Monday, April 5, 2010

விருது வழங்கும் விழா

இடம்:சைவகொத்துப்பரோட்டா ஸ்டால்

நபர்கள்:அப்பாவி அங்கு(அ.அ), பிலிம்பித்துக்குளி(பி.பி), சேட்டு
இவர்களுடன் உங்கள்
அபிமான(???!!!!) சைவகொத்துப்பரோட்டா(எஸ்.கே.பி) ,
மற்றும் மதிப்பிற்குரிய நீங்கள்.

சேட்டு:இன்னாப்பா உங்க கடையாண்ட ஒரே கும்பலா கீது.

பி.பி:வாய்யா சேட்டு, உன்கு மேட்டரே தெரியாது, இன்கு நம்ம
கடையில விர்து கொடுக்கறாங்கோ........

அ.அ:நமக்கு கொடுப்பாகளா அண்ணே.

பி.பி:வாடா பையா, இது அல்லாம் பதிவு எழுதுறாங்கோ
பாரு அவுங்களுக்கு கொடுப்பாங்கோ.

சேட்டு:நைனா, பொதுவா விருது வழங்குற விழான்னா பாட்டு
டான்ஸ் எல்லாம் இருக்குமே, இங்க எப்படி....க்கீதா...

பி.பி:அட நீ வேற எங்க ஆளு இருக்கானே மிக்கி மண்டையன்
யாரா.....அதான்ப்பா எஸ்.கே.பி அது
சொல்து, "கலை நிகழ்ச்சி" வைச்சா கடை கட்டுபடியாவாதாம்.

எஸ்.கே.பி: (வருகை) என்ன அங்க பேச்சு...........

பி.பி:வாங்கோ தம்பி, இப்பதான் ஒங்க "பெருமைகளை"
நம்பல் சேட்டுகிட்ட சொல்லிக்கிட்டு இருந்துச்சு...ஹி.....ஹி....

எஸ்.கே.பி:வேலையை பாருங்க. அங்கு, நம்ம கஸ்டமர்ஸ் எல்லாம்
வர்ற நேரமாச்சு, சேர் எல்லாம் ஒழுங்கு பண்ணு,
பி.பி அண்ணே அந்த விருதுகளை எல்லாம்
கொண்டு போய் மேடையில வையுங்க.

அ.அ:அண்ணே, எல்லோரும் வந்திட்டாங்க விழாவ
ஆரம்பிங்க.

எஸ்.கே.பி:அன்பின் பதிவர்களே, இனிய வாசகர்களே(!!!!)
நீங்கள் அனைவரும் எனக்கு கொடுத்த,
கொடுத்து கொண்டு இருக்கிற, கொடுக்க
போகிற அன்பையும், ஆதரவையும் நினைக்கையில்
எனக்கு கண்கள் பனிக்கிறது......

பி.பி: பாரு கையில மைக் கிடச்ச வுடனே என்னமா
பேசுறாரு.

எஸ்.கே.பி:என்னை மதித்து
சகோதரிகள், அன்புடன் மலிக்கா, திவ்யாஹரி
மற்றும் அன்புச்சகோதரர் ஸ்டார்ஜன் அவர்களும்
விருது(கள்) கொடுத்தார்கள்.

அவற்றை நான், நம்
நண்பர்கள் சிலருடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பி.பி :பாருய்யா!!! "விழைகிறாராம்" தமிழ் நாட்டியம்
ஆடுது.

எஸ்.கே.பி:கிழே நான் குறிப்பிட்டிருக்கும் அன்பின் நட்புகள் எங்கு
இருந்தாலும் மேடைக்கு வந்து இந்த விருதுகளை பெற்று
கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

முதலாவதாக Sunshine award goes to:





இராமசாமி கண்ணன்
ரகு
நாடோடி (ஸ்டீபன்)
DREAMER
Dr.P.Kandaswamy
Dr.எம்.கே.முருகானந்தன்
தமிழ் உதயம்
கவிதை காதலன்
பிரவின்

(அம்மாடி மூச்சு வாங்குது......) இவங்க எல்லோருக்கும் ஜோரா
கை தட்டுங்க, அப்படியே என்னோட வாழ்த்துக்களும்.

