Wednesday, May 19, 2010

வைரமும், வஞ்சியும்

இடம்:சைவகொத்துப்பரோட்டா ஸ்டால்

நபர்கள்:அப்பாவி அங்கு(அ.அ), பிலிம் பித்துக்குளி (பி.பி), சேட்டு,
சைவகொத்துப்பரோட்டா (எஸ்.கே.பி) மற்றும் சிறப்பு
விருந்தினர்களாகிய நீங்கள்.

சேட்டு:இன்னாப்பா, இன்னைக்கி கடையில ஒரே ஜொலிப்பாகீது!!

பி.பி: வாய்யா சேட்டு, நம்ம மிக்கி மண்டையனுக்கு ஜெய்லானி வைர விருது
கொடுத்திருக்காங்கோ. இப்போ "இது" அதை பகிர்ந்து கொள்ளப்போவுதாம்!!

அ.அ:அண்ணே இத நாம லவுட்டிட்டு போய் வித்துரலாமா.

பி.பி:மௌஸ் மண்டையா, இது நட்புணர்வுடன் கொடுத்ததுடா, இதுக்கு மதிப்பு போட
முடியாதே!!

எஸ்.கே.பி:என்னண்ணே, ஏதோ மதிப்பு அப்படி, இப்படின்னு பேச்சு அடிபடுது.

பி.பி:வாங்க........தம்பி.......இந்த வைர விருத பத்திதான்
பேசிகிட்டு இருக்கோம்.

எஸ்.கே.பி:ஆமாண்ணே, இதோ வந்திட்டாங்க நம்ம கஸ்டமர்ஸ்!!
சிலரிடம் இதை, பகிர்ந்து கொள்ளலாம்ன்னு நினைக்கிறேன். சிலரோட
வலையிலும் இந்த வைரத்தை பதிக்க உள்ளேன்!! ஜில்தண்ணி
கிறுக்கல்கள்
பிரசன்னா
Hanif Rifay
ப்ரின்ஸ்
r.v.saravanan
Mohan

எடுத்து கொள்ளுங்கள் நண்பர்களே!!
************************************
சேட்டு:யோவ் பி.பி சோக்கா குந்திநீனு கீதே பொண்ணு, யாருப்பா
அது!!

பி.பி:ஓ.......அதுவா.......நம்ம மருத்துவம் பேசுகிறது ! துமிழ் இருக்காங்களே, அவுங்க ரொம்ப நல்லவங்க. உபயோகமான
மருத்துவ தகவல்களும் கொடுத்து, அத்த நம்ம மிக்கி மண்டையன் போய் படிச்சதுக்கு நன்றி சொல்லி
கொடுத்திருக்காங்கப்பா!!

அ.அ: அதாவது கரும்பு தின்ன கூலி கொடுத்திருக்காங்க, அப்படிதானே!!

பி.பி:அதேதாண்டா மவுஸ் மண்டையா!!

எஸ்.கே.பி:அன்போடு எனக்கு விருது கொடுத்தவர்களுக்கு
நன்றி சொல்லும் விதமாக "துமிழ்" அவர்கள் எனக்கு கொடுத்த
இந்த நன்றி பரிசை எனக்கு விருது கொடுத்த நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன் மலிக்கா
திவ்யாஹரி
ஸ்டார்ஜன்
வந்தேமாதரம் (சசிகுமார்)
ஜெய்லானி

வாருங்கள் நண்பர்களே, என் நன்றி பரிசை எடுத்து கொள்ளுங்கள்.
***********************************
பி.பி:மிக்கி மண்டையன் நமக்கு ஏதாவது பரிசு கொடுப்பானா?

எஸ்.கே.பி:ரொம்ப நாளா லீவ் கேட்டு பி.பி, அ.அ, ரெண்டு பேரும் அடம் பிடிச்சதால நம்ம கடைக்கு ஒரு மாசம் லீவு!!

பி.பி;ஹையோ........இந்த அநியாயத்த கேட்க யாருமே இல்லையா!!
நாங்க எப்ப லீவ் கேட்டோம்!! இந்த மிக்கி மண்டையன்
ஊருக்கு போறான், நைசா எங்கள கோத்து விட்டு போறதப்பாரு.

எஸ்.கே.பி:என்னண்ணே சந்தோசமா.........

பி.பி:(முணுமுணுப்பாக) எங்களுக்கு சந்தோசமோ இல்லையோ,
நம்ம கஸ்டமர்ஸ் எல்லாம் உன் தொல்லை இல்லாம
நிம்மதியா இருப்பாங்க........

