Sunday, February 14, 2010

காதல் பெட்டகம்

லட்சோப லட்ச வாசகர்களுக்கும்(!!!!!!!!!!!!!!!!!!!!), அன்பான அணைத்து
பதிவர்களுக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
I LOVE YOU EVERYBODY.

போன பதிவில் அனைவரும் உசுப்பேத்தி விட்டதால் இன்றும் கவிதை.
இளகிய மனம் படைத்தோர் கவனம், மனதிடம் உள்ளவர்கள் தொடருங்கள். இனி கவிதை.....
************************************************************************************

காதல் பெட்டகம்

உனக்கான காத்திருப்பில்
திறந்து பார்க்கிறேன் நம் காதல் பெட்டகத்தை

உன் விழி மீன்கள் மானாய் பாய்ந்ததே
என்னைத்தேடி
அன்று கண்டேன் உன் காதலை

தோழியுடன் எதிர்திசையில் நீ செல்ல
ஒரே திசையில் நாம் பயணித்தோமே
உணர்ந்தேன் நம் காதலை

மலர் பட்டு உன் தேகம் சிவக்க
வியந்தேன் உன் மென்மையை

உன் விழி வீச்சில்
பனியாய் நான் உருக, ஈரமாகி வந்தாயே அருகில்
உணர்ந்தேன் உன் அன்பை

நீ சூடிய மல்லிகை
முழுவதும் உன் நறுமணம்

நானும் பெற வேண்டும்
உன் நறுமணத்தை

எப்போது சூடப்போகிறாய்
என்னை.







***********************************************************************

அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

51 comments:

அன்புடன் மலிக்கா said...

ஹைய்யா நாந்தான் பஸ்ட்.
சூப்பரப்பூஊஊஊஊஊ கவிதை அழகாக இருக்கு வாழ்த்துக்கள். உங்கள் காதல் வாழ்க,

ஓட்டும் போட்டுடோமுல்ல

அகநாழிகை said...

கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

angel said...

kavitha kavitha

சைவகொத்துப்பரோட்டா said...

//ஹைய்யா நாந்தான் பஸ்ட்.
சூப்பரப்பூஊஊஊஊஊ கவிதை அழகாக இருக்கு வாழ்த்துக்கள். உங்கள் காதல் வாழ்க,

ஓட்டும் போட்டுடோமுல்ல//

ரொம்ப சந்தோசம், நன்றி மலிக்கா.

சைவகொத்துப்பரோட்டா said...

//கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.//

மிக்க நன்றி, தங்களின் முதல் வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாருங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

//kavitha kavitha //

ஹைய்யா, ஒத்து கிட்டீங்களா, நன்றி ஏஞ்சல்.

புலவன் புலிகேசி said...

நல்லாத்தான் இருக்கு..சீக்கிரம் சூடுவாங்க பயப்படாதீங்க..

settaikkaran said...

தலைவா! உங்களுக்குள்ளே இப்படியொரு கவிஞர் நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்காருன்னுறதை இப்போத் தான் பார்த்தேன். அவரை அடிக்கடி எழும்பி உலாத்தச் சொல்லுங்க! சூப்பருண்ணே! ப்ளீஸ் கன்டின்யூ!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

// நீ சூடிய மல்லிகை
முழுவதும் உன் நறுமணம்

நானும் பெற வேண்டும்
உன் நறுமணத்தை

எப்போது சூடப்போகிறாய்
என்னை. ///

அசத்தல் அசத்தல் ..
நல்ல கவிதை வரிகள் ..
கவிஞரே வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

//நல்லாத்தான் இருக்கு..சீக்கிரம் சூடுவாங்க பயப்படாதீங்க..//

அப்படியா, நன்றி புலவரே :))

சைவகொத்துப்பரோட்டா said...

//தலைவா! உங்களுக்குள்ளே இப்படியொரு கவிஞர் நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்காருன்னுறதை இப்போத் தான் பார்த்தேன். அவரை அடிக்கடி எழும்பி உலாத்தச் சொல்லுங்க! சூப்பருண்ணே! ப்ளீஸ் கன்டின்யூ!!//

ஓகே, ரைட்டு தல, இனி அப்பப்ப அவர உலாவ உட்டுரலாம், நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

//அசத்தல் அசத்தல் ..
நல்ல கவிதை வரிகள் ..
கவிஞரே வாழ்த்துக்கள்//

மிக்க மகிழ்ச்சி நண்பர் ஸ்டார்ஜன், நன்றி.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு எஸ்.கே.பி!

ஸ்ரீராம். said...

