Friday, May 14, 2010

எதுவாய்?

நீ என்னை ஏற்கா
விட்டால் என்ன...

மீண்டும்
மூங்கிலாய் பிறந்து
புல்லாங்குழலாய்
உருமாறி
உன் இதழ் ஸ்பரிசம்
பெறுவேன்

மலராய் பூத்து
உன் கூந்தலில்
அமர்வேன்

மருதானியாய்
உன் விரல்களையும்
சிவக்கச்செய்வேன்

வளையலாய்
உன் கைகளோடு
உறவாடுவேன்

புற்களாய்
உன் பாதம் வருடுவேன்

ஆனால்.....
"எதுவாய்" மாறி
உன் இதயத்தில் நுழைவது.


**********************************************

44 comments:

க ரா said...

அற்புதம் நண்பா.

Unknown said...

ஊசி?

ரத்தம்?

கொழுப்பு?

எதாவது ஒன்னைப் போட்டுக்குங்க.. ;))

கவிதை சூப்பர்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வலைசரத்திலிருந்து , விடைபெற்று,
மீண்டும், பதிவுலகில் காலடி எடுத்து வைக்கும்
அண்ணன் ‘சைவக்கொத்துபுரோட்டாவை’,வருக..வருக என வரவேற்கிறோம்..
இவன்
பட்டாபட்டி


( என்ன சார்.. வந்ததுமே, டவுட் வந்திடுச்சு உங்களுக்கு...?...
)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இதயத்தில நுழையனும் அவ்வளவுதானே..ரத்தமா மாறுங்க..இல்ல கத்தியா மாறுங்க..ஹா.ஹா

( ஆமா.. உருகி எழுதியிருக்கீங்க..எனக்கு டவுட் வந்திடுச்சு..)

Prasanna said...

கட்சி தாவல் இங்கே தர்மமடானு தலைவர் சொல்லி இருக்கார்.. ஹீ ஹீ :)

ஸ்ரீராம். said...

எண்ணங்களாய் மாறி இதயத்தில் நுழைந்து விடவும்...!

sathishsangkavi.blogspot.com said...

//மீண்டும்
மூங்கிலாய் பிறந்து
புல்லாங்குழலாய்
உருமாறி
உன் இதழ் ஸ்பரிசம்
பெறுவேன்//

அழகான வரிகள்....

பத்மா said...

தெரிஞ்சா அப்பிடியே எனக்கும் ஒரு மெயில் பண்ணிடுங்க ....:)))

ஜில்தண்ணி said...

காற்றாய் மாறி நுழையலாமா!!!
நல்லா இருக்கு கவித கவித

settaikkaran said...

உங்களுக்கு சந்தேகமிருந்தாலும், இது ஒரு சூப்பர் கவிதை என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை! :-)

ஜெய் said...

சூப்பர்.. காதலனாயிடுங்க..

vasu balaji said...

அழகான கேள்வி:). நல்லாருக்குங்க

Unknown said...

அழகான கேள்விதான்...
கேட்க தான் யாரும் இல்ல சகா....

சைவகொத்துப்பரோட்டா said...

// இராமசாமி கண்ணண் said...
அற்புதம் நண்பா.//

தொடர் ஊக்கத்திற்கு நன்றி ராம்.


// முகிலன் said...
ஊசி?

ரத்தம்?

கொழுப்பு?

எதாவது ஒன்னைப் போட்டுக்குங்க.. ;))

கவிதை சூப்பர்//

என்னா குறும்பு........:))
நன்றி முகிலன்.


// பட்டாபட்டி.. said...
வலைசரத்திலிருந்து , விடைபெற்று,
மீண்டும், பதிவுலகில் காலடி எடுத்து வைக்கும்
அண்ணன் ‘சைவக்கொத்துபுரோட்டாவை’,வருக..வருக என வரவேற்கிறோம்..
இவன்
பட்டாபட்டி
( என்ன சார்.. வந்ததுமே, டவுட் வந்திடுச்சு உங்களுக்கு...?...
)//

பலமான வரவேற்பு கொடுத்த பட்டு சாருக்கு
என் நன்றிகள். இது டவுட் இல்ல சார், கேள்வி :))


// பட்டாபட்டி.. said...
இதயத்தில நுழையனும் அவ்வளவுதானே..ரத்தமா மாறுங்க..இல்ல கத்தியா மாறுங்க..ஹா.ஹா

( ஆமா.. உருகி எழுதியிருக்கீங்க..எனக்கு டவுட் வந்திடுச்சு..)//

ஆஹா!! டெர்ரர்ரான யோசனையாவுள்ள இருக்கு :))
சந்தேகப்படாதீங்க, ச்சும்மா.......ஒரு சேஞ்சுக்கு.


