Sunday, February 21, 2010

ஆதலினால் காதல் செய்வீர்

அன்புக்குரிய
காதலியே

இரவினில் வெளியே
செல்லாதே

தடாகத்து அல்லிகள்
குழம்பி விடுகின்றன

ஒரே சமயத்தில் இரு நிலவுகளை
கண்டதால்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


என் தோட்டத்தில்
பூக்கள் வாடுவதில்லை
பூத்தவை எல்லாம்
நீ சிந்திய
புன்னகை பூக்கள்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


என் வீட்டு
நிலைக்கண்ணாடியும்
ரசம் இழந்துவிட்டது
உன்னை பாராமல்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கல்லென்றால்
செதுக்கி விடுவேன்

இரும்பென்றால்
இளக்கி விடுவேன்

பூவென்றால்
வண்டாவேன்

சொல்லடி
உன் இதயம்

கல்லா
இரும்பா
பூவா

********************************************************



அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

62 comments:

அன்புடன் மலிக்கா said...

ஓட்டும் போட்டு முதலவதாக வந்துட்டோமுல்ல!

தடாகம் குழப்பிப்போகாது
தாமரைக்கும் அல்லிக்கும் வித்தியாதம்
தெரியுமுல்ல..

[சும்மா சோக்குக்கு..]

மிக அழகாக இருக்கு வார்த்தை கோர்வைகள் ..

பனித்துளி சங்கர் said...

அனைத்தும் அருமை .
ஒரு புதிய சந்தோசம் . வாழ்த்துக்கள்

வெற்றி said...

super !

நாடோடி said...

கவிதைகள் அனைத்தும் அருமை...

settaikkaran said...

அட்டகாசமான கவிதை! பின்னுறீங்க!!!

அன்புடன் நான் said...

கவிதை சந்தோசமாவும் இருக்கு....... சந்தேகமாவும்...இருக்கு!!!

Chitra said...

கல்லா
இரும்பா
பூவா


.......எதுன்னு கண்டு பிடிச்சீங்களா? ஹி, ஹி,ஹி,....
கவிதை எல்லாம் அருமை.

Chitra said...

கல்லா
இரும்பா
பூவா


.......எதுன்னு கண்டு பிடிச்சீங்களா? ஹி, ஹி,ஹி,....
கவிதை எல்லாம் அருமை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// கல்லா
இரும்பா
பூவா ////

இரும்பைபோல கல்லாய் போன இதயத்தில் ஒரு பூ காதலாய் பூக்கிறதே !!

சரியா ...

கவிதை ரொம்ப நல்லாருக்கு .. கலக்கிட்டீங்க

அண்ணாமலையான் said...

சும்மா பின்னி எடுக்கறீங்க....

சைவகொத்துப்பரோட்டா said...

//அன்புடன் மலிக்கா said...
ஓட்டும் போட்டு முதலவதாக வந்துட்டோமுல்ல!//


வாங்க, வாங்க, தங்கள் வரவுக்கும், ஒட்டு அளித்தமைக்கும் அடியேனின் நன்றிகள் :))




//வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...
அனைத்தும் அருமை .
ஒரு புதிய சந்தோசம் . வாழ்த்துக்கள்//


எப்போதும் சந்தோசமாக இருங்கள் சங்கர், நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்கும்.

சைவகொத்துப்பரோட்டா said...

// வெற்றி said...
super !//


அப்படியா, மிக்க மகிழ்ச்சி வெற்றி, நன்றி.


//நாடோடி said...
கவிதைகள் அனைத்தும் அருமை...//


மிக்க நன்றி தங்கள் கருத்தை கூறியதற்கு, தொடர்ந்து வாருங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

//சேட்டைக்காரன் said...
அட்டகாசமான கவிதை! பின்னுறீங்க!!! //


மிக்க நன்றி நண்பா, ஏதோ நம்மால முடிஞ்சது :))



//சி. கருணாகரசு said...
கவிதை சந்தோசமாவும் இருக்கு....... சந்தேகமாவும்...இருக்கு!!!//



அப்படியா, என்ன சந்தேகம், சும்மாதேன், இரு வேறு தளங்களில் எழுதினேன், சந்தேகப்படகூடாது :))
ஹி...ஹி... நன்றி சி.கருணாகரசு.

சைவகொத்துப்பரோட்டா said...

// Chitra said...


.......எதுன்னு கண்டு பிடிச்சீங்களா? ஹி, ஹி,ஹி,....
கவிதை எல்லாம் அருமை.//


கண்டு கொண்டேன், கண்டுகொண்டேன், "பூ"தான், நன்றி சித்ரா.



