யாராக இருக்கும் யோசித்தவாறே ஹலோ என்றேன்.
அருண், விஷ்வா பேசறேன் என்றான்.
ஏய் விஷ்வா என்ன ஆச்சு உனக்கு இரண்டு நாளா ஆளையே காணோம்,
போன் செய்தாலும் எடுக்க வில்லை.
சொல்றேன் அருண் என் வீட்டுக்கு வாயேன் என்றான்.
மாலையில் வருவதாக கூறினேன்.
மாலை சொன்னே நேரத்துக்கு அவன் வீட்டு கதவை தட்டினேன்,
யாரோ ஒரு பெண் கதவை திறந்தாள்.
சாரி விஷ்வா வீடு இதுதானே...
ஆமா அருண் உள்ள வா என்றபடியே விஷ்வா வந்தான்.
கதவை திறந்த பெண் எனக்கு வணக்கம் சொல்லிவிட்டு உள் அறைப்பக்கமாய் நகர்ந்தாள்.
விஷ்வா என்னடா இது இப்போ பொண்ணுங்களை வீட்டுக்கே கூட்டிட்டு வர ஆரம்பிச்சுட்டியா.
உஷ்...அருண் இது நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணுடா என்றான் விஷ்வா. அவங்க அம்மா கூட கோவிலுக்கு வந்தவ அப்படியே
என்னை பாத்துட்டு போலாம்ன்னு வந்தா.
எப்படா கல்யாணம், சொல்லவே இல்லை என நான் அதிர்ந்தேன்.
சாரி அருண், என் கடைக்கு அடிக்கடி வர கஸ்டமர் இந்த பொண்ணு, அப்படியே பேசி பழக்கம் ஆச்சு. ஆனா இவ, என்னை ரொம்ப தீவிரமாய் காதலிச்சிருக்கா. நான் அது தெரியாம இவளையும் டைம் பாஸ் கேசுன்னு நினைச்சி கொஞ்சம் அசால்ட்டா
இருந்திட்டேன். இவ தன் காதல சொன்னப்ப நான் ஒத்துக்கல, அப்பறம் அவங்க அப்பாகிட்ட விசயத்த சொல்ல அந்த ஆள் கொஞ்சம்
ஆள் பலம் உள்ளவர்போல, என்னை தூக்கிட்டு போய் மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் யோசிச்சி பார்த்தேன், இந்த அளவுக்கு தீவிரமா நம்மளையும் ஒரு பொண்ணு காதலிக்கும்போது அவளை கல்யாணம் செய்து கொள்வதுதான் சரின்னு பட்டதால ஒத்துகிட்டேன்.
ஆனா, இவளோட மாமா பையனுக்கு இவ மேல ஆசை, இவளுக்கு
என் மேல் காதல். எங்க கல்யாணத்தை தடுக்க அந்தப்பையன் முயற்சி செய்றதால யாருக்கும்
சொல்ல முடியலை. நாளைக்கு வடபழனி கோவில்ல கல்யாணம்,
முடிச்சிட்டு அப்படியே மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணப்போறோம்.
இதையே அழைப்பா வச்சுக்கிட்டு வந்திரு என்றான்.
மறு நாள் விஷ்வாவின் திருமணம் நடக்கும் முன்பே அந்தப்பையன்
சொந்தங்களுடன் வந்து தகராறு செய்ய, விசயம் போலிஸ் ஸ்டேசன் வரை சென்றது. இந்த களேபரம் நடக்கும்போது, என் மொபைல் ரிங்கி கொண்டே இருந்தது.
அழைப்பது யாரென்று பார்க்கும் நிலையில் இல்லை எனவே காலை
கட் செய்தேன். அப்புறம் ஒரு வழியாக சமரசம் செய்யப்பட்டு காவல்
நிலையத்தில் திருமணம் நடந்தது.
இந்த களேபரங்கள் முடிந்த பின்னர் அழைத்தது யாரென பார்த்தேன்.
அட ஜோதி! உடனே அவளுக்கு கால் செய்தேன்.
**********************************************
ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவி போல் அப்பா சொல்லப்போகும் விசயத்தை கேட்க மிக ஆவலாய்
செவிகளை கூர்மையாக்கி கொண்டேன்.
மாப்பிள்ளையைபத்தி வந்த தகவல்கள் எல்லாம் ரொம்ப திருப்தியா
இருக்கு, எனக்கு சம்மதம் ஜோதி என்று அப்பா சொன்னவுடன் ஆனந்தத்தில்
துள்ளிகுதிக்க வேண்டும் போல் இருந்தது எனக்கு.
ஒரு மாதம் ஓடி விட்டது, விஷ்வா கால் பண்ணியிருந்தான்,
எங்கள் கல்யாண பத்திரிக்கை பிரிண்ட் செய்தாகிவிட்டதாம். நானும்
அவனும் சென்று அழைப்பிதழை வாங்கி மீண்டும் ஒருமுறை சரி
பார்த்தோம்.
விஷ்வா என்ற அருண்விஷ்வாவிற்கும், ஜோதிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்...என்று தொடங்கி
அனைத்தும் சரியாக இருந்தது.
எனது சைடில் முதல் அழைப்பை என் தோழி சுதாவிடம் இருந்து
ஆரம்பித்தேன்.

Picture Thanks:alter...names.com
விஷ்வாவின் பி.கு: பள்ளி காலத்தில் என் பெயரும், விஷ்வாவின் பெயரும் ஒன்றாக
இருந்ததால் எங்களுக்குள் செய்த ஒப்பந்தத்தின்படி விஷ்வா என் பெயரின் முன் பாதியான "அருண்" என்றே அழைப்பான்.
அழைப்பு முடிந்தது.