Friday, November 12, 2010

மூன்று நூறு கூட்டல் அறுபத்தி ஐந்து

நம் நுரையீரலில் இமை முடி போன்ற மெல்லிய முடி இருக்கிறது. இதன் பணி நம் நுரையீரலில் தங்கும் சளியினை அப்புறப்படுத்துவது. தொடர்ந்து சிகரெட் புகைப்பவர்களுக்கு, இந்த முடியானது அதிகப்படியான கார்பனால் பாதிக்கப்படுகிறது. ஒரு வருடம் புகைப்பதை நிறுத்தினால், இந்த முடிகளில் படிந்துள்ள கார்பன் நீங்கி இவை தன் கடமைகளை செவ்வனே
செய்யும்.

உங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆகி விட்டதா, ஆம் என்றால் பின்வரும் டிப்ஸ் உங்களுக்க்தான்:

ஒரு வயது ஆன குழந்தைக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் ரொட்டி போன்றவை கொடுக்கலாம்.

இனிப்புகளை கொடுத்து பழக்கப்படுத்த வேண்டாம்.

நம்மைப்போல் ஒரே நேரத்தில் அவர்களால் இலைசாப்பாடெல்லாம் சாப்பிட
முடியாது. அதனால் ஒரு நாளைக்கு சிறுது சிறிதாக நான்குஅல்லது ஐந்து முறை வருமாறு உணவை
பகிர்ந்து கொடுக்கவும்.

காபி, டீ, சாக்லேட் போன்றவற்றை கொடுப்பதை தவிர்க்கவும்.

இப்போ ஏன் இந்த தகவல்லாம் என நினைக்கிறவங்களுக்கு இன்னுமா
புரியல பாஸ், நம்ம கடை ஆரம்பிச்சு இன்னையோட ஒரு வருஷம்
ஆச்சு. கடந்த வருடம் (12 .11. 2009 ) இதே நாள்லதான் கடை திறக்கப்பட்டது.

பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஸ்பெசல் பரோட்டாக்கள் சாப்பிடுங்க.



இலவச இணைப்பா இந்த கேக் எடுத்துக்கோங்க.

ஆச்சா...

இந்தக்கடை போட தளம் கொடுத்த blogger.com ,கஸ்டமர்ஸ்
ஆகிய நீங்கள் இன்ட்லி, தமிழ்மணம், திரட்டி, உலவு, தமிழ்வெளி, tamil blogger மற்றும் அனைவருக்கும் எனது நன்றிகள்.

Saturday, November 6, 2010

உத்தமபுத்திரன் - ந.சு.ச.வெ

சிவா மாமா (தனுஷ்) வாங்கி வரும் முகூர்த்தப்புடவைக்காக நம்ம ஸ்ரேயா காத்து இருக்காங்க. இந்த படத்துல ஜெனிலியாதான
ஹீரோயின்னு நீங்க நினைக்கிற மாதிரிதான் நானும் நினைச்சேன்.
(நான் கூட தியேட்டர் மாறி வந்துட்டோமோன்னு நினைச்சேன்!)
ஆனா வீட்ல அரேன்ஜ் பண்ற கல்யாணம் பிடிக்காம, காதலிச்சவரை மாமா தனுஷ் உதவியோட குடும்பத்தாருக்கு தெரியாம ரகிசயமா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கறதோட ஸ்ரேயாவின் பணி ஓவர்.

இதனால் தனுஷோட குடும்ப மெம்பர்ஸ் எல்லாம் அவர வீட்டை விட்டு வெளியில்
அனுப்புறாங்க. நண்பர்களுடன் தங்கும் தனஷ் விடுமுறையில் ஊருக்கு பயணம் போகையில் அவர்களின் நண்பன் ஒருவன் சோகத்தில் இருக்க . விசாரிப்புக்குப்பின் அவரோட காதலிக்கும் வேறு நபருக்கும் கல்யாணம், என்பது தெரிய வர மண்டபத்தில் நுழைந்து அவரை தூக்கி வந்தால்,
அந்தப்பெண் ஜெனிலியா! (மண்டபம் மாறி சென்று விட , பெண்ணும் மாறி விடுகிறது)
ஜெனிலியாவிற்கும் அந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை. நான் கடவுள் மொட்டை முருகன், தனுஷ் அன்ட்கோவை துரத்தும் பொழுது
லாரியில் அடிபட்டு கோமா ஸ்டேஜிற்கு போகிறார்.


அப்புறம் ஜெனிலியாவை தன் வீட்டிலே, பெரியப்பா பாக்கியராஜின் குருஜிஅனுப்பிய பெண் என பொய் சொல்லி
தங்க வைக்கிறார் தனஷ். பின்னாலேயே தானும் வீட்டாரை சமாதன படுத்தி வீட்டுக்குள் நுழையும் தனுஷ்
ஜெனியை லவ்வுகிறார். இதனிடையே குருஜியை பாக்யராஜ் சந்திக்கும்போது குட்டு வெளிப்பட, ஜெனியின் உறவினர்கள் ஜெனியை தூக்கி வந்து அவரை
வீட்டுச்சிறை வைக்கிறார்கள்.

பெற்றோரை இழந்த ஜெனியின் சொத்தை அடைவதற்காக அவரை, தங்கள் மகனுக்கு கல்யாணம் முடிக்க அண்ணன் ஆஷிஸ் வித்யார்தியும் தம்பி ஜெயபிரகாஷும் போட்டி போடுகிறார்கள். இரு குடும்பத்துக்கும் பொதுவான ஆடிட்டர்(!) விவேக்.

ஜெனியை மீட்பதற்காக விவேக்கிடம்
உதவியாளராக சேரும் தனுஷ், ஜெனியால் முட்டிக்கொள்ளும் அவரின் இரண்டு குடும்பத்தையும் சேர்த்து வைக்க தன் குடும்பத்தாரை அங்கே வர வைத்து ஒரு நாடகாமாடி அவர்களை சேர்த்தும் வைக்கிறார். அதன்பின் ஜெனியை கல்யாணம் செய்ய முயற்சிக்கிறார்.

பாக்கியராஜ், விவேக், தனுஷ், வித்யார்தி, ஜெயபிரகாஷ், சுந்தர்ராஜன், மயில்சாமி இதோட சேந்து ஒரு பட்டாளமே அடிக்கிற லூட்டி இருக்கே, சிரிப்புக்கு பஞ்சமில்லை!

இசை விஜய் ஆண்டனி, ஒரு பாட்டு மட்டும் எனக்கு பிடிச்சது.
தெலுங்கு படமான "ரெடி"யின் ரீமகேதான் இது. இயக்கம்:மித்ரன் ஜவஹர்.

சிரித்து விட்டு வரலாம்!

உத்தமபுத்திரன் : நகைச்சுவை சரவெடி! Picture Thanks:indaiglitz

Monday, November 1, 2010

காதல் வந்தாலே...

என்னை விட
மெல்லிய மலரா
அதிசயித்தது
நீ சூடிக்கொண்ட
மல்லிகை.
*********************************************

ஸ்வரங்கள்
வசப்படவில்லை
அதனாலென்ன
சங்கீதமாய் பேசும்
உன் இதயம்
என் வசம்.


********************************


என் வீட்டு பூச்செடிகளுக்கெல்லாம்
உன் மீது கோபமாம்
அவைகளை விட
சிறப்பாய்
புன்னகைப்பூக்களை
சிந்திக்கொண்டிருக்கிறாயே!



******************************************************

Picture Thanks:photo.net , Photographers direct.com, commentsxo.com

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)