// Starjan ( ஸ்டார்ஜன் ) said...


இரும்பைபோல கல்லாய் போன இதயத்தில் ஒரு பூ காதலாய் பூக்கிறதே !!

சரியா ...//


சபாஷ் ஸ்டார்ஜன், நீங்க சொன்ன இந்த கவிதை மிக அருமை, நன்றி நண்பரே.


கவிதை ரொம்ப நல்லாருக்கு .. கலக்கிட்டீங்க//

சைவகொத்துப்பரோட்டா said...

//அண்ணாமலையான் said...
சும்மா பின்னி எடுக்கறீங்க....//



நன்றி அண்ணாமலையாரே, உங்களின் தொடர் ஊக்கம், எனக்கு உற்சாகம் அளிக்கிறது, மீண்டும் நன்றி.

மரா said...

முதல் மற்றும் நான்காம் கவிதை சுமார் ரகம். இரண்டு மற்றும் மூன்றான் கவிதைகள் நன்று. என் அல்பேனிய நண்பர்கள் கூட இப்படி எழுதக்கூடியவர்களே. நன்றி.(ஓட்டு போட்டாச்சி)

Raghu said...

எல்லாமே ந‌ல்லாருக்கு பாஸ்:))

சைவகொத்துப்பரோட்டா said...

//மயில்ராவணன் said...
முதல் மற்றும் நான்காம் கவிதை சுமார் ரகம். இரண்டு மற்றும் மூன்றான் கவிதைகள் நன்று. என் அல்பேனிய நண்பர்கள் கூட இப்படி எழுதக்கூடியவர்களே. நன்றி.(ஓட்டு போட்டாச்சி)//


அடேங்கப்பா!!, பின்னிடீங்க, நல்ல விமர்சனம், நன்றி நண்பரே, தொடர்ந்து வாருங்கள்,
நன்றி உங்கள் கருத்துக்கும், ஓட்டுக்கும்.


//ர‌கு said...
எல்லாமே ந‌ல்லாருக்கு பாஸ்:)) //



நன்றி தலைவா, தொடர்ந்து உங்கள் கருத்துக்களை
எதிர் பார்க்கிறேன்.

ஸ்ரீராம். said...

ஆஹா....ஆஹா...

சைவகொத்துப்பரோட்டா said...

// ஸ்ரீராம். said...
ஆஹா....ஆஹா...//



ஓஹோ...அப்படியா....
நன்றி அண்ணா இரத்தின சுருக்கமான கருத்துக்கு :))

திவ்யாஹரி said...

கல்லா
இரும்பா
பூவா

எதுவாயிருந்தாலும் விடுறதா இல்லைல.. அப்புறம் என்ன நண்பா.. ஜமாய்..

மதுரை சரவணன் said...

en veettu nialai kannaadiyum rasam ilanthu vittathu unnnai paaraamal. /super / valththukkal.

சைவகொத்துப்பரோட்டா said...

//திவ்யாஹரி said...
கல்லா
இரும்பா
பூவா

எதுவாயிருந்தாலும் விடுறதா இல்லைல.. அப்புறம் என்ன நண்பா.. ஜமாய்.. //

ஆமா....ஆமா...விட மாட்டோமில்ல, நன்றி தோழி.

சைவகொத்துப்பரோட்டா said...

//Madurai Saravanan said...
en veettu nialai kannaadiyum rasam ilanthu vittathu unnnai paaraamal. /super / valththukkal.//




நன்றி சரவணன் உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும்.

புலவன் புலிகேசி said...

இன்னாமா ஃபீல் பன்றீங்க..நல்லாருக்கு தல..

சைவகொத்துப்பரோட்டா said...

// புலவன் புலிகேசி said...
இன்னாமா ஃபீல் பன்றீங்க..நல்லாருக்கு தல..//




நன்றி புலவரே, நீங்க எப்ப பீல் பண்ணப்போறீங்க :))

ஆர்வா said...

கவிதைகள் அருமையா இருக்கு. சில புகைப்படங்களை சேர்த்தீஙகன்னா
கவிதையின் அழகு இன்னும் கூடும்.

DREAMER said...

நல்லாருக்கு நண்பா...

-
ட்ரீமர்

சைவகொத்துப்பரோட்டா said...

// கவிதை காதலன் said...
கவிதைகள் அருமையா இருக்கு. சில புகைப்படங்களை சேர்த்தீஙகன்னா
கவிதையின் அழகு இன்னும் கூடும்.//


வாங்க, கவிதை காதலரே நன்றிகள் உங்கள் ஆலோசனைக்கும், கருத்துக்கும்.
(அடுத்த முறை படம் இணைத்து விடுகிறேன்)

சைவகொத்துப்பரோட்டா said...

