரவு கண்டு யாம் மகிழ்ந்தோம்.

Muruganandan M.K. said...

சாதீயத்திற்கு எதிரான குரலை நாசூக்காக எழுப்பியு்ளீர்கள். நல்ல கவிதை

சைவகொத்துப்பரோட்டா said...

@Dr.எம்.கே.முருகானந்தன்

நன்றி டாக்டர் தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

ரோஸ்விக் said...

ம்ம்ம்... கரக்டா சொல்லீருக்கீங்க...

http://thisaikaati.blogspot.com

சைவகொத்துப்பரோட்டா said...

@ரோஸ்விக்

நன்றி நண்பரே, தங்கள் கருத்துக்கு.

Anonymous said...

Romba Nalla irukku.
Vazhlthukal.

Ragavachari Barathan

சைவகொத்துப்பரோட்டா said...

@ராகவாச்சாரி பரதன்

மிக்க நன்றி உங்களின் ஊக்கத்திற்கு.

ஸ்ரீராம். said...

முதல்லயே சொன்னா அடி சிறிதாக இருக்கும். படிப் படியா மேலே ஏற்றி மேலேருந்து கீழ தளளி விட்டா மாதிரி இல்லா இருக்கு..என்ன..கொடுமையா இல்ல இருக்கு..

சைவகொத்துப்பரோட்டா said...

@ஸ்ரீராம்

அதானே, என்ன கொடுமை சார் இது. தங்கள் கருத்துக்கு நன்றி.

அன்புடன் மலிக்கா said...

எதார்த்த நிகழ்வுகளை வரிகளுக்குள் கொண்டுவந்தவிதம் அருமை..

சைவகொத்துப்பரோட்டா said...

@அன்புடன் மலிக்கா

மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு.

r.v.saravanan said...

நல்ல கவிதை

வாழ்த்துக்கள் நண்பரே

சைவகொத்துப்பரோட்டா said...

// r.v.saravanan kudandhai said...
நல்ல கவிதை

வாழ்த்துக்கள் நண்பரே//


மிக்க நன்றி சரவணன்,
உங்களின் தொடர் பின்னூட்டங்கள்
உற்சாகம் அளிக்கிறது.

cheena (சீனா) said...

அன்பின் சைகொப

கவிதை அருமை
உவமைகள் நன்று
கற்பனை வளம் கொடி கட்டிப் பறக்கிறது
நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா

சைவகொத்துப்பரோட்டா said...

// cheena (சீனா) said...
அன்பின் சைகொப

கவிதை அருமை
உவமைகள் நன்று
கற்பனை வளம் கொடி கட்டிப் பறக்கிறது
நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா//

உற்சாகம் அளிக்கிறது உங்களின்,
பின்னூட்டங்கள்!!! நன்றி அய்யா.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)