ஹி...........ஹி........."ரொம்ப சந்தோசம்" எஸ்.கே.பி.
*********************************
டிஸ்கி:ஹி......ஹி.....விடுமுறையில் செல்கிறேன். அதனால் வலை உலகில், ஒரு மாதம் இடைவேளை. முடிஞ்சா அப்பப்ப "வருவேன்" என்பதையும் கூறிக்கொள்கிறேன் :)) விடுமுறை கழிந்த பின்னர்
மீண்டும் சந்திப்போம்.
அனைத்து நண்பர்களுக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்!!
********************************************


Sunday, May 16, 2010

கிரீன் பார்க்

வாசு, குணா மறந்துராதீங்கடா நாளைக்கு காலையில பத்து மணி நேரா வந்துருங்கடா கிரீன் பார்க்குக்கு.

இரவு முச்சூடும் எனக்கு தூக்கம் வரல. நாளை அடையப்போற "உன்மத்த நிலைய" இப்பவே
மனசால அனுபவிக்க ஆரம்பிச்சேன். இதுக்கு முன்னாடி ஒரே ஒரு தடவ அங்கே போயிருக்கேன்
அதிகாரப்பூர்வமா!!

நாளைக்கு நானும், என் நண்பர்களும் திருட்டுத்தனமா அங்க போறதா பிளான். திருட்டு
மாங்கான்னாலே தனி ருசிதானே!!

"அங்க" போறது நீங்க நினைக்கிற மாதிரி அவ்ளோ சுலபமில்லைங்க, நீங்க மில்லியனரா
இருக்கணும் அல்லது ஏதாவது "நல்ல செயல்" செஞ்சி இருந்தீங்கன்னா அங்க போக முடியும்.
முக்கியமா அங்க மட்டும்தான் சிலிண்டர் இல்லாம
"இருக்க முடியும்."

அப்போ நீ எப்படி போனேன்னு கேக்குறீங்களா!!அஞ்சு வருசத்துக்கு முன்னால அதாகப்பட்டது
கடந்த 15 May 2096 - ல, சாலை விபத்துல ஒருத்தர்
மூச்சு விட சிரமப்பட்டபோது, என்னோட "ஸ்பேர் சிலின்டர"
அவருக்கு கொடுத்து உதவினேன்.

அதுக்கு பரிசா அரசாங்கத்துல எனக்கு ஒரு ப்ரீ டிக்கெட் கொடுத்தாங்க "கிரீன் பார்க்குக்கு"

பத்து மணி ஆச்சு, இதோ வாசு, குணா ரெண்டு பெரும் வந்தாச்சு!! டேய் குணா நல்லா
கேட்டுக்க, சரியா 10 .10 மணிக்கு மெயின் கேட்டை திறப்பான்,
12.00 மணிக்கு
செக்யுரிட்டி "சார்ஜ்" ஏத்திக்கபோகும். அப்போ கிடைக்கிற ரெண்டு செகண்ட் கேப்பில நாம உள்ள பூந்துடனும் சரியா?

11.00 மணி வாக்கில கிரீன் பார்க் ஹவுஸ் புல் ஆயிருச்சு!!
எல்லாம் பண "முதலைங்க", உள்ள பூந்தவுடனே எல்லோரும்
சிலின்டர, சந்தோசமா தூக்கி எரியுதுங்க!!

இது போன்ற ஆட்களால்தான், இப்போ இந்த நிலைமைக்கே வந்திருக்கோம்ன்னு
எங்கள் முப்பாட்டர்களின் வலைப்பூ மூலமா தெரிஞ்சுகிட்டேன்.

மணி இப்போ 11.30.

சீக்கிரம் நம்ம "ஸ்பெசல் உடுப்ப" போட்டுக்கோங்க.

போட்டுகொண்டோம்.......... 11.40.................11.50..................

ஆச்சு 12.00 மணி "அது சார்ஜ்" ஏத்திக்க கிளம்பிருச்சு........

நாங்க மூணு பேரும் மின்னலென "உள்ளே" பாய்ந்தோம்.

சிலிண்டரை வீசிவிட்டு, "மரங்களோடு மரங்களாய்" ஐக்கியமாகி "இயற்கையான காற்றை" ஆனந்தமாக சுவாசிக்க ஆரம்பித்தோம்!!

********************************************************

Friday, May 14, 2010

எதுவாய்?

நீ என்னை ஏற்கா
விட்டால் என்ன...

மீண்டும்
மூங்கிலாய் பிறந்து
புல்லாங்குழலாய்
உருமாறி
உன் இதழ் ஸ்பரிசம்
பெறுவேன்

மலராய் பூத்து
உன் கூந்தலில்
அமர்வேன்

மருதானியாய்
உன் விரல்களையும்
சிவக்கச்செய்வேன்

வளையலாய்
உன் கைகளோடு
உறவாடுவேன்

புற்களாய்
உன் பாதம் வருடுவேன்

ஆனால்.....
"எதுவாய்" மாறி
உன் இதயத்தில் நுழைவது.