எங்க ஓடுறீங்க..........இருங்க இன்னொரு விருது இருக்குல்ல....

இரண்டாவதாக, King award goes to:








அண்ணாமலையான்
அன்புடன் மலிக்கா
கொஞ்சம் வெட்டிப்பேச்சு (சித்ரா)
தேனம்மைலக்ஷ்மணன்
ப்ரியமுடன் வசந்த்
திவ்யாஹரி
ராஜு
VISA
வந்தே மாதரம் (சசிகுமார்)
Padma
ஜலீலா
ஹுசைனம்மா

இவங்களுக்கும் ஜோரா கை தட்டுங்க.

எஸ்.கே.பி:இந்த விழாவினை சிறப்பாக நடத்த உதவிய அ.அ, பி.பி மற்றும் சேட்டுக்கும் என் நன்றிகள்.

பி.பி:(மனதிற்குள்) உன் நன்றி இருக்கட்டும், மூணு மாச சம்பள பாக்கியை எப்ப தருவ.

எஸ்.கே.பி:என்ன பி.பி அண்ணே, என்ன யோசனை.

பி.பி:விழா நல்லா நந்து முஞ்சத நினைச்சேன் தம்பி, மன்சு
சந்தோசாம்மா இற்கு.

எஸ்.கே.பி:சேட்டு கூட சேந்து பேசிப்பேசி, சென்னை வட்டார மொழியை அவர் கத்துகிட்டாரு, நீங்க அவர் பாசையில
பேசுறீங்க.

பி.பி: ஹி........ஹி............

அ.அ:அண்ணே இன்னைக்கு பரோட்டா போடலையே....

எஸ்.கே.பி:ரெண்டு நாள் கழிச்சி போடலாம். மிக்க நன்றி
நண்பர்களே, பொறுமையுடன் இருந்து விழாவை சிறப்பித்த
உங்கள் அனைவருக்கும் நன்றி.

*********************************************************




அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

57 comments:

ஹாய் அரும்பாவூர் said...

good

பத்மா said...

thank u

ப.கந்தசாமி said...

ஏனுங்க, இந்த விருதுகளை வச்சு என்னங்க செய்யறது, ரெண்டு புரோட்டா கொடுத்தாலாச்சும் டிபனுக்கு சாப்பிடலாம்.

பித்தனின் வாக்கு said...

அ.அ:அண்ணே இன்னைக்கு பரோட்டா போடலையே....

எஸ்.கே.பி:ரெண்டு நாள் கழிச்சி போடலாம்

ஆகா இரண்டு நாள் கழிச்சிப் போட்டா அது காலாவதியான போலி புரோட்டான்னு சொல்லி உள்ள போட்டுருவாங்க. சுட சுட சுட்டுத் தள்ளிக்கிட்டே இருக்கனும்பா.(என்னிய இல்லை புரோட்டாவ). விருது பெற்றமைக்கும், பகிர்ந்தமைக்கும் வாழ்த்துக்கள்.

க ரா said...

விருதுக்கு நன்றி நண்பரே.

Cable சங்கர் said...

உங்களுக்கும் விருது பெற்ற மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.:)

மரா said...

good

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

இந்த கடையில நம்மளக்கும் விருது கொடுத்துட்டாங்களா, எனக்கு விருது கொடுத்து கவுரவ படுத்திய நம்ம அண்ணன் சைவ.கொ.ப அவர்களுக்கு மிக்க நன்றி அண்ணே, பதிவும் சூப்பராக உள்ளது.

Raju said...

நன்றி+வாழ்த்துக்கள் தல..!

நாடோடி said...

விருது கொடுத்தீங்க‌ ச‌ரி... அப்ப‌டியே ஆளுக்கு ரெண்டு ப‌ரோட்டா த‌ருவீங்க‌னு பார்த்தா க‌டைசியில் இப்ப‌டி சொல்லீட்டீங்க‌ளே.... விருது பெற்ற‌ அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்..

settaikkaran said...

:-)))))))))

கலக்கல் விருதுகள்

Thenammai Lakshmanan said...