அணைக்கத் துடிக்கிறீர்கள் என்று முன்னுரையிலேயே தெரிந்து கொண்டேன்...காதல் சொட்டு சொட்டாய் சொட்டுகிறது

சைவகொத்துப்பரோட்டா said...

//நல்லாருக்கு எஸ்.கே.பி!//

நன்றி பா.ரா. அண்ணா.

சைவகொத்துப்பரோட்டா said...

//அணைக்கத் துடிக்கிறீர்கள் என்று முன்னுரையிலேயே தெரிந்து கொண்டேன்...காதல் சொட்டு சொட்டாய் சொட்டுகிறது//

அப்படியா (ஹைய்யோ....ஹைய்யோ...), நன்றி ஸ்ரீராம் அண்ணா.

கமலேஷ் said...

///(இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க///

என் கோப்பை நிறைய இனிப்புதான்...வாழ்த்துக்கள்...

சைவகொத்துப்பரோட்டா said...

//என் கோப்பை நிறைய இனிப்புதான்...வாழ்த்துக்கள்...//


ரொம்பவே இனிப்பா இருக்கு, நன்றி கமலேஷ்.

Muruganandan M.K. said...

லட்சோப லட்ச வாழ்த்தில் எனது வாழ்த்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

//லட்சோப லட்ச வாழ்த்தில் எனது வாழ்த்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.//

நன்றி டாக்டர். (அப்புறம் அந்த லட்சோப லட்சம் ச்சு...சும்மா..) :)).

சைவகொத்துப்பரோட்டா said...

//அதிர்ச்சியுடன் பாண்டி .//

கூல் தல, படிச்சிட்டேன்.

ஆர்வா said...

என்னோட விருப்பத்திற்கேற்ப பரிமாறினீர்கள். நல்ல சுவை.(காரம்தான் (ரொமான்ஸ்) கொஞ்சம் கம்மி)

சைவகொத்துப்பரோட்டா said...

//.(காரம்தான் (ரொமான்ஸ்) கொஞ்சம் கம்மி)//

காரம் ரொம்ப சாப்பிட கூடாது :)) (இதுக்கே ஸ்ரீராம் அண்ணா அணைக்க துடிக்கிறீர்கள் அப்படின்னு
சொல்லீட்டாங்க) , அடுத்த முறை உங்கள் வேண்டுதல் பரிசீலிக்கப்படும்!!. நன்றி கவிதை காதலரே.

Chitra said...

தோழியுடன் எதிர்திசையில் நீ செல்ல
ஒரே திசையில் நாம் பயணித்தோமே
உணர்ந்தேன் நம் காதலை


............ very nice. வரிகள், அருமை.

சைவகொத்துப்பரோட்டா said...

............ very nice. வரிகள், அருமை.//

நன்றி சித்ரா, வருகைக்கும், கருத்துக்கும்.

சைவகொத்துப்பரோட்டா said...

//அருமையான கவிதை.//

பாராட்டுக்கு நன்றி, ராம்.

Thenammai Lakshmanan said...

//தோழியுடன் எதிர்திசையில் நீ செல்ல
ஒரே திசையில் நாம் பயணித்தோமே
உணர்ந்தேன் நம் காதலை//

எனக்கும் இது ரொம்பப்பிடித்து இருந்தது சைவக்கொத்துப்பரோட்டா

சைவகொத்துப்பரோட்டா said...

//எனக்கும் இது ரொம்பப்பிடித்து இருந்தது சைவக்கொத்துப்பரோட்டா//

அப்படியா, மிக்க மகிழ்ச்சி தேனம்மை அக்கா, நன்றி.

DREAMER said...

நண்பா,
♥ஹார்ட்டின்♥ வடிவ பரோட்டாக்களை ருசித்தேன். மிகவும் அருமை...

சைவகொத்துப்பரோட்டா said...

//நண்பா,
♥ஹார்ட்டின்♥ வடிவ பரோட்டாக்களை ருசித்தேன். மிகவும் அருமை...//

நன்றி நண்பரே, தொடர்ந்து வாருங்கள்.

டவுசர் பாண்டி said...

பதிவுலகத்துல கொயந்தயா ? ( நானும் கொயந்த தான் )

அப்ப, நீங்க சின்ன கொயந்தயா ?
பெரிய கொயந்தயா ?
டன், டன் டன்டன் டண்டடைன் , டடடைன் ................ )

சைவகொத்துப்பரோட்டா said...