**********************************************

Wednesday, May 12, 2010

சஞ்சனா

மாப்ள அவ என்ன பாத்து சிரிச்சாடா, அருவி பக்கத்துல
நின்னா மாதிரி ச்சும்மா மனசெல்லாம் சில்லுன்னு இருக்குடா.

டேய், இன்னும் எத்தனை நாளைக்குடா இதயம் முரளி மாதிரி
இப்படியே இருக்கு போற. அவனவன், பாத்தமா, பேசினோமா,
கல்யாணத்தை பண்ணினோமான்னு இருக்கான். இன்னும் பீல்
பண்ணிகிட்டே இருக்கியாடா. அவகிட்ட எப்படா உன் காதலை
சொல்லப்போற.

இன்னும் நாலு வருஷம் ஒரே இடத்துலதாண்டா படிக்க போறோம்,
அவளோட பேசிப்பழகி, அவ இல்லைன்னா நான் இல்ல, நான்
இல்லைன்னா அவ இல்லைங்கிற நிலை வந்த அப்புறம்
சொல்வேண்டா, அதுல இருக்குற சுகமே தனிதான். உனக்கு ஒரு
விசயம் தெரியுமாடா எனக்கும், சஞ்சுவுக்கும் பிறந்த நாள்
ஒரே மாதம், ஒரே தேதியிலடா!!

ஆச்சு நாலு வருஷம், ஆனா எனக்குதான் சஞ்சனாவ பாத்து
என் காதல சொல்ற "தைரியம்" இன்னும் வரல.

அப்புறம் கேம்பஸ் இன்டர்வியு மூலம் எங்க ரெண்டு பேருக்கும் ஒரே
கம்பெனியில வேலை கிடைச்சது. இன்னைக்கி வரை என்
காதலை அவ கிட்ட சொல்ல முடியலை.

சஞ்சனா......ஓ.........சஞ்சனா.......என் மொபைல் ரிங்கியது........
யாராய் இருக்கும்........

ஸ்க்ரீன் டிஸ்ப்ளேயில், சஞ்சனா காலிங்.........

ஹாய் சஞ்சு, எப்படிம்மா இருக்க.........

ஐ'ம் பைன்.......ஹாப்பி பர்த் டே டூ யூ டாட்...........

என் செல்ல மகளிடம் பேசிய பின்புதான் நியாபகம் வந்து தேதி
பார்த்தேன் 13 .03 .2011௦ இன்னைக்கி என்னோட பிறந்த நாள்!!
அட இன்னைக்கிதானே "அவளுக்கும்" பிறந்த நாள்
*********************************************

Sunday, May 2, 2010

வலைச்சரத்தில் பரோட்டா!!!

வலை உலகத்துல எத்தனை தகவல்கள் கொட்டி கிடக்கு, அதுவும்
நம்ம தாய் மொழியில படிக்கும்போது ரொம்ப இயல்பா மனசுல
பதிந்து விடுகிறது.

அனைவருள்ளும் ஒளிந்து இருந்த திறமைகளை வெளிக்கொண்டு வர
இந்த வலைப்பதிவு பெரும் துணை புரியது!!!

அப்படி நாம எழுதுறது நம்மோளட நின்னு போகாம, பலரை
சென்று சேர்ந்தால்தானே சிறப்பு.

இதுக்காகவே ஒரு தளத்தை உருவாக்கி, வாரத்திற்கு ஒருவர் என்று
ஒவ்வொரு வாரமும், ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து நாம்
படிச்சதுல, நம் மனதில் நின்ற மற்றும் அனைவருக்கும் போய்
சேர வேண்டிய தகவல்கள் என நாம் நினைப்பவற்றை
பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கும் நல் உள்ளம் திரு.சீனா அய்யா
அவர்கள், வரும் வாரம் அதாவது நாளை முதல்(03.05.10 to 09.03.10) ஒரு வாரத்துக்கு வலைச்சரத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு
கொடுத்துள்ளார்கள்.

அவருக்கும், வலைச்சர குழுவினருக்கும், என் இடுகைகளுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்களே உங்களுக்கும் முதலில்
எனது நன்றிகள்!!!

இங்கே எனக்கு ஊக்கமளிக்கும் நீங்கள், வலைச்சரத்திலும் வந்து
ஆதரவு கொடுக்க வேண்டி, உங்களை அன்போடு அழைக்கிறேன்.

நாளை வலைச்சரத்தில் சந்திப்போம்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)