Friday, August 27, 2010

சீட்

பஸ் நிற்பதற்குள் பாதி ஆட்கள் உள்ளே ஏறிவிட வழக்கம்போல்
கைக்குட்டை வீசி எனக்கான "சீட்டை" பிடித்த பின்புதான் நிம்மதியாக
இருந்தது.

மூவர் உட்காரும் சீட்டில் நானும் இன்னோர் நபர் மட்டும் இருக்க, மிக வசதியாக சாய்ந்து கொண்டு பாக்கெட் நாவலில் மூழ்க
ஆரம்பித்தேன். பஸ் குலுங்கலுடன் ஒரு நிறுத்தத்தில் நிற்க 50 வயது
மதிக்கத்தக்க "மஞ்சள்பை" பெரியவர் ஒருவர் ஏறிய பின்பு பஸ் கிளம்பியது.

உட்கார இடம் தேடி அவர் கண்கள் அலை பாய்ந்து என் சீட் பக்கம்
நங்கூரம் இட, நான் சட்டென தூங்குவது போல் பாசாங்கு செய்ய
ஆரம்பித்தேன்.


மோட்டல் ஒன்றில் பஸ் நிற்க, இனிப்பு கலந்த "சுடு தண்ணி"
குடித்து விட்டு சற்றே வேடிக்கை பார்த்ததில் நான் வந்த பஸ்
கிளம்பியதை தாமதமாக கவனித்துவிட்டு, அவசரமாக ஓடும்
பஸ்சில் ஏறியது வரைதான் நினைவிரு..........

பயப்படாதீங்க தம்பி, உங்களுக்கு ஒன்னும் ஆகல, அடி பட்டதுல நிறய இரத்தம் இழப்பாகிருச்சு, உங்க ரத்த வகை
எங்ககிட்ட ஸ்டாக் இல்லாம தவிச்சப்ப, இதோ இவங்கதான் இரத்தம் கொடுத்தாங்க, என டாக்டர் காட்டிய நபர் அதே "மஞ்சள்பை"

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)