//அப்ப, நீங்க சின்ன கொயந்தயா ?
பெரிய கொயந்தயா ?
டன், டன் டன்டன் டண்டடைன் , டடடைன் ................ )//


வாங்க தல, நான் சின்ன கொயந்த (மூணு மாச), நீங்க பெரிய கொயந்த (ஒரு வயசு),
எப்புடி :))

திவ்யாஹரி said...

நல்லாருக்கு நண்பா..

சைவகொத்துப்பரோட்டா said...

//நல்லாருக்கு நண்பா..//

நன்றி திவ்யாஹரி, தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

வால்பையன் said...

:)

கே. பி. ஜனா... said...

என்னமா சொல்லியிருக்கீங்க, காதலை! அபாரம்!-- கே.பி.ஜனா

சாமக்கோடங்கி said...

//எப்போது சூடப்போகிறாய்
என்னை.//

எப்போது சுடப் போகிறாய் என்று எழுதியிருந்தீர்கள் என்று வையுங்கள்.. நாங்கள் எல்லாரும் உடனே வந்திருப்போம்..

சைவகொத்துப்பரோட்டா said...

// :) //

நன்றி தல புன்னகைக்கு :))

சைவகொத்துப்பரோட்டா said...

//என்னமா சொல்லியிருக்கீங்க, காதலை! அபாரம்!-- கே.பி.ஜனா//

நன்றி கே.பி.ஜனா, நிசமாத்தான் பாராட்டுதீகளா :))

சைவகொத்துப்பரோட்டா said...

//எப்போது சுடப் போகிறாய் என்று எழுதியிருந்தீர்கள் என்று வையுங்கள்.. நாங்கள் எல்லாரும் உடனே வந்திருப்போம்..//

ஏன்...ஏன்...ஏன்... இந்த கொல வெறி, பிரகாஷ் :)) நன்றி உங்கள் கருத்துக்கு.

Unknown said...

அபாரம் அருமை.. அப்பால இதுக்கு பேர் என்னங்க..,

சைவகொத்துப்பரோட்டா said...

//அபாரம் அருமை.. அப்பால இதுக்கு பேர் என்னங்க..,//


இப்படியெல்லாம் கேள்வி கேட்டா மீண்டும் "இது" வரும் சொல்லிபுட்டேன்.... :))
நன்றி நண்பா.

கே. பி. ஜனா... said...

//நன்றி கே.பி.ஜனா, நிசமாத்தான் பாராட்டுதீகளா :))//
நான் எப்பவாவது உங்ககிட்டே பொய் சொல்லியிருக்கேனா? -- கே.பி.ஜனா

சைவகொத்துப்பரோட்டா said...

//நான் எப்பவாவது உங்ககிட்டே பொய் சொல்லியிருக்கேனா? -- கே.பி.ஜனா//


ஒரு விளயாட்டுக்கு எழுதி இருக்கேன் ஜனா, வெறுமனே நன்றி என்று எழுதுவதற்கு பதில்
கொஞ்சம் சுவாரசியமாய் இருக்கட்டுமே என்றுதான், மிக்க நன்றி ஜனா :))

கே. பி. ஜனா... said...

ஐயோ சார் 'நான் எப்பவாவது உங்ககிட்டே பொய் சொல்லியிருக்கேனா?' என்கிற என் கேள்வி(!)யும் ஒரு ஜோக் தான்!

கே. பி. ஜனா... said...

ஐயோ சார் 'நான் எப்பவாவது உங்ககிட்டே பொய் சொல்லியிருக்கேனா?' என்கிற என் கேள்வி(!)யும் ஒரு ஜோக் தான்!

சைவகொத்துப்பரோட்டா said...

//ஐயோ சார் 'நான் எப்பவாவது உங்ககிட்டே பொய் சொல்லியிருக்கேனா?' என்கிற என் கேள்வி(!)யும் ஒரு ஜோக் தான்!//


அப்படியா, நான் பயந்திட்டேன், நீங்க சீரியஸ் ஆக எடுத்து விட்டீர்களோ என்று,
மிக்க நன்றி கே.பி.ஜனா. :))

vidivelli said...

ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

//vidivelli said...
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.//



அப்படியா, மிக்க மகிழ்ச்சி விடிவெள்ளி, தொடர்ந்து வாருங்கள்.

r.v.saravanan said...

வாழ்த்துக்கள் டிஸ்கி



கவிதைகள் அருமை

சைவகொத்துப்பரோட்டா said...

// r.v.saravanan kudandhai said...
வாழ்த்துக்கள் டிஸ்கி



கவிதைகள் அருமை//


நன்றி சரவணன்,

ஹி.....ஹி..........
டிஸ்கி அப்படிங்கிறது என்
பேர் இல்ல, Disclaimer என்பதின்
சுருக்கம்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)