நனறி சை கொ ப உங்க விருதுக்கு யம்மாடி என்ன கனம் ,, ஹஹஹ எப்படி இடுகைகு நடுவுல கொண்டு வர்றதுன்னு தெரியல சை கொ ப முடிஞ்சா சொல்லிக் கொடுங்க எனக்கு மேனகா சுஸ்ரி கொடுத்த விருதுகளை எல்லாம் என் பையன் சைட்லயே போட்டுக் கொடுத்துட்டான்

r.v.saravanan said...

உங்களுக்கும் விருது பெற்ற மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

விருதுக்கு ரொம்ப நன்றிங்க. ஆனா பாருங்க, நீங்க விருதே கொடுத்தாலும், எல்லாரும் புரோட்டா தரலையேன்னுதான் அல்பத்தனமா கவலைப்படுறாங்கோ பாருங்க. நான் அப்பிடில்லாம் சொல்லமாட்டேன். விருதுதான் பெரிசு.

ஆமா, விருது “கிங்”னு இருக்கே, நான் ”க்வீன்” ஆச்சே? பர்வால்லியா? ;-))

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நம்மளுக்கு விருது கிருதேல்லாம்
கிடைக்காதுன்னு தெரியும்
ஒரு பரோட்டா வாது கொடுக்கக்கூடாதா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ப.ப வுக்கு, அட்லீஸ்ட், டுபாக்கூர் விருதாவது, கொடுத்து இருக்கலாம்..

ஆகவே மக்களே.. நான் வெளிநடப்பு
செய்கிறேன்..

ஹி..ஹி அடுத்த பதிவுல சந்திக்கிறேன்..

Raghu said...

விருதுக்கு ந‌ன்றி சைவ‌கொத்துப்ப‌ரோட்டா, அப்ப‌டியே கூட‌ ஒரு செட் ப‌ரோட்டாவும் குடுத்திருந்தீங்க‌ன்னா இன்னும் ச‌ந்தோஷ‌ப்ப‌ட்டிருப்பேன் ;)

Mohan said...

விருது பெற்ற அனைவருக்கும், விருது கொடுத்த (அதுக்கும் ஒரு பெரிய மனசு வேணும்ல)
பரோட்டாவுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
ஒரு விருந்தே (பரோட்டா)
ஒரு விருது
கொடுத்துருக்கிறதே!
ஹி..ஹி.. கவிதை ...

சைவகொத்துப்பரோட்டா said...

// ஹாய் அரும்பாவூர் said...
good //

நன்றி நண்பரே,
தொடர்ந்து வாருங்கள்.





// padma said...
thank u //

உங்களுக்கும் நன்றி பத்மா.





// Dr.P.Kandaswamy said...
ஏனுங்க, இந்த விருதுகளை வச்சு என்னங்க செய்யறது, ரெண்டு புரோட்டா கொடுத்தாலாச்சும் டிபனுக்கு சாப்பிடலாம். //

ஹா.....ஹா...
கொடுத்திட்டா போச்சு!!!
வியாழகிழமை வாங்க கொடுக்கிறேன்,
நன்றி.





//பித்தனின் வாக்கு said...
அ.அ:அண்ணே இன்னைக்கு பரோட்டா போடலையே....

எஸ்.கே.பி:ரெண்டு நாள் கழிச்சி போடலாம்

ஆகா இரண்டு நாள் கழிச்சிப் போட்டா அது காலாவதியான போலி புரோட்டான்னு சொல்லி உள்ள போட்டுருவாங்க. சுட சுட சுட்டுத் தள்ளிக்கிட்டே இருக்கனும்பா.(என்னிய இல்லை புரோட்டாவ). விருது பெற்றமைக்கும், பகிர்ந்தமைக்கும் வாழ்த்துக்கள்.//


ரைட்டு....சுட்டுரலாம்!!! பரோட்டாவ..........:))
நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

// இராமசாமி கண்ணண் said...
விருதுக்கு நன்றி நண்பரே.//

நன்றி ராம்.




// Cable Sankar said...
உங்களுக்கும் விருது பெற்ற மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.:)//

நன்றி சங்கர்ஜி.





// மயில்ராவணன் said...
good //

நன்றி மயில்.





// ஜெய்லானி said...
வாழ்த்துக்கள் //

நன்றி ஜெய்லானி.

சைவகொத்துப்பரோட்டா said...