// DREAMER said...

நல்லாருக்கு நண்பா...

-
ட்ரீமர்//


நன்றி ஹரீஷ், உங்கள் கருத்துக்கு.

விக்னேஷ்வரி said...

நல்ல முயற்சி. நல்லா வந்திருக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

// விக்னேஷ்வரி said...
நல்ல முயற்சி. நல்லா வந்திருக்கு.//



நன்றி விக்னேஷ்வரி, உங்கள் கருத்துக்கு, தொடர்ந்து வாருங்கள்.

Praveenkumar said...

கவிதைகள் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்....

சைவகொத்துப்பரோட்டா said...

//பிரவின்குமார் said...
கவிதைகள் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்....//



நன்றி பிரவின்குமார், தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

saro said...

ROMBA ROMBA ARUMAI KEEP IT UP

உண்மைத்தமிழன் said...

ம்.. கவிதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு..!

இதை அப்படியே காப்பி பண்ணி தண்டோராவுக்கு அனுப்பி வைங்க.. அவரும் பார்க்கட்டும்..!

Thenammai Lakshmanan said...

நாலாவது ரொம்ப அருமை சைவக்கொத்துப்பரோட்டா

க ரா said...

நல்லாத்தான் இருக்கு நாலும். அருமை நண்பரே.

சைவகொத்துப்பரோட்டா said...

// kumar said...
ROMBA ROMBA ARUMAI KEEP IT UP //



நன்றி குமார், தொடர்ந்து வாருங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ம்.. கவிதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு..!

இதை அப்படியே காப்பி பண்ணி தண்டோராவுக்கு அனுப்பி வைங்க.. அவரும் பார்க்கட்டும்..! //


நன்றி உண்மைத்தமிழன் அவர்களே, ரைட்டு அனுப்பிரலாம்.

சைவகொத்துப்பரோட்டா said...

// க.இராமசாமி said...
நல்லாத்தான் இருக்கு நாலும். அருமை நண்பரே. //



நன்றி ராம்.

Anonymous said...

//சொல்லடி
உன் இதயம்

கல்லா
இரும்பா
பூவா //

மென்மையான வரிகள்
மேலும் எழுதிட வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

//எனது கிறுக்கல்கள் said...
//சொல்லடி
உன் இதயம்

கல்லா
இரும்பா
பூவா //

மென்மையான வரிகள்
மேலும் எழுதிட வாழ்த்துக்கள்//



மிக்க நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்துக்கும். உங்கள் கவிதைகள் அனைத்தும் படித்தேன், அருமை.

மணிஜி said...

அவர் பெற்ற இன்பம் நானும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணம் அண்ணன் உண்மைத்தமிழனுக்கு..வாழ்த்துக்கள் நண்பரே!

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

//உங்கள் தளத்தை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும் இணையுங்கள்,
அதிகம் பேரை சென்றடையும் உங்கள் படைப்புகள், வாழ்த்துக்கள்.//


உங்கள் அறிவுரைக்கு நன்றி
கிறுக்கல்களுக்கு மேலும்
உங்களால் முடிந்த அறிவுரைகளை வழங்கவும்.

சைவகொத்துப்பரோட்டா said...

//தண்டோரா ...... said...
அவர் பெற்ற இன்பம் நானும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணம் அண்ணன் உண்மைத்தமிழனுக்கு..வாழ்த்துக்கள் நண்பரே!//



நம்ம கடைக்கு வந்து, கருத்து சொல்லி சென்ற நண்பர் தண்டோராவுக்கு நன்றி, தொடர்ந்து
வாருங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

//எனது கிறுக்கல்கள் said...
//உங்கள் தளத்தை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும் இணையுங்கள்,
அதிகம் பேரை சென்றடையும் உங்கள் படைப்புகள், வாழ்த்துக்கள்.//


உங்கள் அறிவுரைக்கு நன்றி
கிறுக்கல்களுக்கு மேலும்
உங்களால் முடிந்த அறிவுரைகளை வழங்கவும்.//



அடியேனின், சிறிய நினைவூட்டல் மட்டுமே மேலே கூறியது :)), மிக்க நன்றி உங்களின்
வருகைக்கு. (எனக்கு தெரிந்தவற்றை நிச்சயம் தெரிவிக்கிறேன்).

Anonymous said...

oru settaikara kuti payanin
Vannakangal..