// பிரசன்னா said...
கட்சி தாவல் இங்கே தர்மமடானு தலைவர் சொல்லி இருக்கார்.. ஹீ ஹீ :)//

ஓஹோ!! நீங்க அந்த ரூட்ல வரீங்களா!!
நன்றி பிரசன்னா.


//ஸ்ரீராம். said...
எண்ணங்களாய் மாறி இதயத்தில் நுழைந்து விடவும்...!//

ஜூப்பரு!! நன்றி அண்ணா.

சைவகொத்துப்பரோட்டா said...

// Sangkavi said...
//மீண்டும்
மூங்கிலாய் பிறந்து
புல்லாங்குழலாய்
உருமாறி
உன் இதழ் ஸ்பரிசம்
பெறுவேன்//

அழகான வரிகள்....//

கருத்துக்கும், வருகைக்கும் நன்றி சங்கவி.


// padma said...
தெரிஞ்சா அப்பிடியே எனக்கும் ஒரு மெயில் பண்ணிடுங்க ....:)))//

ரைட்டு......தெரி.........ஞ்..........சா
அனுப்பிடுறேன் :)) நன்றி பத்மா.


// ஜில்தண்ணி said...
காற்றாய் மாறி நுழையலாமா!!!
நல்லா இருக்கு கவித கவித//

இதயத்துக்குள்ள காத்து போன ஒன்னும் ஆயிடாதே :))
நன்றி ஜில்லு.


// சேட்டைக்காரன் said...
உங்களுக்கு சந்தேகமிருந்தாலும், இது ஒரு சூப்பர் கவிதை என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை! :-)//

அப்படியா!! மிக்க மகிழ்ச்சி!!
நன்றி நண்பா.


// ஜெய் said...
சூப்பர்.. காதலனாயிடுங்க..//

வாங்க ஜெய், ரைட்டு :))
நன்றி.


// வானம்பாடிகள் said...
அழகான கேள்வி:). நல்லாருக்குங்க//

மகிழ்ச்சி!! தொடர் ஊக்கத்திற்கு நன்றி அய்யா.



// Hanif Rifay said...
அழகான கேள்விதான்...
கேட்க தான் யாரும் இல்ல சகா....//

சீக்கிரம் தேடுங்க நண்பா!!
நன்றி ஹனிப்.

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

ISR Selvakumar said...

ஒரு கேள்வியுடன் கவிதை பூர்த்தியாவது நன்றாக உள்ளது.

ஜெய்லானி said...

அதுக்கு அந்த ஃபிகரிடம்தான் கேக்கனும். இந்த கேள்வியை ஐ ஏ எஸ் ல கேட்டா ஒரு பய பாசாகவே மாட்டான்.

:-)))))))

r.v.saravanan said...

மூங்கிலாய் பிறந்து
புல்லாங்குழலாய்
உருமாறி
உன் இதழ் ஸ்பரிசம்
பெறுவேன்

அருமை நண்பரே அருமை

ஆனால்.....
"எதுவாய்" மாறி
உன் இதயத்தில் நுழைவது

நல்ல கேள்வி விடை தெரியும் போது சொல்கிறேன்

Mohan said...

ரசனை மிக்க வரிகள்... நல்லாருக்கு....

ஹேமா said...

கவிதை முழுதும் ஏக்கம்.

சைவகொத்துப்பரோட்டா said...

// www.thalaivan.com said...
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு//

நன்றி தலைவன் தளம்.


// r.selvakkumar said...
ஒரு கேள்வியுடன் கவிதை பூர்த்தியாவது நன்றாக உள்ளது.//

கருத்துக்கு, நன்றி செல்வக்குமார். உங்கள் படம்
வெற்றியடைய வாழ்த்துக்கள்.


// ஜெய்லானி said...
அதுக்கு அந்த ஃபிகரிடம்தான் கேக்கனும். இந்த கேள்வியை ஐ ஏ எஸ் ல கேட்டா ஒரு பய பாசாகவே மாட்டான்.