//சசிகுமார் said...
இந்த கடையில நம்மளக்கும் விருது கொடுத்துட்டாங்களா, எனக்கு விருது கொடுத்து கவுரவ படுத்திய நம்ம அண்ணன் சைவ.கொ.ப அவர்களுக்கு மிக்க நன்றி அண்ணே, பதிவும் சூப்பராக உள்ளது.//

அப்படியா!!!
நன்றி சசி.





// ♠ ராஜு ♠ said...
நன்றி+வாழ்த்துக்கள் தல..!//

நன்றி ராஜு.





// நாடோடி said...
விருது கொடுத்தீங்க‌ ச‌ரி... அப்ப‌டியே ஆளுக்கு ரெண்டு ப‌ரோட்டா த‌ருவீங்க‌னு பார்த்தா க‌டைசியில் இப்ப‌டி சொல்லீட்டீங்க‌ளே.... விருது பெற்ற‌ அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்..//

உங்களுக்கு இல்லாத பரோட்டாவா........
வியாழகிழமை வாங்க, "ஸ்பெஷல் பரோட்டா"
எல்லோருக்கும் இருக்கு, நன்றி.



// சேட்டைக்காரன் said...
:-)))))))))

கலக்கல் விருதுகள் //

நன்றி நண்பரே.

Ahamed irshad said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

Chitra said...

உங்களுக்கு:
பூங்கொத்து ஒன்று - கலக்கல் பதிவுக்கு
பூங்கொத்து ஒன்று - உங்களுக்கு கிடைத்த விருதுகளுக்கு
பூங்கொத்து ஒன்று - எனக்கும் விருது கொடுத்ததற்கு - மிக்க நன்றி, மக்கா!

விருது கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
விருது கொடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள்!

சைவகொத்துப்பரோட்டா said...

// thenammailakshmanan said...
நனறி சை கொ ப உங்க விருதுக்கு யம்மாடி என்ன கனம் ,, ஹஹஹ எப்படி இடுகைகு நடுவுல கொண்டு வர்றதுன்னு தெரியல சை கொ ப முடிஞ்சா சொல்லிக் கொடுங்க எனக்கு மேனகா சுஸ்ரி கொடுத்த விருதுகளை எல்லாம் என் பையன் சைட்லயே போட்டுக் கொடுத்துட்டான்//

அம்பூட்டு கனமாவா இருக்கு........:))
இடுகைக்கு நடுவே கொண்டு
வருவது பற்றி உங்களுக்கு Mail - இல் விவரம்
அனுப்பி உள்ளேன் அக்கா, நன்றி.





// r.v.saravanan kudandhai said...
உங்களுக்கும் விருது பெற்ற மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்//

நன்றி சரவணன்.






// ஹுஸைனம்மா said...
விருதுக்கு ரொம்ப நன்றிங்க. ஆனா பாருங்க, நீங்க விருதே கொடுத்தாலும், எல்லாரும் புரோட்டா தரலையேன்னுதான் அல்பத்தனமா கவலைப்படுறாங்கோ பாருங்க. நான் அப்பிடில்லாம் சொல்லமாட்டேன். விருதுதான் பெரிசு.

ஆமா, விருது “கிங்”னு இருக்கே, நான் ”க்வீன்” ஆச்சே? பர்வால்லியா? ;-))//

வாங்க!! வாங்க!!!
அவங்க பரோட்டான்னு குறிப்பிடுவது
"இடுகையை"த்தான், கொடுத்திட்டா போச்சு!!!
இங்கு எல்லோருமே king - தான், பரவாயில்லை,
கிரீடத்தை அணிந்து கொள்ளுங்கள், நன்றி.





// மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
நம்மளுக்கு விருது கிருதேல்லாம்
கிடைக்காதுன்னு தெரியும்
ஒரு பரோட்டா வாது கொடுக்கக்கூடாதா?//

வாங்க!!! நீங்களே "ஆயிரத்தில் ஒருவர்"
ஆச்சே.........தனி சிறப்புதான்!!!
ஸ்பெசல் பரோட்டாவே கொடுக்கிறேன்,
வியாழகிழமை வாங்க.......:))
நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

//பட்டாபட்டி.. said...
ப.ப வுக்கு, அட்லீஸ்ட், டுபாக்கூர் விருதாவது, கொடுத்து இருக்கலாம்..