Valtha Vayathilai
anallum valthukall..

wow simply super..

kavaithai onum onum
epo neenga yario kadal civathu pola eruku...
athargum Valthukal..

Alagana varthai korvaigal..

Valga valamudan.
V.v.s Group sarpaga
Complan Surya.
(varuthapadatha valipar sangam)

சைவகொத்துப்பரோட்டா said...

//Complan Surya said...
oru settaikara kuti payanin
Vannakangal..

Valtha Vayathilai
anallum valthukall..

wow simply super..

kavaithai onum onum
epo neenga yario kadal civathu pola eruku...
athargum Valthukal..

Alagana varthai korvaigal..

Valga valamudan.
V.v.s Group sarpaga
Complan Surya.
(varuthapadatha valipar sangam)//




நன்றி சூர்யா, ஆமா தினமும் காம்ப்ளான் குடிப்பீங்களா......ஹி.......ஹி..... சோக்கு...:))

ஆதி மனிதன் said...

நல்லாத்தான் இருக்கு. திருப்பி அடிச்சா பூவா இருந்தாதான் சேப்டி.

சைவகொத்துப்பரோட்டா said...

//ஆதி மனிதன் said...
நல்லாத்தான் இருக்கு. திருப்பி அடிச்சா பூவா இருந்தாதான் சேப்டி.//




ஆஹா.. நல்ல முன் யோசனை, நன்றி உங்கள் கருத்துக்கு.

மங்குனி அமைச்சர் said...

வணக்கம் சார்
எனக்கு கவிதைக்கு எல்லாம் கருத்து சொல்லற அளவுக்கு ஞானம் இல்ல. (எல்லார் கமென்ட் லையும் நீங்க இருக்கிக இப்பதான் உங்கள புடிச்சேன்) நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்

சைவகொத்துப்பரோட்டா said...

//மங்குனி அமைச்சர் said...
வணக்கம் சார்
எனக்கு கவிதைக்கு எல்லாம் கருத்து சொல்லற அளவுக்கு ஞானம் இல்ல. (எல்லார் கமென்ட் லையும் நீங்க இருக்கிக இப்பதான் உங்கள புடிச்சேன்) நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்//



ரைட்டு அமைச்சரே, தொடர்ந்து வாருங்கள், நன்றி.

தேவன் மாயம் said...

ஒரே சமயத்தில் இரு நிலவுகளை
கண்டதால்///

ஆகா!! பின்னுறீங்க!!

சைவகொத்துப்பரோட்டா said...

//தேவன் மாயம் said...
ஒரே சமயத்தில் இரு நிலவுகளை
கண்டதால்///

ஆகா!! பின்னுறீங்க!!//


நன்றி டாக்டர்.

lolly999 said...

கொத்து பரோட்டா மொத்தத்தில் மிகவும் நல்லாக இருக்கிறது.

சைவகொத்துப்பரோட்டா said...

//lolly999 said...
கொத்து பரோட்டா மொத்தத்தில் மிகவும் நல்லாக இருக்கிறது.//



மிக்க நன்றி, அப்ப அடிக்கடி வந்து சாப்பிடுங்க :))

r.v.saravanan said...

கவிதைகள் அருமை

எனக்கு தோன்றிய கவிதை இங்கு
தந்திருக்கிறேன்


அன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்
விண்மீன்களும் நானும்

அமாவாசையன்று வாராது வெண்ணிலவு அதனாலென்ன இதோ உலா வருகிறது என் நிலவு

r.v.saravanan
kudanthaiyur.blogspot.com

சைவகொத்துப்பரோட்டா said...

// r.v.saravanan kudandhai said...
கவிதைகள் அருமை

எனக்கு தோன்றிய கவிதை இங்கு
தந்திருக்கிறேன்


அன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்
விண்மீன்களும் நானும்

அமாவாசையன்று வாராது வெண்ணிலவு அதனாலென்ன இதோ உலா வருகிறது என் நிலவு

r.v.saravanan
kudanthaiyur.blogspot.com//

ஆஹா!!!
உங்களின் கவிதை அழகு!!!
வாழ்த்துக்கள் சரவணன், நன்றி.

cheena (சீனா) said...

அழகா ஒரு காதல் கவிதை - ஆதலினால் காதல் செய்வீர் - நன்று நன்று

நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா

சைவகொத்துப்பரோட்டா said...

// cheena (சீனா) said...
அழகா ஒரு காதல் கவிதை - ஆதலினால் காதல் செய்வீர் - நன்று நன்று

நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா//

அதேதான்!!! நன்றி அய்யா.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)