:-)))))))//

அப்டிபோடு!! சரியா சொன்னீங்க!!
நன்றி ஜெய்லானி.



// r.v.saravanan said...
மூங்கிலாய் பிறந்து
புல்லாங்குழலாய்
உருமாறி
உன் இதழ் ஸ்பரிசம்
பெறுவேன்

அருமை நண்பரே அருமை

ஆனால்.....
"எதுவாய்" மாறி
உன் இதயத்தில் நுழைவது

நல்ல கேள்வி விடை தெரியும் போது சொல்கிறேன்//

ரைட்டு.....காத்திருக்கிறேன் :))
நன்றி சரவணன்.


// Mohan said...
ரசனை மிக்க வரிகள்... நல்லாருக்கு..//

நன்றி மோகன்.



// ஹேமா said...
கவிதை முழுதும் ஏக்கம்.//

ஹி.......ஹி........:))
படார்ன்னு உடைச்சிட்டீங்களே!!
நன்றி ஹேமா.

தமிழ் உதயம் said...

ஆனால்.....
"எதுவாய்" மாறி
உன் இதயத்தில் நுழைவது


சரியான கேள்வி.

VISA said...

காதல் ரசம் சொட்டச் சொட்ட!!!

Radhakrishnan said...

:) விடை கிடைத்ததா?

நாடோடி said...

விடை கிடைச்சா சொல்லிடாதீங்க‌.... அடிச்சும் கேட்பாங்க‌ அப்ப‌வும் சொல்லிடாதீங்க‌..எப்ப‌வும் சொல்லிடாதீங்க‌...

சைவகொத்துப்பரோட்டா said...

// தமிழ் உதயம் said...
ஆனால்.....
"எதுவாய்" மாறி
உன் இதயத்தில் நுழைவது


சரியான கேள்வி.//

தேங்க் யூ மை லார்ட் :))


// VISA said...
காதல் ரசம் சொட்டச் சொட்ட!!!//

ரசம் "ருசியா" இருக்கா :))



// V.Radhakrishnan said...
:) விடை கிடைத்ததா?//

இல்லையே சார் :))



// நாடோடி said...
விடை கிடைச்சா சொல்லிடாதீங்க‌.... அடிச்சும் கேட்பாங்க‌ அப்ப‌வும் சொல்லிடாதீங்க‌..எப்ப‌வும் சொல்லிடாதீங்க‌...//

இதென்ன கலாட்டா :))
நன்றி ஸ்டீபன்.

யோகா.... said...

மிகவும் எளிமையாய் ஒருதலை காதலின் வலியை சொன்னது நல்லா இருக்கு. நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//மீண்டும்
மூங்கிலாய் பிறந்து
புல்லாங்குழலாய்
உருமாறி
உன் இதழ் ஸ்பரிசம்
பெறுவேன்//

அடடா..என்ன டாக்டர் இப்படி அசத்திடீங்க?
அருமை... அருமை..!!

Thenammai Lakshmanan said...

ஆனால்.....
"எதுவாய்" மாறி
உன் இதயத்தில் நுழைவது.//

காதலின் விழைவு அருமை சை கொ ப

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஒரு வழியா தொடர் பதிவு எழுதி முடிச்சிட்டேங்க..
போஸ்ட்-ம் பண்ணிட்டேன்.. பாருங்க.. :)

http://anbudanananthi.blogspot.com/2010/05/10.html

prince said...

உயிராய் !!!!

சைவகொத்துப்பரோட்டா said...

// யோகா.... said...
மிகவும் எளிமையாய் ஒருதலை காதலின் வலியை சொன்னது நல்லா இருக்கு. நன்றி//

கருத்துக்கும், வருகைக்கும் நன்றி யோகா.


// Ananthi said...
//மீண்டும்
மூங்கிலாய் பிறந்து
புல்லாங்குழலாய்
உருமாறி
உன் இதழ் ஸ்பரிசம்
பெறுவேன்//

அடடா..என்ன டாக்டர் இப்படி அசத்திடீங்க?
அருமை... அருமை..!!//

ஆமா, இப்போல்லாம் கவிதை எழுதினா டாக்டர் பட்டம்
கொடுக்கிறாங்களா!! :))
நன்றி ஆனந்தி.


// thenammailakshmanan said...
ஆனால்.....
"எதுவாய்" மாறி
உன் இதயத்தில் நுழைவது.//

காதலின் விழைவு அருமை சை கொ ப//

நன்றி அக்கா.