ஆகவே மக்களே.. நான் வெளிநடப்பு
செய்கிறேன்..

ஹி..ஹி அடுத்த பதிவுல சந்திக்கிறேன்..//

பட்டாபட்டியார் ஓடுறார்............
பிடிங்க சார் பிடிங்க.......
அவ்வ்.................
கோபபடாதீங்க சார்........:))
சாருக்கு ரெண்டு பரோட்டா கொடேய்......ஹி...ஹி...
நன்றி.





// ர‌கு said...
விருதுக்கு ந‌ன்றி சைவ‌கொத்துப்ப‌ரோட்டா, அப்ப‌டியே கூட‌ ஒரு செட் ப‌ரோட்டாவும் குடுத்திருந்தீங்க‌ன்னா இன்னும் ச‌ந்தோஷ‌ப்ப‌ட்டிருப்பேன் ;)//

ஒரு செட் என்ன, நிறைய செட்
கொடுக்கிறேன்......... :))
வியாழகிழமை வாங்க..........
நன்றி ரகு.






// Mohan said...
விருது பெற்ற அனைவருக்கும், விருது கொடுத்த (அதுக்கும் ஒரு பெரிய மனசு வேணும்ல)
பரோட்டாவுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
ஒரு விருந்தே (பரோட்டா)
ஒரு விருது
கொடுத்துருக்கிறதே!
ஹி..ஹி.. கவிதை ...//

ஆஹா!!! கவிதை அற்புதமா
இருக்கே........:))
நன்றி மோகன்.



//அஹமது இர்ஷாத் said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..//

நன்றி இர்ஷாத்.

சைவகொத்துப்பரோட்டா said...

// Chitra said...
உங்களுக்கு:
பூங்கொத்து ஒன்று - கலக்கல் பதிவுக்கு
பூங்கொத்து ஒன்று - உங்களுக்கு கிடைத்த விருதுகளுக்கு
பூங்கொத்து ஒன்று - எனக்கும் விருது கொடுத்ததற்கு - மிக்க நன்றி, மக்கா!

விருது கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
விருது கொடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள்!//

மூன்று பூங்கொத்தையும்
எடுத்து கொண்டேன்.....:))
நன்றி சித்ரா.

Prasanna said...

அண்ணே வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

வந்த விருந்தை...ஸாரி விருதை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்..ஸாரி.. பாராட்டுக்கள். விருது வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

(அண்ணே...இந்த விருதுலாம் உங்க கடைல சுட்டதாணே)

சைவகொத்துப்பரோட்டா said...

// பிரசன்னா said...
அண்ணே வாழ்த்துக்கள்//

நன்றி பிரசன்னா.






// ஸ்ரீராம். said...
வந்த விருந்தை...ஸாரி விருதை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்..ஸாரி.. பாராட்டுக்கள். விருது வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணா.







// Han!F R!fay said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

(அண்ணே...இந்த விருதுலாம் உங்க கடைல சுட்டதாணே)//

அவ்வ்................
இதெல்லாம் நம் நண்பர்கள் கொடுத்தது நண்பா,
நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

யாராவது ஒரு சோடா கொடுங்கப்பா!

அண்ணன் களச்சு போய் வாராரு.

விருது பெற்ற உங்களுக்கும் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

பனித்துளி சங்கர் said...

/////////எஸ்.கே.பி:அன்பின் பதிவர்களே, இனிய வாசகர்களே(!!!!)
நீங்கள் அனைவரும் எனக்கு கொடுத்த,
கொடுத்து கொண்டு இருக்கிற, கொடுக்க
போகிற அன்பையும், ஆதரவையும் நினைக்கையில்
எனக்கு கண்கள் பனிக்கிறது......
//////////


இந்த வசனத்தை சிரிக்கமா தான் சொன்னீங்களா ?

பனித்துளி சங்கர் said...

//////அண்ணாமலையான்
அன்புடன் மலிக்கா
கொஞ்சம் வெட்டிப்பேச்சு (சித்ரா)
தேனம்மைலக்ஷ்மணன்
ப்ரியமுடன் வசந்த்
திவ்யாஹரி
ராஜு
VISA
வந்தே மாதரம் (சசிகுமார்)
Padma
ஜலீலா
ஹுசைனம்மா

இவங்களுக்கும் ஜோரா கை தட்டுங்க./////////



அண்ணே கேட்டுச்சா ????????????

பனித்துளி சங்கர் said...

விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் !

மங்குனி அமைச்சர் said...

விருதுகலை கொடுத்த அண்ணன் அவர்களை பாராட்டி , இந்த மலர் மாலையை மாணிக்க மாலையாக சூட்டுகிறேன்

சைவகொத்துப்பரோட்டா said...

// அக்பர் said...
யாராவது ஒரு சோடா கொடுங்கப்பா!

அண்ணன் களச்சு போய் வாராரு.

விருது பெற்ற உங்களுக்கும் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.//

சோடா நல்லா "இனிப்பா"
இருக்கு:)) நன்றி அக்பர்
சோடாவுக்கும், வாழ்த்துக்கும்.






//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
/////////எஸ்.கே.பி:அன்பின் பதிவர்களே, இனிய வாசகர்களே(!!!!)
........
இந்த வசனத்தை சிரிக்கமா தான் சொன்னீங்களா ?

April 5, 2010 6:01 PM//

ஆ.....மா.............:))


//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இவங்களுக்கும் ஜோரா கை தட்டுங்க./////////


அண்ணே கேட்டுச்சா ????????????//


நல்லா.........நல்லாவே கேட்டுச்சி
சங்கர்,
நன்றி.






//மங்குனி அமைச்சர் said...
விருதுகலை கொடுத்த அண்ணன் அவர்களை பாராட்டி , இந்த மலர் மாலையை மாணிக்க மாலையாக சூட்டுகிறேன்//

இதோ மாலையை சூடி கொண்டேன்,
நல்லா வாசனையா இருக்கு!!!!
நன்றி அமைச்சரே.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பரு

சைவகொத்துப்பரோட்டா said...

// அப்பாவி தங்கமணி said...
சூப்பரு//

நன்றி, ஆமா நீங்க ரொம்ப
அப்பாவியா........:))

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

விருதுகள் கொடுத்த சைவக்கொத்துபரோட்டா
அவர்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் பண மாலையை,
மன்னிக்கவும், ஆயா கடை பூ மாலையை
அன்புடன் அணிவிக்கிறேன்.

Jaleela Kamal said...

சைவ கொத்து பரோட்டா பத்து வகையா கொத்தி, விருது வாங்கியதற்கு முதலில் க்ளாப்ஸ், க்ளாப்ஸ்,

யாருப்பா அது பரோட்டா கேட்பது, அவரே இன்று பரோடாவ மறந்து கிரிடத்த அணிந்து கொண்டு சந்தோஷமா இருக்காரு இன்னைக்காவது பரோட்டா கடைக்கு லீவு கொடுக்காமா இன்றும் பரோட்டா கேட்கீறீங்களே

Jaleela Kamal said...

சைவ கொத்து பரோட்டா பத்து வகையா கொத்தி, விருது வாங்கியதற்கு முதலில் க்ளாப்ஸ், க்ளாப்ஸ்,

யாருப்பா அது பரோட்டா கேட்பது, அவரே இன்று பரோடாவ மறந்து கிரிடத்த அணிந்து கொண்டு சந்தோஷமா இருக்காரு இன்னைக்காவது பரோட்டா கடைக்கு லீவு கொடுக்காமா இன்றும் பரோட்டா கேட்கீறீங்களே

Jaleela Kamal said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எனக்கும் ராஜ கிரீடமா, ஹை, ரொம்ப சந்தோஷம், நன்றி, ஆ தூக்க முடியலையே ரொம்ப வெயிட்டா இருக்கே., (நானும் ஹுஸைனாம்மா சொன்ன மாதிரிதான் யோசித்தேன், என் வீட்டு கிச்சனுக்கு நான் தான் ராஜா)
ஆமாம் அக்பருக்கு கண்டிப்பா சோடா கொடுக்கனும், ரொம்ப வே களைத்து விட்டார்.

Muruganandan M.K. said...

விருது அளித்ததற்கு நன்றி சைவகொத்துப்பரோட்டா

DREAMER said...