// Ananthi said...
ஒரு வழியா தொடர் பதிவு எழுதி முடிச்சிட்டேங்க..
போஸ்ட்-ம் பண்ணிட்டேன்.. பாருங்க.. :)

http://anbudanananthi.blogspot.com/2010/05/10.html//

இதோ வந்து பாக்குறேன்.
நன்றி ஆனந்தி.



// ப்ரின்ஸ் said...
உயிராய் !!!!//

அசத்திட்டீங்க ப்ரின்ஸ் !!!

மங்குனி அமைச்சர் said...

பேசாம சூசைட் பண்ணிக்க எல்லார் இதையத்திலும் தானா பூந்துகுவ

சும்மா தமாசு சைவகொத்துப்பரோட்டா......

கவிதை அருமை

சைவகொத்துப்பரோட்டா said...

// மங்குனி அமைச்சர் said...
பேசாம சூசைட் பண்ணிக்க எல்லார் இதையத்திலும் தானா பூந்துகுவ

சும்மா தமாசு சைவகொத்துப்பரோட்டா......//

அவ்வ்..................
அமைச்சரே, ஏன் இந்த கொலை வெறி :))

//கவிதை அருமை//

மெய்யாலுமா..........
டாங்க்ஸ் அமைச்சரே.

சாந்தி மாரியப்பன் said...

கவிதை அருமையா இருக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

// அமைதிச்சாரல் said...
கவிதை அருமையா இருக்கு.//

நன்றி தங்கள், கருத்தை சொல்லியதற்கு.

Raghu said...

அதுக்காக‌ ச‌ண்டைலாம் போட்டு நுழைய‌ முய‌ற்சி ப‌ண்ணாதீங்க‌, அப்புற‌ம் அந்த‌ பொண்ணுக்கு ஹார்ட் 'அட்டாக்'குனு சொல்லிட‌ப்போறாங்க‌ ;)

சசிகுமார் said...

//எதுவாய்" மாறி
உன் இதயத்தில் நுழைவது.//

பட்டும் திருந்த மாட்டேங்குறாங்களே நம்மாளுங்க , நல்ல கவிதை நண்பா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

// ர‌கு said...
அதுக்காக‌ ச‌ண்டைலாம் போட்டு நுழைய‌ முய‌ற்சி ப‌ண்ணாதீங்க‌, அப்புற‌ம் அந்த‌ பொண்ணுக்கு ஹார்ட் 'அட்டாக்'குனு சொல்லிட‌ப்போறாங்க‌ ;)//

ஹி.....ஹி........கலக்குறீங்களே நண்பா!!



// சசிகுமார் said...
//எதுவாய்" மாறி
உன் இதயத்தில் நுழைவது.//

பட்டும் திருந்த மாட்டேங்குறாங்களே நம்மாளுங்க , நல்ல கவிதை நண்பா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

திருந்திட்டா பூமியோட இயக்கமே
நின்னு போயிருமே நண்பா :))

ரோஸ்விக் said...

நல்ல வரிகளுடன் கவிதை நல்லா இருக்குங்க... அருமை. :-)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அழகு, அருமை

அரட்டை அகிலன் said...

புள்ளங்குழலாய்
மருதானியாய்
மலராய்
புல்லாய்
வலையலாய்
மாற முடிந்த உனக்கு...
அவள் மனதில் குடி புக..!!
அன்பு காதலனாய் மாற ஏன் தயக்கம் ....?

கவிதையின் எளிமை ... மிகவும் அருமை

சைவகொத்துப்பரோட்டா said...

//ரோஸ்விக் said...
நல்ல வரிகளுடன் கவிதை நல்லா இருக்குங்க... அருமை. :-)//

ஊக்கத்திற்கு நன்றி ரோஸ்விக்.


// NIZAMUDEEN said...
அழகு, அருமை//

நன்றி நிஜாமுதின்.



// அரட்டை அகிலன் said...
புள்ளங்குழலாய்
மருதானியாய்
மலராய்
புல்லாய்
வலையலாய்
மாற முடிந்த உனக்கு...
அவள் மனதில் குடி புக..!!
அன்பு காதலனாய் மாற ஏன் தயக்கம் ....?

கவிதையின் எளிமை ... மிகவும் அருமை//

நன்றி அகிலன், தொடர்ந்து உங்கள்
கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)