நண்பா,
முதலில் விருது பெற்றமைக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்..! சூரியகாந்தி மலர் சூரியனைப் பார்த்துக் கொண்டே இருப்பதுபோல், நாங்கள் எப்போதும் உங்கள் 'ப்ளாக்'-கையே பார்த்துக் கொண்டிருப்போம். அதுதான் இந்த சூரியகாந்தி விருதின் சாராம்சமாக இருக்குமோ..!

அட..! எனக்கும் விருதா..! நன்றிங்க..!

-
DREAMER

சைவகொத்துப்பரோட்டா said...

// NIZAMUDEEN said...
விருதுகள் கொடுத்த சைவக்கொத்துபரோட்டா
அவர்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் பண மாலையை,
மன்னிக்கவும், ஆயா கடை பூ மாலையை
அன்புடன் அணிவிக்கிறேன்.//

ஆயா கடையில இட்லிதான அவிச்சாங்க,
இப்ப பூமாலையும் விக்கிறாங்களா!!!
போடுங்க, அணிந்து கொண்டேன் :))
நன்றி நண்பரே.






// Jaleela said...
சைவ கொத்து பரோட்டா பத்து வகையா கொத்தி, விருது வாங்கியதற்கு முதலில் க்ளாப்ஸ், க்ளாப்ஸ்,//

வாங்க!!! அக்கா,
க்ளாப்ஸ் சத்தம் ஜோரா கேட்குது.



//Jaleela said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எனக்கும் ராஜ கிரீடமா, ஹை, ரொம்ப சந்தோஷம், நன்றி, ஆ தூக்க முடியலையே ரொம்ப வெயிட்டா இருக்கே.,//

ஹா......ஹா........
உங்கள் பின்னூட்டங்கள் உற்சாகம் அளிக்கிறது.
நன்றி அக்கா.





// Dr.எம்.கே.முருகானந்தன் said...
விருது அளித்ததற்கு நன்றி சைவகொத்துப்பரோட்டா//

நன்றி மருத்துவர் ஐயா.






// DREAMER said...
நண்பா,
முதலில் விருது பெற்றமைக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்..! சூரியகாந்தி மலர் சூரியனைப் பார்த்துக் கொண்டே இருப்பதுபோல், நாங்கள் எப்போதும் உங்கள் 'ப்ளாக்'-கையே பார்த்துக் கொண்டிருப்போம். அதுதான் இந்த சூரியகாந்தி விருதின் சாராம்சமாக இருக்குமோ..!

அட..! எனக்கும் விருதா..! நன்றிங்க..!

-
DREAMER//

அவ்வ்.......
என்னை வச்சு காமெடி, கீமெடி பண்ணலையே...........:))
நன்றி ஹரீஷ்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

விருது கொடுத்த, மற்றும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

ஆர்வா said...

விருது கொடுத்து பாராட்டியதற்கு மிக்க நன்றி. தாமதமாக நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும்.

திவ்யாஹரி said...

விருதுக்கு மிக்க நன்றி கொத்து பரோட்டா.. இவ்வளவு நாட்கள் சென்னையில் இருந்தேன். அதான் உங்க விருதை உடனே பெற்றுக்கொள்ள முடியவில்லை.. அப்டியே கொத்து பரோட்டா ஒன்னு பார்சல் அனுப்புங்க.. ப்ளீஸ்..

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

சைவகொத்துப்பரோட்டா said...

// Ananthi said...
விருது கொடுத்த, மற்றும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..//

நன்றி ஆனந்தி.





// கவிதை காதலன் said...
விருது கொடுத்து பாராட்டியதற்கு மிக்க நன்றி. தாமதமாக நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும்.//

மன்னிப்பு, தமிழ்ல எனக்கு பிடிக்காத
வார்த்தை.....ஆங்...........
அட என்ன நண்பா, இதுக்கு போய் மன்னிப்பு
எல்லாம் கேட்கணுமா........
நீங்கள் வருவதே எனக்கு மகிழ்ச்சிதான்!!!
நன்றி நண்பா.





//திவ்யாஹரி said...
விருதுக்கு மிக்க நன்றி கொத்து பரோட்டா.. இவ்வளவு நாட்கள் சென்னையில் இருந்தேன். அதான் உங்க விருதை உடனே பெற்றுக்கொள்ள முடியவில்லை.. அப்டியே கொத்து பரோட்டா ஒன்னு பார்சல் அனுப்புங்க.. ப்ளீஸ்..

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..//

வாங்க!!! வாங்க!!!
ஒன்னு என்ன நிறையவே
இருக்கு, வியாழக்கிழமை வாங்க!!!
நன்றி திவ்யாஹரி.

அன்புடன் மலிக்கா said...

மன்னிச்சிக்கோங்க மன்னிச்சிகோங்க நான் லேட்டு

அய் உனக்கும் விருதா. கிரீடம் பெரிசாயிருக்கு எந்தலை சின்னதாவுல இருக்கு இருந்தாலும் மாட்டிக்கிறேன்.

பூக்கொடுத்தேன் பொன் கொடுக்குறீங்க
நீங்க பெரியமனசுக்காறாங்க
சை கொ ப.

விருதுகள் வழங்கிய விதம் அருமைங்கோ.

[எத்துனதபா வந்தீக ஒருதபாவாவது சொன்னீங்களா விருதுகீத்துன்னு]

பெற்றுவர்களுக்கும் கொடுத்தவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..

யாருப்பா அங்கே!ஓடிப்போய் என் ராசவை என் ராசவை அழைச்சிட்டுவாங்கோஎனக்கு தந்த தங்ககிரீடம் அவர் தலைக்கு பொருத்தமாக இருக்கும்.

சைவகொத்துப்பரோட்டா said...

// அன்புடன் மலிக்கா said...
மன்னிச்சிக்கோங்க மன்னிச்சிகோங்க நான் லேட்டு

அய் உனக்கும் விருதா. கிரீடம் பெரிசாயிருக்கு எந்தலை சின்னதாவுல இருக்கு இருந்தாலும் மாட்டிக்கிறேன்....//

வாங்க!!!! வாங்க!!!!!!!
(அவ்வ்........நான் உங்களுக்கு
சொல்ல மறந்து விட்டேன் போல.......)
மன்னிக்கவும்......
மிக்க நன்றி.

VISA said...

வெளியூர் போயிருந்ததால இப்ப தான் கவனித்தேன். ஜோரா கை தட்டிடன்.

Anonymous said...

விருது வாங்குனவங்களுக்கு வாழ்த்துக்கள்.

எங்களுக்கெல்லாம் ஒரு ஆறுதல் விருதா எதாவது குடுக்க கூடாதா???

ம்ம்ம்ம் போங்க அண்ணாத்தை..

சைவகொத்துப்பரோட்டா said...

// VISA said...
வெளியூர் போயிருந்ததால இப்ப தான் கவனித்தேன். ஜோரா கை தட்டிடன்.//

வாங்க விசா!!!
ரைட்டு, அப்படியே உங்க
விருதையும் எடுத்துகோங்க,
நன்றி.






// எனது கிறுக்கல்கள் said...
விருது வாங்குனவங்களுக்கு வாழ்த்துக்கள்.

எங்களுக்கெல்லாம் ஒரு ஆறுதல் விருதா எதாவது குடுக்க கூடாதா???

ம்ம்ம்ம் போங்க அண்ணாத்தை..//

வாங்க!! தங்கச்சி,
இப்படி கோச்சுகிட்டா எப்புடி,
நாளை மறக்காம வாங்க
"பரோட்டா விருந்து" இருக்கு :))
நன்றி.

Praveenkumar said...

இவ்விருதினை தந்து எம்மை சிறப்பித்தமைக்கு எமது மனமார்ந்த நன்றிகள் தலைவா..!
என்றும் உங்கள் வாசக நண்பன் பிரவின்குமார். மெலும் வாழ்த்துகள் தெரிவத்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சைவகொத்துப்பரோட்டா said...

// பிரவின்குமார் said...
இவ்விருதினை தந்து எம்மை சிறப்பித்தமைக்கு எமது மனமார்ந்த நன்றிகள் தலைவா..!
என்றும் உங்கள் வாசக நண்பன் பிரவின்குமார். மெலும் வாழ்த்துகள் தெரிவத்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.//

வாங்க பிரவின், விருதை
எடுத்து கொண்டீர்களா!!
மிக்க நன்றி.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)